யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/15

கட்டட உறுதி, சுகாதார சான்றிதழ் தரதலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

கட்டட உறுதி, பூச்சிக்கொல்லி, கிருமிநாசினி தெளித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சான்றிதழ் தர, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி வளாகத்தை முறைப்படி சுத்தம்செய்ய வேண்டும். நோய்க்கிருமிகள் பரவாத வண்ணம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வகுப்பறைகளின் அனைத்து சுவர்களின் உறுதி தன்மையை கண்டறிய வேண்டும்.

பள்ளி கழிவறைகள் மூலம் தொற்று நோயும் பரவாமல் பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, 'குளோரின்' தெளித்து பாதுகாப்பான குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும்.மின் சாதனங்களை பரிசோதனை செய்து நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை சுத்தம் செய்து, பாத்திரங்களை சுத்தம் செய்த பின் சமையல் செய்ய வேண்டும். இதுபோன்ற நட வடிக்கைகளை மேற்கொண்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் சான்றிதழ் தர வேண்டும்.

மேலும்,dirsedu@nic.in, dsetamilnadu@gmail.comஎன்ற இ - மெயில் முகவரியில் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பருவத் தேர்வு மறு தேதி: சட்டப் பல்கலை. அறிவிப்பு.

மழை, வெள்ள பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.வெள்ள பாதிப்பின் காரணமாக பிற பல்கலைக்கழகங்களைப் போல் சட்டப் பல்கலைக்கழகமும் அதன் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தது.


பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் ஆற்றல்சார் சட்டப் பள்ளிக்கான 3 ஆண்டு ஹானர்ஸ், 5 ஆண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புத் தேர்வுகள், இணைப்புக் கல்லூரிகளுக்கான 3 ஆண்டு, 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதிகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின்www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் இந்த விவரங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மழை காரணமாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைகழக B.Ed.தேர்வு ஒத்திவைப்பு - புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதிகள் அறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமையும் தேர்வுகள் நடக்கிறது

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமையும் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


வெள்ளப்பாதிப்பு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படவிருந்த மற்றும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டிருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வருமாறு வேறு தேதிகளுக்கு மாற்றியமைக்கப்படுகின்றன. பழைய தேர்வு தேதியும், மறு தேதியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் டிச.14-இல் திறப்பு

மழை, வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை (டிச.14) திறக்கப்பட உள்ளன.இதையடுத்து, இந்த மாவட்டங்களில் பள்ளிகளை நடத்தப்படும் நிலையில் வைப்பதற்கான ஆயத்தப் பணிகளையும், தூய்மைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவர் வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-


பலத்த மழை காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை முடிந்து டிசம்பர் 14-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.அனைத்துப் பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து வகுப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணி, பிற பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கழிவறைகளை பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்துவதோடு, கொசுமருந்து புகையும் அடிக்கப்பட வேண்டும்.அனைத்து சத்துணவு மையங்களும் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். 

அந்த மையங்களில் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். சமையலுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட பொருள்களும், குடிநீரும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிநீரில் குளோரின் மாத்திரைகளைக் கலக்க வேண்டும்.பள்ளிகள் டிசம்பர் 14-ஆம் தேதியன்று நடத்தப்படும் நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்துத் தலைமையாசிரியர்களிடமும் உறுதிமொழி கடிதத்தைப் பெற்று பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு டிசம்பர் 13-ஆம் தேதி அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து 18 வரை நீட்டிப்பு.

தமிழக சுங்கச் சாவடிகளில் வருகிற 18 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த !ரு மாதமாக பெய்த பெரு மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.


சென்னைக்கு குடிநீர் அளிக்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள நீர் சென்னையை மூழ்கடித்தது. இதனால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வருவதால் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்று இன்றுவரை (டிச.11) கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், இன்னும் சென்னை பழைய நிலைக்கு திரும்பாததால் மேலும் வருகிற 18 ஆம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

வாகனங்களுடன் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நிவாரண பொருள்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிகமான மழை வரும் பிப்ரவரி வரை தொடரும்: ஐ.நா. தகவல்

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் மேலும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படும் என்று ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 - 2016 ஆண்டுக்கான எல் நினோ பாதிப்பு தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் , மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், கம்போடியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகள் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் வரை தென்னிந்தியா, இலங்கை, மாலத்தீவில் சராசரிக்கும் அதிகமான மழையும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதிகளில் அதிக மழை வெள்ளப்பெருக்கு ஏற்படும் வேளையில் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பசிபிக் தீவுகளில் கடுமையான வறட்சி ஏற்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும்.

HEREAFTER ALLTHE DEPARTMENTAL EXAMS WILL BE CONDUCTED ON LINE ONLY THROUGH PRIVATE AGENCYமூத்த தோழர்கள் கவனத்திற்கு !"இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும். அதுவும் அதற்கான தனியார் AGENCY நியமனம்செய்யப்பட்டு அதன் மூலம் நடத்தப்படும் என்று இலாக்கா அதிகாரபூர்வமாக அறிவிப்பு. 


"இனி எப்போதுமே பேனா பென்சில் தேவை இல்லீங்கோ !மூத்த தோழர்கள் கணினியில் எல்லாம் செய்ய பழகுங்கோ !WEB SITE தெரியாது .. EMAIL தெரியாது என்று சொல்லும் மூத்த தோழர்களிடம் இதைப் பார்க்கும் இளைய தோழர்கள் எடுத்துச் சொல்லுங்கோ !ஊதியக் குழு பரிந்துரைப் படி EB CROSSING தேர்வு வச்சா கூட இனி கணினியில் தானுங்கோ !மோடியின் DIGITAL INDIA திட்டம் வந்துவிட்டதுங்கோ!

வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தென்கடலோரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.


கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ளன. வழக்கமாக டிசம்பர் மாத மத்தியில், காற்று வீசும் திசையின் காரணமாக மழையின் தன்மை மாறுபடும். அந்த வகையில் தற்போது வடதமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்து, தென் தமிழகத்தில் தற்போது பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் குமரிக்கடலை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து மறைந்த நிலையில், தற்போது குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடதமிழகத்தில் இரு தினங்களும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.நேற்று , தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, ஸ்ரீ வைகுண்டத்தில் 9, திருச்செந்தூரில் 7, நாகை, நான்குநேரியில் -5, ராதாபுரத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

TNTET -2013:தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்ற அனைத்துஆசிரியர்களின் கவனத்திற்கு...

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம் 
நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....


அடுத்த இரண்டாம் கட்ட உண்ணா விரத கூட்டம் வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதிநடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது…

இது போராட்டம் அல்ல உண்ணாவிரத கூட்டம என்பதை மீண்டும் வலியுறுத்தி தெரிவித்துகொள்கிறோம்… .
நம் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை அணுக போகிறோம்… .
அன்று தீர்மானங்கள் நிறைவற்றப்படும்… இதுதான் மரபு….மரபை மீறி செய்யும் எந்த ஒரு முயற்சியும் பலன் தராது என்பதை அனைவரும்அறிவோம்…
அனைவரின் வேண்டு கோளிற்கிணங்கவும், அனைவரும் வசதியாக ,தவறாது கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினாலும் ஞாயிற்று கிழமை பெறப்பட்டுள்ளது.. .
எனவே அனைவரும் தவறாது தன் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்…

நாம் எத்தனை பேர் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை நம் வருகையின் மூலமேஅரசுக்கு உணர்த்த முடியும்… 
நேர்மறையான செயல்பாடுகளால் அரசாங்கத்தை நாடுவோம்…
மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...
அதை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்வோம்…
நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்…
தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்…
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்...

இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி : 94426 91704
திருமதி. லாவண்யா : 90432 66059
திருமதி. பானு : 98940 35724
திரு.சக்தி : 97512 68580
திரு.ராஜபாண்டி : 99433 73380
திரு. தினேஷ் : 99427 33221

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

11/12/15

மாத சம்பளம் பெறுபவர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடன் வழங்குகிறது கனரா வங்கி!

இது தொடர்பாக கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் தேவையான இடங்களில் நடமாடும் ஏ.டி.எம். வசதி கடந்த 4-ம் தேதி முதல் செயல்படுகிறது.எங்கள் வங்கி மற்றும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ள வசதியாக 40 பி.ஓ.எஸ். மொபைல் எந்திரங்கள் உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் கையேந்தி சாதனங்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறது.


மாத சம்பளம் பெறும் நபர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடனாக வழங்கப்படும்.வீடு, கார் பழுது செய்ய அதன் மதிப்பில் 10 சதவீதம் தொகை கடனாக எந்த பரிசீலனை கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும்.

நவம்பர், டிசம்பர் மாத தவணை தாமதமாக கட்டுபவர்களுக்கு அபராத வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.சேதமடைந்த, தொலைந்த ஏ.டி.எம். அட்டைதாரர்களுக்கு புதியகார்டுகள் இலவசமாக வழங்கப்படும். நுகர்வு கடன்கள் ரூ.10 ஆயிரம் வரை எந்த பிணையங்களும் இல்லாமல் வழங்கப்படும். அப்பல்லோ முனீச் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இயங்கி வரும் சுகாதார காப்பீட்டுத் தீர்வுகளை துரிதமாக பெற உதவப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

இலவச வாகன பழுது பார்ப்பு முகாம்கள்: இடங்களை அறிவித்தது தமிழக அரசு

தமிழக அரசு அறிவித்துள்ள வாகன பழுது பார்ப்பு இலவச முகாம்கள் நடைபெறும் இடங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த முகாம் நாளை முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தப் பட்டியலில் மோட்டார் வாகன நிறுவனங்களின் முகவர்களாக உள்ளவர்களின் கடையின் பெயர், முகவரி, எந்த நகரத்தில் உள்ளது, முகவரின் செல்லிடப்பேசி, லேண்ட்லைன் எண் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனங்களை பழுது பார்ப்புக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால், பட்டியலில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட முகவரிடம் பேசாலம். பழுது பார்க்கும் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கிறதா, எத்தனை மணிக்கு வரலாம் போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இதனால், வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்.இந்தப் பட்டியல் தமிழக அரசின் இணையதளத்தில் (http://www.tn.gov.in/sta/service_centres_2wheeler.pdf) வெளியாகியுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

புதுச்சேரி: பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவம்பர் 14-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குழந்தைகள் தின விழா தொடர் மழையால் ஒத்தி வைக்கப்பட்டு கம்பன் கலையரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது.கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்றார். அமைச்சர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா முன்னிலை வகித்தார்.குழந்தைகள் தினப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:


பள்ளிகளுக்கு பிள்ளைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற திட்டத்தை கடந்த 2001-ம் ஆண்டு அரசு அறிமுகம் செய்தது. இதனால் இடைநிற்றல் குறைந்துள்ளது.பள்ளிகளில் மாணவர்கள் தவறு செய்யும் போது, ஆசிரியர்கள் கண்டித்தால், பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக நன்கொடை தந்து படிக்க வைக்கிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் அரசு இலவசமாக கல்வி தருகிறது.குழந்தைகள் எப்படி படிக்கின்றனர் என ஆசிரியர்களை அணுகி பெற்றோர் கேட்க வேண்டும்.அண்மையில் துவக்க கல்வி ஆசிரியர் பணியிடங்களில் 425 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களே தேர்வு செய்யப்பட்டனர். விரைவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இன்றைய மாணவர்கள் அறிவுத்திறனில் படுசுட்டியாக உள்ளனர். ஆனால் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை படித்தால், சிறந்த மனிதர்களாக உருவாகலாம்.கல்வியோடு நுால்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண் சிசுக் கொலை புதுச்சேரியில் இல்லை. இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 1000-க்கு 42 என்ற விகிதத்தில்உள்ளது. புதுச்சேரியில் 1000-க்கு 17 மட்டுமே உள்ளது.அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகள் ஆரோக்கியத்துக்காக சத்தான உணவுகள் தரப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் கிளை மருத்துவக்கல்லுாரி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக 78 ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மாணவ, மாணவியருக்கு பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவர்கள் அண்மையில் முடிந்த மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கு அதிகம் தேர்ச்சி பெற்றனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் 2014--15-ம் கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர் களுக்கு முறையே 50 ஆயிரம்,30 ஆயிரம் , 20 ஆயிரம் ரூபாய் என 77 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.மாநில சிறந்த படைப்பாளிக் குழந்தைகள் விருதும் 16 பேருக்கு தரப்பட்டது. குழந்தைகள் தின போட்டியில் வென்ற 153 பேருக்கும் பரிசளிக்கப்பட்டது.அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குநர் கிருஷ்ணராஜ், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். இணை இயக்குநர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

டிச.,15ல் திருவள்ளூவர் பல்கலை., தேர்வு

.மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருவள்ளூவர் பல்கலை., தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி துவங்கி ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறும் எனபல்கலை., பதிவாளர் (பொறுப்பு) அமல்தாஸ் தெரிவித்துள்ளார்.தேர்வு அட்டவணையை பல்கலை., இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு பெயர் பட்டியல்; டிச.,15 வரை கால அவகாசம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கெனவழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. 

அப்பணிகளை நவ., 30 முதல் டிச., 9ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மழையால் பணிகள் முடிக்கப்படவில்லை.இதனால், டிச., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிழைகள் இன்றி, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகளுக்கு மறு தேதி அறிவிப்பு

தொடர் மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல்கல்லூரி பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மழை, வெள்ள பாதிப்பால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக, இப்போது சனி,ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. பருவத் தேர்வின் முந்தைய தேதிகள், மாற்றியமைக்கப்பட்ட புதிய தேதிகளின் விவரங்கள் அடங்கிய அட்டவணை:
CLICK HERE

சென்னையில் பள்ளிகளை திறப்பது எப்போது?- அரசிடம் நீடிக்கிறது குழப்பம்

சீரமைப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்வதால் சென்னையில் வரும் 13-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடியிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். ஆனால், 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தாவது:


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் பள்ளிகளில்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மறு குடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர், பள்ளிகள் சுத்தப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களின் பாதுகாப்பும், சுகாதாரமும் உறுதிபடுத்தப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்துமாறு சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டு நாட்களில் அப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.அதுமட்டுமல்லாது, மழை வெள்ளத்தில் பள்ளிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்காக டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளிக்கூடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.அந்த முகாம்களில் சான்றிதழ்களை தொலைத்தவர்கள் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பயணடையலாம்.சுத்தப்படுத்தும் பணி துவங்காததாலும், பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாலும் 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.

பள்ளிக்கல்வி - சான்றிதழ் இழந்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பம்

MADRAS UNIVERSITY - வெள்ளத்தால் சான்றிதழ் இழந்தவர்கள் புதிய சான்றிதழ்கள் பெற விண்ணப்ப படிவம்

10/12/15

மருத்துவ நுழைவுத்தேர்வுசி.பி.எஸ்.இ., அறிவிப்பு

மருத்துவ நுழைவுத்தேர்வுசி.பி.எஸ்.இ., அறிவிப்பு
எய்ம்ஸ்' உட்பட, மத்திய மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கான மருத்துவ நுழைவுத்தேர்வு, அடுத்த ஆண்டு, மே 1ம் தேதி நடக்கும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

'ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும், மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கானபொது நுழைவுத்தேர்வு, வரும் 2016, மே 1ம் தேதி நடக்கும். அதற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மூன்றாம் வாரத்தில் வெளியாகும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சி திருத்தியமைப்பு: இயக்குநர் உத்தரவு

நடப்பு கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
நடைமுறையிலுள்ள 10ம் வகுப்பு அறிவியல் பாட நூலின் 2015ம் கல்வியாண்டிற்கான திருத்திய பதிப்பில் பாடநூல் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் ஆலோசனையின்படி பாடநூல் தயாரிப்பு குழு அறிவியல் செய்முறை பயிற்சிகளை திருத்தியமைத்தது.

திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிக்கான பட்டியல் நடப்பு கல்வியாண்டிற்கான தமிழ் வழி அறிவியல் பாடநூல் செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 326, 345லும், ஆங்கில வழிக்கான செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 311, 332லும் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிகளின்படி கற்பிக்கவும், இதனை கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரண நிதிக்காக கணக்கெடுப்பு தொடக்கம்: குடும்ப அட்டை-வங்கி கணக்கு புத்தகம் இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம்

வெள்ள நிவாரண நிதிவழங்குவதற்கான கணக்கெடுப்பு தொடங்கியது. குடும்ப அட்டை-வங்கி சேமிப்புகணக்கு புத்தகம்இல்லாவிட்டாலும்,
இதுகுறித்த தகவலை கணக்கெடுக்கும் அதிகாரியிடம்தெரிவித்தால் போதும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
மழை-வெள்ளம் பாதிக்கப்பட்டுகுடிசை வீடுகளைஇழந்தோருக்கு ரூ.10 ஆயிரமும், நிலையான வீடுகளில்வசித்து மழை-வெள்ளத்தால் பாதித்தோருக்குரூ.5 ஆயிரம்அளிக்கப்படும் என்றும் அவர்களுக்கு 10 கிலோ அரிசி, விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்படும் என்றும்முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லிசெவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவல்கள்:
வெள்ள நிவாரண கணக்கெடுப்புகளப் பணியில்21 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சென்னைமாவட்டத்தின் 10 வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். பணிகளை மேற்பார்வையிடஒரு சார்ஆட்சியர், 21 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 21 துணைஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடும்ப அட்டையை இழந்தோருக்கு...: வீடு வீடாகச்சென்று கணக்கெடுப்புப்பணி மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் போது பொதுமக்கள் தங்களதுகுடும்ப அட்டை, வங்கி கணக்குபுத்தகம் ஆகியவற்றைகாண்பிக்க வேண்டும். இவை சேதம்அடைந்திருந்தாலோ அல்லது அடித்து செல்லப்பட்டிருந்தாலோ தகவலை மட்டும் கணக்கெடுக்கும் அலுவலர்களிடம்தெரிவித்தால் போதும்.

புதிதாக கணக்கு தொடங்கப்படும்: பாதிக்கப்பட்டோருக்கு வங்கி சேமிப்புகணக்கு இல்லாவிட்டால், தனியாக சேமிப்புக்கணக்கு தொடங்கப்படும். வீடுகள் பூட்டப்பட்டுஇருந்தால், கணக்கெடுக்கும் அலுவலர் அந்த வீட்டினைமறுகணக்கீடு என குறிப்பார். பிறகு, மீண்டும்கணக்கீடு செய்யப்படும். சென்னை மாவட்டத்திலுள்ளஅனைத்து பகுதிகளிலும்100 சதவீதம் முழுமையான கணக்கீடு பணி மேற்கொள்ளப்படும். எனவே, வெள்ளநிவாரண கணக்கெடுப்புப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என்றார்.

பள்ளிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றநடவடிக்கை எடுக்கவேண்டும் எனபள்ளிக் கல்விஇயக்ககம் உத்தரவிட்டுள்ளதுஇதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குபள்ளிக்
கல்விஇயக்ககம் செவ்வாய்க்கிழமைவெளியிட்ட சுற்றறிக்கை:-
மழை, வெள்ளத்தால் அதிகபாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் திறக்கப்படும்நிலையில், வெள்ளநீர் சூழ்ந்துள்ளபள்ளிகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளுடன்இணைந்து வெள்ளநீரை வெளியேற்றதேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும்.
அதோடு, பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளைச்சுற்றி பிளிச்சிங்பவுடரைத் தெளிக்கவேண்டும். பள்ளிகளில்உள்ள பொத்தான்கள்சரியாக உள்ளனவா, மழைநீர் படாமல்உள்ளனவா என்பதைச்சரிபார்க்க வேண்டும்.
மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவாஎன்றும், மின்இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்கவேண்டும். வெள்ளநிவாரண முகாம்களாகசெயல்படும் பள்ளிகளில் முறையாகக் குப்பைத் தொட்டிகளைவைத்து குப்பைகள்அகற்றப்பட வேண்டும்.
சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருப்பதால், மாணவர்களை அதனருகில்செல்ல அனுமதிக்கக்கூடாது உள்ளிட்டஅறிவுரைகளை தலைமையாசிரியர்களுக்கு வழங்கவேண்டும் எனஅந்தச் சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு பல்கலைக்கழகஆசிரியர் சங்கம்தங்களது ஒருநாள் ஊதியத்தைமுதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக
அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலர் என்.பசுபதி செவ்வாய்க்கிழமைவெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அண்மையில் பெய்தமழை காரணமாகதலைநகர் சென்னைஉள்ளிட்ட சிலகடலோர மாவட்டங்களில்ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பேரிடரால்அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், மாநில அரசுடன்இணைந்து அவர்களுக்குதுணையாகப் பணியாற்றஎங்களது சங்கம்முடிவு செய்துள்ளது. மேலும், அரசுக்குஉதவும் வகையில்சங்க உறுப்பினர்கள்தங்களது ஒருநாள் ஊதியத்தைமுதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். அதன்படி, சென்னைப்பல்கலைக்கழகம், பாரதியார், பெரியார், பாரதிதாசன், திருவள்ளுவர்பல்கலைக்கழகங்களில் இணைவு பெற்றுள்ள, அரசு உதவிபெறும் கல்லூரிகளில்பணியாற்றும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் சுமார்ரூ. 1 கோடியைநிவாரண நிதியாகவழங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

தொடக்கக்கல்வி - அனைத்து வகை தொடக்கப் பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு ஜனவரி மாதம் நடைபெறும் -இயக்குனர் செயல்முறைகள்



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகாக, தனி குழு - இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு

பள்ளி வளாகங்கள் மற்றும்வகுப்புகளில், வெள்ளம் புகுந்ததால், 'பெஞ்ச், டெஸ்க்' போன்றவை நாசமாகியுள்ளன. மேலும், மாணவர்களின்பிறப்பு
மற்றும்மாற்று சான்றிதழ்கட்டுகளும் நீரில் மூழ்கி, பாழாகியுள்ளன. வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்காக, தனிகுழுக்களை அமைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இணை இயக்குனர்கள்நாகராஜ முருகன், உமா, சுகன்யா, நரேஷ், பழனிச்சாமிஉள்ளிட்டோர், நேற்று பள்ளிகளை ஆய்வு செய்தனர்.அவர்கள் கண்டறிந்ததாவது:

● பள்ளிகளின் மேஜை, நாற்காலி, பெஞ்ச், டெஸ்க்ஊறிப்போய், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன

● மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஆசிரியர்களின் வேலை மற்றும் ஊதியம் தொடர்பானஆவணங்களும் சேதம் அடைந்துள்ளன

● வகுப்பறைகளில் நீர் புகுந்ததுமட்டுமின்றி, பாம்பு, பூனை, தேள், ஆமை, எலி, தவளை, பூச்சிகளும் புகுந்துள்ளன. அவற்றின் எச்சங்களும், வகுப்பறைகளில்நிறைந்து காணப்படுகின்றன. அவற்றை சுத்தம்செய்யும் பணிகள்நடக்கின்றன.

அதிக பாதிப்பு
● சென்னையில், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான் பேட்டை, கிண்டி, சூளைமேடு, சி.எம்.டி.ஏ., காலனி, சாலிகிராமம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகள்
● காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், இரும்புலியூர், பல்லாவரம் உள்ளிட்டபகுதிகள்

● திருவள்ளூர் மாவட்டத்தில், அயனம்பாக்கம், மணலிபுதுநகர் உள்ளிட்ட பகுதி பள்ளிகளில், 100 சதவீதஇழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

மழை, வெள்ளத்தில் கல்விச்சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும்சிறப்பு முகாம்களுக்குதனி அலுவலர்களைநியமிக்க
வேண்டும்என மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளசுற்றறிக்கையின் விவரம்:-
வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள்இழந்தவர்களுக்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்கள்நடத்தப்படுகின்றன. கட்டணம் ஏதுமின்றிவிண்ணப்பங்களைப் பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்குஅனுப்ப வேண்டும். சிறப்பு முகாம்அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குசம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்அறிவுரை வழங்கவேண்டும். இதற்காகபள்ளிகளில் தனி அலுவலர்கள் நியமனம் செய்யவேண்டும்.
ஒவ்வொரு நாளும் பெறப்படும்பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை தேர்வு வாரியாகத் தொகுத்து, பட்டியலிட்டு, உரிய மாவட்டக்கல்வி அலுவலர்களின்கையெழுத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில்ஒப்படைக்க வேண்டும். அரசுத் தேர்வுகள்இயக்ககத்தைச் சேர்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களை ஆய்வுசெய்து, மாற்றுச்சான்றிதழ்களை உரிய முகாம்களில் மாவட்டக் கல்விஅலுவலர்கள் மூலமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவர். இந்தப் பணிகளில் மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டஆசிரியர் பயிற்சிநிறுவன முதல்வர், அரசுத் தேர்வுகள்மண்டல துணைஇயக்குநர்கள் ஒருங்கிணைந்து தனி கவனம் செலுத்திதொய்வின்றி செயல்படுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்புக்கு கீழ்உள்ள வகுப்புகளில்மாற்றுச் சான்றிதழ், இதர சான்றிதழ்களுக்குவிண்ணப்பங்களைப் பெற்று, அதனை பள்ளிகளில் உள்ளஆவணங்களுடன் சரிபார்த்து எந்தவிதக் கட்டணமும் இன்றிவழங்க அந்தந்தபள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதிரிவிண்ணப்பப் படிவங்களும் மாவட்டங்களுக்குஅனுப்பப்பட்டுள்ளன.

அரையாண்டு தேர்வு ரத்தாகுமா: ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், 1 முதல், 9ம்வகுப்பு வரை, அரையாண்டு மற்றும், 2ம் பருவத்தேர்வை, ரத்துசெய்ய வேண்டும்என்ற
கோரிக்கைவலுத்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்மற்றும் கடலுார்மாவட்டங்களில், வரலாறு காணாத வெள்ளத்தால், மக்கள்உடைமைகளை இழந்துதவிக்கின்றனர். இந்நிலையில், 14ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள்செயல்பட உள்ளன. பள்ளிகள் திறந்ததும், ஒன்பது வேலைநாட்கள் மட்டுமேஉள்ளன. பின், மிலாடி நபி, 25ம் தேதிகிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 1ம்தேதி வரைபள்ளி, கல்லுாரிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டு, 2ம் தேதிதிறக்கப்படுவது வழக்கம். தற்போதைய நிலையில், 14ம்தேதி பள்ளிதிறந்த பின்மீண்டும், 24ம் தேதி முதல் விடுமுறைவிடப்பட்டு, 2ம் தேதி பள்ளிகள் திறக்கவேண்டும்.

இந்நிலையில், ஜனவரி முதல்வாரத்தில், அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது. சமச்சீர் பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புமுதல், பிளஸ்2 வரை, அரையாண்டுத்தேர்வும்; 1 முதல், 9ம் வகுப்பு வரை, இரண்டாம் பருவத்தேர்வும் நடத்தப்படுகின்றன.இந்த இரண்டுதேர்வுகளையும் ரத்து செய்ய கோரிக்கை எழுந்துஉள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்களும், பெற்றோரும்கூறியதாவது:வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், காலாண்டுத்தேர்வு முடிந்து, 10 நாட்களே பள்ளிகள் திறக்கப்பட்டு, நான்கில் ஒருபங்கு பாடங்கள்தான் நடத்தப்பட்டுள்ளன. 10 முதல், பிளஸ்2 வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் முடிக்கப்பட்டு உள்ளன.

மற்ற வகுப்புகளுக்கு பாடம்நடத்தாமல், அரையாண்டுத் தேர்வு என்பது வெறும்சம்பிரதாயமாகவே இருக்கும். இக்கட்டான இந்நேரத்தில், மாணவர்களைசோதிப்பது சரியானமுடிவாக இருக்காது. நன்றாக படிக்கும்மாணவர்கள் கூட, வெள்ளப் பாதிப்புமற்றும் குடும்பசூழலால், நல்லமதிப்பெண் பெறமுடியாமல் போகலாம்.இதையும் மீறிதேர்வு நடத்தினால், மதிப்பெண் குறைந்துவிட்டதே என, மாணவர்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டு, இறுதித் தேர்வில்கவனம் செலுத்தமுடியாத அபாயம்ஏற்படும்.இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.


மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் கழகதலைவர் எத்திராஜ்கூறியதாவது:கல்வி உரிமை சட்டப்படி, 9ம்வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' தான் வழங்கப்படுகிறது. எனவே, இரண்டாம்பருவத் தேர்வுரத்தானால், நேரடியாக மூன்றாம் பருவத் தேர்வைசந்திக்க எளிதாகஇருக்கும். இல்லையென்றால், மூன்றாம் பருவத்துக்கும் நாட்கள்பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

5/12/15

தமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 தமிழகத்தில் மழை வெள்ளம்காரணமாக போக்குவரத்துபாதிப்பு, மின்சாரம்துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் நிறுத்தம், ஏடிஎம்சேவை
முடக்கம்என பொதுமக்களுக்குபல்வேறு பாதிப்புகள்ஏற்பட்டன.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வங்கிசேவையையோ, ஏடிஎம்சேவையோ பயன்படுத்தமுடியாமல் பொதுமக்கள்தவித்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காகடிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வங்கிகள் இயங்கும்என்று நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

வங்கிகளின் அலுவல் நேரத்தைநீட்டிக்கவும், படகுகள் மூலம் நடமாடும் ஏடிஎம்களைசெயல்படுத்தவும் வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குழப்பம்: தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேர்வுகள் தள்ளிவைப்பு பொருந்துமா?

மழை பாதிப்பால்தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்புதேர்வு' என்றபெயரில் தேர்வுநடத்த கல்விஅதிகாரிகள்
முடிவு செய்துள்ளனர்.

         சென்னை உட்படவட மாவட்டங்களில்மழை பாதிப்பால்பல நாட்களாகபள்ளி, கல்லுாரிகள்செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்தஅரையாண்டு தேர்வுகளைதள்ளிவைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.ஆனால், மழை பாதிப்பில்லாதமதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்படதென் மாவட்டங்களில்'மாதிரி தேர்வுகள்' என்ற பெயரில்டிச.,7 முதல்23க்குள் தேர்வுகள்நடத்த முதன்மைகல்வி அதிகாரிகள்முடிவு செய்துள்ளனர்.

இதற்காக, பத்து, பிளஸ்1, பிளஸ் 2விற்குமாதிரி வினாத்தாள்தயாரிக்க தலைமையாசிரியர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிஒருவர் கூறுகையில், "வட மாவட்டங்களின்மழை பாதிப்புஅதிகம். பலநாட்கள் விடுமுறைவிடப்பட்டன. பிற மாவட்டங்களில், பள்ளி வேலைநாட்களில்பாதிப்பில்லை. அனைத்து பாடமும் முடிக்கப்பட்டுள்ளன. மாதிரி அரையாண்டு தேர்வு என்றபெயரில் தேர்வுநடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது," என்றார்.

குழப்பம்


பத்து, பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2விற்கு, பொது வினாத்தாள்என்பதால் அரையாண்டுதேர்வு தள்ளிவைப்புஅறிவிப்பு அனைத்துமாவட்டங்களுக்கும் பொருந்தும். அந்தந்தமாவட்டம் சார்பில்நடக்கும் ஆறுமுதல் ஒன்பதாம்வகுப்பு தேர்வுகளுக்குஇந்த அறிவிப்புபொருந்துமா என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இயக்குனர் அலுவலகத்தில்இருந்தும் தெளிவானஅறிவுறுத்தல் இல்லை என தெரிவித்தனர்.

தமிழக ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணியின் உதவிக்கரம் தந்து மீட்போம்

வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்து, உடமைகள் அனைத்தையும் இழந்து உண்ண. உணவின்றி, உறங்க இடமின்றி,குழந்தைக்குபால் இல்லாமல், கொடுக்க பிஸ்கட் கூட இல்லாமல் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ யாராவது உதவ வருவார்கள் என்று தன் பிள்ளையின் வயிற்றுப்பசியை மட்டுப்படுத்தி தண்ணீரில் முகம் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தாய்கள் எத்தனையோபேர், கடலூரிலும், சென்னையிலும் காத்திருக்கிறார்கள் நாமோ இங்கு உதவ மனமிருந்தும் வழிதெரியாமல் கரைந்திருக்கிறோம்.


கடவுள்கள் கண்ணசந்துவிட்டனர்
நம் சொந்தத்தை நாமே கைகொடுத்து மீட்போம்
இயக்க கண்மனிகளே மாவட்ட பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் வட்டார. பொறுப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள அனைவரிடமும் உணவுப் பொருள்கள், மருந்துகள், பெட்ஷீட்டுகள், பேஸ்ட்டு, சோப்பு, பாய்கள் ஆடைகள் என உங்களால் எவ்வளவு பெற முடியுமோ பெற்று அதனை உடனே கடலூர், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பிவையுங்கள்.
இப்படிக்கு  
இரா.தாஸ், பொதுச்செயலாளர், 
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி.

இஎம்ஐ உள்ளிட்டவற்றை செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும்: வங்கிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை

மழை வெள்ளத்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இஎம்ஐ உள்ளிட்ட மாதாந்திர ஈவுகளை செலுத்துவதற்கு வங்கிகள் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால் சென்னையில் பலத்த பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால், அடையாறு நிரம்பி பல இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

ஒரு பக்கம் வெள்ளம், மறுபுறம் ஆறுகள் உடைப்பெடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் நெட் பேங்கிங், போன் பேங்கிங் உள்ளிட்ட சேவைகளும் கிடைப்பது கடினமாக உள்ளது. பல ஊர்களில் மின்சாரம் இல்லாத நிலை.

பொதுமக்கள் பலர் உயிர் பிழைத்தால் போதுமென்று கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற வற்றை வீடுகளிலேயே வைத்துவிட்டு வெளி யேறியுள்ளனர். சிலரது அட்டை கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. இந்த சூழலில் 4 அல் லது 5 தேதிக்குள் வங்கி இஎம்ஐ, கிரெடிட் கார்டு தொகை போன்ற வற்றை செலுத்த சொல்லி வங்கிகள் எஸ்எம்எஸ் அனுப்புகின்றன.

வங்கிகள் சொல்கிற தேதியில் பணத்தை கட்டாவிட்டால் அபரா தத் தொகை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இஎம்ஐ போன்றவற்றை செலுத்த வங்கிகள் மனிதாபிமான அடிப்படையில் கூடுதல் அவகாசம் தர வேண்டும். குறிப்பாக பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கியுள்ளது.

இந்நிலையில், தேசிய, தனியார் வங்கிகளும் உடனடியாக இக் கோரிக்கையை பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும். இதுகுறித்த தகவல்களை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் எஸ்.எம்.எஸ்-ல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிவாரண பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி: கே.வி. வங்கி அறிவிப்பு.

வெள்ள நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் வெங்கட்ராமன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


அரசுக்கு பக்கபலமாக..

சென்னையில் எதிர்பாராத அளவுக்கு பெய்த மழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இத்தகைய பாதிப்புகளின்போது அரசுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ.2 கோடி வழங்கவுள்ளது.

இந்த தொகையை விரைவிலேயே அரசு அதிகாரிகளிடம் அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

சவால்களுக்குச் சவால்விடு!

போராட்டம் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவு போன்றது. அதில் சுவை இருக்காது! என்றார் உலக உத்தமர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். போராட்டம் என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அகப்போராட்டம் இன்னொன்று புறப்போராட்டம்.


அகப்போராட்டம் என்பது நமது ஆக்க சிந்தனைகளுக்கும் எதிர்மறை சிந்தனைகளுக்கும் இடையே நொடிகள் தோறும் நடப்பெறும் போராட்டத்தை குறிக்கும். அதிகாலை எழுந்து உழைஅகிலம் உனக்கு! என்று சிந்தனை நம்மை எழுப்ப முயலும் போது, எல்லம் விதிபோல்தான் நடக்கும் படுத்து உறங்கு!" என்று எதிர்மறை எண்ணம் இழுத்து மூடும்!

இதுபோலத்தான், ஒவ்வொன்றும் நிகழ்கின்றது. ஆதாவது முயற்சி செய்! முடியாது உலகில் இல்லை! என்று ஆக்க எண்ணங்கள் உத்வேக சிறகுகளைக் கொடுக்கும்போது, எதிர்மறை எண்ணம்  வேண்டாம். சும்மா இருப்பதே சுகம் என்று சோம்பல் விலங்குகளை எடுத்து நமது கைகளில் மாட்டும்.  மதித்து நட, உயர்வுக்கு உழைப்பு மட்டும் போதாது, மற்றவர்கள் ஒத்துழைப்பும் வேண்டும்! பணிதான் உன்னை உயர வைக்கும் என்று ஆக்க சிந்தனை அறிவுறுத்தும் போது;  நீ தான் சிறந்தவன் மற்றவன் எல்லாம் மடையன்&' என்று அகந்தை நெருப்பை பற்ற வைத்து தலையில் கனத்தை ஏற்றும்! எதிர்மறை எண்ணம்.

ஆகவே, அகப்போராட்டத்தில், ஆக்க சிந்தனைகளை மட்டுமே வெல்ல வைக்கும் வைராக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அகப்போராட்டத்தில் வெற்றி பெற்றால், வெளியில் எதிர்வரும் எந்த சவாலுக்கும் சவால்விட்டு வெற்றி வாகை சூட்ட முடியும்.

அகப்போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு சில யோசனைகள்:

1. உங்களால் முடியும் என்று முதலில் நம்புங்கள். ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கை.

2. ஒவ்வொரு வேலையையும் ஒத்திப் போடாமல், சாக்குப் போக்குச் சொல்லாமல் உடனுக்குடன் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்களைச் செய்பவர்கள் காரணங்களை சொல்வதில்லை.

3. செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு செய்து முடிப்பதுடன், அவற்றை முடித்ததும் உங்களை நீங்களே பாராட்டி ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! ஏனென்றால், சுயஊக்குவிப்பே  சிறந்த பாராட்டு.

4.மனம் தளர்கின்றபோது, இதுவரையில் நீங்கள் பெற்ற வெற்றிகளை அடைப்போடுங்கள். ஏனென்றால் வெற்றுமனமாக இருப்பதைவிட வெற்றி மனத்தோடு இருப்பதே சிறந்தது.

5.உங்கள் முயற்சிச் சிறகுகளை வெட்டி வீழ்த்தும் முட்டாள்களிடமிருந்து விலகியே இருங்கள்.

6.வெற்றி என்பது எனது பிறப்புரிமை என்று மனதுக்குள்ளாக முழங்கிக் கொண்டே சவால்களுக்குச் சவால் விடுங்கள். 

--சிந்தனை கவிஞ்ர் டாக்டர் கவிதாசன்.

வெள்ளத்தில் காணாமல் போன மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி?

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்களின் உடைமைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருந்த இடம்தெரியாமல் போயுள்ளன. இவற்றை மீண்டும் பெற முடியுமா என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

*மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி? 

பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களைப் பெற காவல் துறையினரிடம் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை பெற வேண்டும். அதன்பிறகு முன்பு படித்த பள்ளி, கல்லூரி மூலம் விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்து, வட்டாட்சியரிடம் அளித்து, அசல் சான்றிதழ் மீண்டும் திருப்பப் பெற வாய்ப்பின்றி இழக்கப்பட்டது என்ற சான்றிதழை வாங்க வேண்டும். 
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம், இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்களுக்கு தொடர்புடைய பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

*பதிவு எண் கட்டாயம்: 

சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுதிய பதிவு எண், ஆண்டு, மாதம் ஆகிய விவரங்களைக் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும். மாற்றுச் சான்றிதழ்களை புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்களை அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

*ஓட்டுநர் உரிமம்: 

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், பழைய ஓட்டுநர் உரிமத்தின் நகல் அல்லது எண்ணை அளிக்க வேண்டும். 

*குடும்ப அட்டை: 

குடும்ப அட்டை தொலைந்துபோனால், கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், நகரப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர் ஆகியோரை அணுக வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் குடும்ப அட்டை காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் அளித்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து அளிக்க வேண்டும். 

*டெபிட் கார்டு: 

பற்று அட்டை (டெபிட் கார்டு) தொலைந்துபோனால், உடனே தொடர்புடைய வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் தெரிவித்து, பணப்பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.
 பின்னர், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி, கடிதம் மூலம் பற்று அட்டை தொலைந்ததை தெரியப்படுத்தி புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும். அப்போது, தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.

*பட்டா: 

வீட்டுமனைப் பட்டா தொலைந்துபோனால், முதலில் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவரது பரிந்துரையின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா அளிக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

*சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுமா?

 சான்றிதழ்கள், ஆவணங்களைப் பெற சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 இதுகுறித்து சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த முகேஷ் கூறியதாவது:
மழை வெள்ளத்தால் பலரது வீடுகள் முழுவதும் மூழ்கிப் போயின. குடும்ப அட்டை, வங்கிப் பற்று அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அடித்துச் செல்லப்பட்டதால் அவசர தேவைக்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கக் கூட முடியவில்லை. அடித்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மீண்டும் திரும்பப் பெற எத்தனை நாள்கள் ஆகும் எனத் தெரியவில்லை. எனவே, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

வங்கிகள் நாளை இயங்கும்

சென்னை உட்பட, அனைத்து மாவட்டங்களிலும், நாளை, அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் செயல்படும். ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும்படியும், சில பகுதிகளில் மொபைல் ஏ.டி.எம்.,கள் இயங்கவும்,
கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம், பொருட்கள் வாங்கும் சேவைகளை சிறப்பான வகையில் அளிக்கவும், வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என மத்திய நிதித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயணம்

சென்னை மாநகர பேருந்துகளில் வரும் 8 ஆம் தேதி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இப்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும், இந்த வேளையில் மக்கள் உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும். 

எனவே, இதற்கு வசதியாக சனிக்கிழமை (டிச.5) முதல் வரும் 8 ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்த நான்கு நாள்களும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்

வங்கக் கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் காரைக்காலில் பலத்த, மிகப் பலத்த மழை நீடிக்கும். அதேநேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கோடி மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில், இலங்கை, வட தமிழகம் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடிக்கிறது. இந்த நிகழ்வின் காரணமாக, கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

பலத்த, மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு: அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, விழுப்புரம், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்புண்டு. சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரில் ஓரிரு முறை மழை பெய்யவும் வாய்ப்புண்டு.

பலத்த மழை எச்சரிக்கை இல்லை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கோடி மாவட்டங்களுக்கு, பலத்த மழை எச்சரிக்கை இல்லை. இருப்பினும், மாநகரில் ஓரிரு முறை மழை இருக்கும். ஆனால், பலத்த மழை வாய்ப்பு இருக்காது. இதனால் பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. அதேபோன்று, தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் 3 நாள்களுக்கு பல இடங்களில் பலத்த மழை இருக்கும். வரும் செவ்வாய்க்கிழமை (டிச.8) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்றார் எஸ்.ஆர்.ரமணன்.

தமிழகத்தை மிரட்டி வரும் கனமழை டிச., 8ல் நிற்குமா?

வங்க கடலில் தொடரும் காற்றழுத்த தாழ்வு நிலையால், விழுப்புரம், கடலுார், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். கன்னியகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.இந்த எச்சரிக்கை 7ம் தேதி வரை மட்டும் விடப்பட்டுள்ளதால், 8ம் தேதிக்கு பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது: வங்க கடலின் தென்மேற்கே, இலங்கை அருகே, நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தொடர்ந்து அப்பகுதியிலேயே நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், டிச., 7 வரை மழை நீடிக்கும்.

தேதி வாரியாக முன்னெச்சரிக்கை:
டிச., 5: விழுப்புரம், கடலுார், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
டிச., 6, 7: தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை:

சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.நேற்று காலை, 8:30 மணி வரை, தமிழகத்தில், அதிகபட்சமாக நாகப்பட்டினம், கடலுார் - 9; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - 5; திருவாரூர் மாவட்டம், நன்னிலம், திருத்துறைபூண்டி, தேனி மாவட்டம், பெரியாறு - 4; திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, சென்னை டி.ஜி.பி., அலுவலகம்; அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம்; கன்னியாகுமரி மாவட்டம், குளித்துறை - 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டிச., 8ல் நிற்குமா?

வானிலை ஆய்வு மையம், நேற்று முதல், டிச., 8 வரையிலான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், 7ம் தேதி வரை, மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 8ம் தேதிக்கான எச்சரிக்கை இல்லை என தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தை மிரட்டி வரும் மழையின் தீவிரம், 8ம் தேதியில் இருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இனி ஆண்களுக்கும் குழந்தைப் பராமரிப்பு விடுமுறை-7வது ஊதியக் குழு பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 10 ஆண்டுகளுக்கு ஒருல் 7வது ஊதியக் குழு நியமிக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராய், பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், மீனா அகர்வால் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த கமிஷனின் 900 பக்க அறிக்கை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்தவாரம் தாக்கல் செய்யப்பட்டது. தன் அறிக்கையில் ஏகப்பட்ட சீர்த்திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறது 7வது ஊதியக் குழு. மிகவும் குறிப்பிடத்தக்க இரண்டு சீர்திருத்தங்கள்... பணித்திறன் ஊதியம், மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கு தங்கள் குழந்தையைப் பராமரிக்க இரண்டு ஆண்டுகள் விடுமுறை. 


ஆண்களுக்கும் குழந்தைப் பராமரிப்புக்கான விடுமுறையை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள். அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது, ஊதியக் குழு. ஆண்களுக்கான குழந்தை பராமரிப்பு விடுமுறை பரிந்துரையை வரவேற்கும் அரசு ஊழியர்கள், பணித்திறன் ஊதிய முறையை எதிர்க்கிறார்கள்.

அதென்ன பணித்திறன் ஊதிய முறை..?

அரசு அலுவலகம் என்றால் ஆமை வேகத்தில் தான் இயங்கும் என்பது பொதுக்கருத்தாக மாறிவிட்டது. ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு, பாதி ஆயுளை அதற்காக அலைந்து திரிந்தே தொலைத்தவர்கள் ஏராளம். ‘அரசு வேலையில் சேர்ந்து விட்டோம், இனி சம்பளம், இங்கிரிமென்ட் வந்துவிடும். வேலை பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன’ என்ற மனோபாவம் சில அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. இந்த மனோபாவத்தைத்தான் நாட்டின் வளர்சிக்குத் தடையாகச் சுட்டிக்காட்டுகிறது நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7வது ஊதியக்குழு.

இதற்கு மாற்றாகத்தான் பணித்திறன் ஊதியம் என்ற திட்டம் முன் வைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் இருப்பதைப் போல, அரசு ஊழியர்களின் பணித்திறன் முழுமையாக கண்காணிக்கப்படும். தங்களுக்கான பணியை திறமையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் ஊழியர்களுக்கே சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும். சரிவர செய்யாதவர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட அத்தனை பலன்களையும் முடக்க வேண்டும்...” என்கிறது ஊதியக் குழு.  



இதை பரவலாக மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்கள் வரவேற்கிறார்கள். ‘மக்கள் சாசனப்படி பொதுமக்களுக்கான பணிகள் நடப்பதை இந்த கண்காணிப்பு ஏற்பாடு உறுதிப்படுத்தும்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், அரசு ஊழியர்களின் கருத்து வேறுமாதிரி இருக்கிறது. “பெரும்பாலான அரசுத்துறைகளில் பணிகள் தனியாருக்கு தரப்படுகின்றன. உதாரணத்துக்கு, மத்திய பொதுப்பணித்துறை இருக்கிறது. அதில் பெரும்பாலான பணிகளை தனியார்தான் மேற்கொள்கிறார்கள். ஊழியர்கள், தங்களுக்கான வேலை எதுவென்றே தெரியாமல் தவிக்கிறார்கள்.

அஞ்சல்துறை இருக்கிறது. ஒரு போஸ்ட்மேன் ஒருநாளைக்கு 120 கடிதங்களை கொடுத்தாக வேண்டும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் தனியாருக்கு அஞ்சல்துறையை தாரை வார்க்கிறார்கள். கொரியர் நிறுவனங்கள் பெரு வளர்ச்சி அடைந்துள்ளன. 120 கடிதங்களே அஞ்சலகத்திற்கு வராதபோது போஸ்ட்மேன் எப்படி அத்தனை கடிதங்களைத் தந்து தன் பணித்திறனை நிரூபிக்க முடியும்...?” என்று கேள்வி எழுப்பும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழகப் பொதுச் செயலாளர் துரைபாண்டியன், ஆண்களுக்கான குழந்தைப் பராமரிப்பு விடுமுறை திட்டத்தை வரவேற்கிறார்.   

“இந்த ஊதியக் குழுவின் அறிக்கையில் உள்ள ஒரே ஆறுதல், ஆண்களுக்கு கொடுக்கிற குழந்தை பராமரிப்பு விடுமுறை தான். இரண்டு ஆண்டுகள் விடுமுறை என்று அறிவித்துள்ளார்கள். 365 நாட்களுக்கு முழு சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சதவீத சம்பளமும் கிடைக்கும். இதுவே பெண்களுக்கும் பொருந்தும். முன்பு பெண்களுக்கு இரண்டு வருடங்களிலும் முழு சம்பளம் கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கும் ஆண்கள் மாதிரி 365 நாட்கள் முழு சம்பளம், அடுத்த 365 நாட்கள் 80 சதவீத சம்பளம் என்று மாற்றிவிட்டார்கள்...” என்கிறார் துரைபாண்டியன். இதுவரை அமைக்கப்பட்ட அத்தனை ஊதியக் குழுக்களும் சம்பள உயர்வு பற்றியே பரிந்துரைகள் அளித்துள்ளன. 7வது ஊதியக் குழு காலத்தின் தேவைக்ேகற்றவாறு சீர்த்திருத்தங்களையும் உள்ளடக்கி பரிந்துரைகளை வழங்கி உள்ளது. தனியார் நிறுவனங்களைப் போன்றதாகவே பல பரிந்துரைகள் இருப்பதால் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த தயாராகி வருவதும் குறிப்பிடத்தகுந்தது.

"பணியை திறமையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் ஊழியர்களுக்கே சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும். சரிவர செய்யாதவர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட அத்தனை பலன்களையும் முடக்க வேண்டும் என்கிறது ஊதியக் குழு"முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2006, ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது.

முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதியை, காசோலை, வரைவோலை மற்றும்ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

மாதிரி தேர்வான அரையாண்டு தேர்வுகள் கல்வி அதிகாரிகள் முடிவு

மழை பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பாதிப்பால் பல நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை தள்ளிவைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


ஆனால், மழை பாதிப்பில்லாத மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட தென் மாவட்டங்களில் 'மாதிரி தேர்வுகள்' என்ற பெயரில் டிச.,7 முதல் 23க்குள் தேர்வுகள் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு மாதிரி வினாத்தாள் தயாரிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வட மாவட்டங்களின் மழை பாதிப்பு அதிகம். பல நாட்கள் விடுமுறை விடப்பட்டன. பிற மாவட்டங்களில், பள்ளி வேலைநாட்களில் பாதிப்பில்லை. அனைத்து பாடமும் முடிக்கப்பட்டுள்ளன. மாதிரி அரையாண்டு தேர்வு என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

குழப்பம்

பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2விற்கு, பொது வினாத்தாள் என்பதால் அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு அறிவிப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். அந்தந்த மாவட்டம் சார்பில் நடக்கும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்துமா என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இயக்குனர் அலுவலகத்தில் இருந்தும் தெளிவான அறிவுறுத்தல் இல்லை என தெரிவித்தனர்.

4/12/15

மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி: நிதித்துறையில் 46 சதவீத பணியாளர் இல்லை

ராமநாதபுரம்,:மத்திய அரசுத்துறைகளில் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதித்துறையில் மட்டும் 46 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.மத்திய அரசில் 56 துறைகள், யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில் 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில் சென்ற ஆண்டு வரை 33.01 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் 12,503 பணியிடங்களில் 5,823 காலியாக உள்ளன. இத்துறையில் அதிகபட்சமாக 47 சதவீதம் காலியாக இருக்கின்றன.
நிதித்துறையில் 1,76,260 பணியிடங்களில் 95,863 காலியாக உள்ளன. இது 46 சதவீதம். விமான போக்குவரத்துறையில் 44 சதவீதம், சிறுபான்மைத்துறை 41, பாதுகாப்புத்துறையில் 32, உணவு வழங்கல்துறை 31, வனத்துறை 37, வெளியுறவுத்துறை 34, கனரக தொழிற்சாலை 34, மனிதவள மேம்பாட்டுத்துறை 35 சதவீதம் என, அனைத்து துறைகளிலும் சராசரியாக 18 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த விபரம் 7வது ஊதியக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அண்ணா பல்கலை. நுழைவுத் தேர்வு ரத்து

தொடர் மழை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

நவம்பர் 28-ஆம் தேதிக்குப் பிறகு சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதோடு, பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன. பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பவில்லை.

இதன் காரணமாக, டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடத்த இருந்த அனைத்து பருவத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
இப்போது பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., எம்.எஸ். ஆராய்ச்சி படிப்புகள் சேர்க்கைக்காக சனிக்கிழமை (டிச.5) நடைபெற இருந்த நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறினார்.
இதற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும் வட தமிழகத்துக்கும் இடையே, இரு நாட்களுக்கு முன் நிலை கொண்டிருந்த காற்று அழுத்த தாழ்வு மறைந்து விட்டது.
தற்போது அதே இடத்தில், புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.நேற்று காலை, 8:30 மணி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலுார் - 13; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் - 12; மதுரை மாவட்டம், பெரியாறு - 11; திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும், 50 செ.மீ., மழை?'சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், அடுத்த இரு நாட்களில், மீண்டும் 50 செ.மீ., மழை பெய்யும்' என தனியார் வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:

இரு தினங்களுக்கு முன் தாம்பரத்தில் 49 செ.மீ., மழையும், சென்னை மற்றும் பிற சுற்றுப் பகுதிகளில், 29 - 36 செ.மீ., மழையும் பெய்தது, மிக அதிகபட்சமானது. இதுபோன்ற நிலை எதிர்பாராமல் நடப்பது. மீண்டும் இதேபோல மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது. தற்போது நிலவும் வானிலை நிலவரப்படி, மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு குடிநீர் பாக்கெட் ரூ.10; வாழைப்பழம் ரூ.20

வெள்ளம் பாதித்த பகுதிகளில், மக்கள் நிற்கதியாக தவிக்கும் நிலையில், ஒரு குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்க்கும், ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்க்கும் விற்கும் கொடூரம் சென்னையில் நடக்கிறது.
சென்னை, சைதாபேட்டை பகுதியில், நேற்று காலை, வழக்கமாக, ஒரு ரூபாய்க்கும் விற்கும் குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்; ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்; 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட், 20 ரூபாய்க்கு விற்கப்பட்டன. அங்குள்ள ஓட்டல் மூடப்பட்டு, டோக்கன் கொடுத்து உணவுகள் தரப்பட்டன. இரண்டு இட்லி, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று முன்தினம் போல், நேற்றும், அரை லிட்டர் பால் பாக்கெட், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. குடிநீர் கேன், 50 - 75 ரூபாய் வரை, அநியாயமாக விலை வைத்து வியாபாரிகள் விற்றனர். விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பாதிப்பு பகுதி மக்கள், இதுவாவது கிடைக்கிறதே என, வேறு வழியின்றி வாங்கிச் சென்றனர்.
'ஆபத்து நேரத்தில் மக்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வதை விட்டுவிட்டு, இதுபோன்று கூடுதல் விலை வைத்து விற்பது மனிதாபிமானமற்ற செயல்' என, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


முட்டை, பிரட் தட்டுப்பாடுமெழுகுவர்த்தியும் இல்லை

சென்னை முழுவதும் மின் தடை நீடிப்பதால், மெழுகுவர்த்திக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளில் இருந்த, 'ஸ்டாக்' ஒரு நாளுக்கு கூட போதுமானதாக இல்லை. எமர்ஜென்சி விளக்கு இல்லாத வீடுகள், குடிசைப் பகுதிகளில், சிம்னி விளக்கு ஏற்றக் கூட, கெரசின் கிடைக்கவில்லை. மழை பாதிப்பு பெரிதாக இல்லாத பகுதிகளில், சமையல் எண்ணெய், முட்டை, பிரட் உள்ளிட்ட பொருட்கள் எந்த கடைகளிலும் கிடைக்கவில்லை; நிலைமை சீராக, ஓரிரு நாளாகும் என, வணிகர்கள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய வசதி

சென்னையில், வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள, தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இணைந்து, தகவல் தொடர்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளனர்.வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்கள், உதவி கோரி தொடர்பு கொள்வதற்காக, பல துறைகள் சார்பில் தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

இவற்றைத் தொடர்பு கொள்வதிலும், இங்கு வரும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக கிடைப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரங்களை, துறை அதிகாரிகள் அறிந்துகொள்ள, தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 15 பேர் சேர்ந்து, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், பிரத்யேக தகவல் தொடர்பு மையத்தை துவக்கியுள்ளனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், திண்டுக்கல் எஸ்.பி., சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் இணைந்து உள்ளனர்.
இந்த மையத்துக்கு தகவல் தெரிவிக்க, 080400 01000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தகவல் தெரிவிக்க, 98806 55555 எண்ணிலும், 'டெலிகிராம்' ஆப் வாயிலாக தொடர்பு கொள்ள, 72597 60333 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

வெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை தாண்டிய இழப்பீடு


வெள்ளத்தில், வாகனம், வீடுகளை இழந்த பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரி உள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நவ., 7 முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆற்று ஓரங்களில் இருந்த வீடு, தொழிற்சாலைகளில், தண்ணீர் உட்புகுந்துள்ளது. சாலைகளில், நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கின.

இதையடுத்து, வாகனம், வீடு உள்ளிட்டவற்றை இன்சூரன்ஸ் செய்த பாலிசிதாரர்கள், இழப்பீடு கோரி அதிகளவில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர்.

இதுகுறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழையால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களின் வசதிக்கு, சென்னையில் உள்ள அரசு பொது காப்பீட்டு நிறுவன அலுவலகங்களில், தனி பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொது மற்றும் தனியார் துறையில் உள்ள, 25 காப்பீட்டு நிறுவனங்களில், நவ., 7 முதல், நேற்று வரை, 2,000 பேர், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளத்தில் மிதக்கும்அரசு அலுவலகங்கள்

கன மழையால், மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட, அரசு அலுவலகங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.சென்னை, கே.கே.நகரில், மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனரகம்; கிண்டி, திரு.வி.க., தொழிற் பேட்டையில் சமூக நலம், சத்துணவு திட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன.

கன மழையால், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. பல அடி உயரத்திற்கு தேங்கி உள்ள தண்ணீரால், அலுவலகத்தில் இருந்த மருத்துவ உபகரணங்கள் சேதம் அடைந்தன. அடையாறு ஆற்றின் வெள்ள பெருக்கால், சமூக நலத்துறை அலுவலகத்தில் தண்ணீர் புகுந்து, முக்கிய ஆவணங்கள் நனைந்து உள்ளன.

தமிழக அரசு இணையதளம் முடக்கம்

சென்னை :தமிழக அரசு இணையதளம் நேற்று முடங்கியது.சென்னையில் மழை வெள்ளம் காரணமாக, மொபைல் போன் இணைப்புகள் செயல் இழந்துள்ளன. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளமும் நேற்று இயங்கவில்லை. இதனால், அரசு செய்திக்குறிப்புகளை மக்கள் பார்க்க இயலவில்லை. இதேபோல், பெரும்பாலான இணையதளங்களை, மக்கள் நேற்று பார்க்க இயலவில்லை.

நீங்க ஓ.கே.,வா?': 'பேஸ்புக்' அசத்தல்

சமூகவலைத் தளமான, 'பேஸ்புக்,' சென்னைவாசிகளுக்காக பிரத்யேக வசதியை, நேற்று ஏற்படுத்தியிருந்தது.சென்னையில், இரண்டு நாட்களாக, மொபைல்போன் சேவை செயல் இழந்துள்ள நிலையில், 'பேஸ்புக், டுவிட்டர்' போன்றவை மட்டும் வெளியுலக தொடர்பு சாதனமாக இருந்து வருகின்றன.
அதை உணர்ந்த, 'பேஸ்புக்' நிர்வாகம், சென்னையை சேர்ந்த தன் பயன்பாட்டாளர்களுக்கு, 'நீங்கள் ஆபத்தில் இருக்கீங்களா அல்லது பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்பதை, 'ஆர் யூ ஓ.கே.,?' எனக் கேட்டு தகவல் அனுப்பியது. அதற்கு, 'ஓ.கே.' என்று, 'கிளிக்' செய்தால், உடனே அவர்களின் பெயரை குறிப்பிட்டு, நட்பு வட்டாரங்களுக்கு, தகவல் அனுப்பியது. அதனால், தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும், தங்கள் நேசத்துக்கு உரியோர் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை அறிந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இந்த வசதியை, 'பேஸ்புக்' ஏற்படுத்தி தருவது குறிப்பிடத்தக்கது

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது: 
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும் வட தமிழகத்துக்கும் இடையே, இரு நாட்களுக்கு முன் நிலை கொண்டிருந்த காற்று அழுத்த தாழ்வு மறைந்து விட்டது. தற்போது அதே இடத்தில்,
புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.நேற்று காலை, 8:30 மணி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலுார் - 13; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் - 12; மதுரை மாவட்டம், பெரியாறு - 11; திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும், 50 செ.மீ., மழை?'சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், அடுத்த இரு நாட்களில், மீண்டும் 50 செ.மீ., மழை பெய்யும்' என தனியார் வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:

இரு தினங்களுக்கு முன் தாம்பரத்தில் 49 செ.மீ., மழையும், சென்னை மற்றும் பிற சுற்றுப் பகுதிகளில், 29 - 36 செ.மீ., மழையும் பெய்தது, மிக அதிகபட்சமானது. இதுபோன்ற நிலை எதிர்பாராமல் நடப்பது. மீண்டும் இதேபோல மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது. தற்போது நிலவும் வானிலை நிலவரப்படி, மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மது குடித்ததால் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டமாணவியரை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

நாமக்கல்:வகுப்பறையில் மது குடித்து, வாந்தி எடுத்து, மயங்கி விழுந்ததால், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, நான்குமாணவியரை, மீண்டும் இன்று பள்ளியில் சேர்க்க, கலெக்டர் தட்சிணாமூர்த்திஉத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், கடந்த, 21ம் தேதி நடந்தது. தேர்வு எழுதி கொண்டிருந்தபோது, பிளஸ் 1 மாணவியர், நான்கு பேர், வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.விசாரணையில், அவர்கள்,
மது அருந்தியது தெரிய வந்தது. மாணவி ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்காக, மாணவியர் மது அருந்தியது தெரிந்தது.மாணவியரிடம், தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, 'டிசி' எனப்படும், பள்ளியிலிருந்து வெளியே அனுப்புவதற்கான சான்றிதழை கொடுத்துள்ளார்; மூன்று மாணவியர் பெற்றுக்கொள்ளவில்லை.பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியருக்கு, 'கவுன்சிலிங்' எனப்படும் நல்லொழுக்க அறிவுரை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, இன்று மீண்டும் அவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:இன்றைய மாணவர்கள் மத்தியில், சினிமா, 'டிவி', மொபைல் போன் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்லது எது, கெட்டது எது என, பிரித்து பார்க்கத் தெரியவில்லை. சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தான் புரியவைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு அறிவு மட்டுமின்றி, நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும். மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். வகுப்பறையில் விழா கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்.

15 இளைஞர்கள் உருவாக்கிய 'கன்ட்ரோல் ரூம்'

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தனி கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளனர். அவர்கள், அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து, ஏராளமானோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 
சென்னையில் வெள்ளத்தில் சிக்கி, லட்சக்கணக்கான குடும்பங்கள் தவித்து வருகின்றன. 

அவர்களுக்கு உதவ பலர் தயாராக இருந்தும், அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாமல் இருந்தனர்.இரு தரப்பினரை இணைப்பதற்காக, சென்னையில் சில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, ஒரு சிறிய அறையில், இன்டர்நெட் வசதியுடன் கூடிய, 10 லேப்டாப்கள், 'லேண்ட் லைன்' மற்றும் மொபைல்போன்கள் உதவியுடன், 24 மணிநேர கட்டுப்பாடு அறையை அமைத்துள்ளனர்.

உதவி தேவைப்படுவோரையும், உதவ விரும்புவோரையும் இணைத்து உதவிபுரிந்து வருகின்றனர். அவர்கள், மணிவண்ணன், அலெக்ஸ் பால் மேனன் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

'வாட்ஸ் ஆப்' எண் - 98806 55555, 'டெலிகிராம்' எண் - 72597 60333 மற்றும் 12 இணைப்புகள் கொண்ட, 080400 01000 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தங்களை தொடர்பு கொள்ளலாம்' என, கேட்டுக் கொண்டு உள்ளனர்.

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர், தொழில்நுட்ப அதிகாரி, என பொருளாதாரம், புள்ளியியல், சட்டம், சி.ஏ, சிவில், எலக்ட்ரிகல்ஸ் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுமார் 115 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனினும், டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணபங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை சேர்த்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.600யும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், இது குறித்த விரிவான தகவலுக்கு சிண்டிகேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

டிசம்பர் 4ல் நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள்மீண்டும் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றது. இந்நிலையில்,

மாணவர்களின் நலன் கருதி டிசம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகதுணைவேந்தர் அறிவித்துள்ளார்.தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flash News - கனமழை : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (04/12/2015) விடுமுறை அறிவிப்பு.

*விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
*சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை விடுமுறை 
*காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை
*கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை  

சென்னை மழைக்கு பூமி வெப்பம் அடைந்ததே காரணம்: பாரீஸ் மாநாட்டில் நிபுணர்கள் தகவல்:

சென்னை மழைக்கு பூமி வெப்பம் அடைந்ததே காரணம்: பாரீஸ் மாநாட்டில் நிபுணர்கள் தகவல்:
சென்னையில் கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்கள் பலத்த மழை கொட்டியது. கடந்த 2 நாட்களாகவும் இதேபோல் சென்னையில் பலத்த பெய்து வருகிறது.
வரலாறு காணாத இந்த மழைக்கு பூமி வெப்பம் அடைந்து வருவதே காரணம் என்று பாரீசில் நடந்து வரும் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் துணை தலைமை இயக்குனர் சந்திரபூஷண் கூறுகையில், சென்னை நகரில் பெய்து வரும் இடைவிடாத பலத்த மழைக்கு இந்த பூமி வெப்பமயமாகி வருவதுதான் காரணம். இத்தனைக்கும் பூமியில் ஒரு செல்சியசுக்கும் குறைவான அளவு வெப்பமே அதிகரித்து இருக்கிறது. அதற்கே இந்த மழை என்றால் 2 செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்என்றார்.
ஆக்ஷன் எய்ட் அமைப்பின் ஹர்ஜித்சிங் கூறும்போது, “காஷ்மீர் முதல் உத்தரகாண்ட் வரை கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நிலைமையை பார்க்கும்போது, இது நிச்சயமாக பூமியின் பருவநிலை மாற்றத்தால்தான் ஏற்பட்டது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டார்.

தமிழக சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் தீர்மானம்:

தமிழக சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் தீர்மானம்:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்பு மருத்துவ இடங்களை தமிழக மருத்துவர்களே வழங்கிடும் முறை தொடர வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:சிறப்பு மருத்துவ இடங்கள் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மருத்துவர்களே என்ற நிலையை தமிழக அரசு எடுத்து வைக்க வேண்டும்.
 தமிழகத்துக்கு உள்ள நியாயமான உரிமைகளை காப்பாற்ற வேண்டும்.
 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கும் முறையை கைவிட வேண்டும். 
 இதற்கென்று தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தில் நீதிமன்றங்கள் தலையிடாமல் இருப்பதற்கு அரசியல் சட்டப்பிரிவின் அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகள் தொடங்கிட வேண்டும். இதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். 
 குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை போதிய அளவில் தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் இருக்கிறது: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் இருக்கிறது: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:
வங்ககடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல்பகுதியில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலைகொண்டது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
இந்த நிலையில், வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே இடத்தில் நீடிக்கிறது
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. வடமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக தாம்பரத்தில் 49 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழையும் பெய்யும்.
5 நாட்களுக்கு மழை
காற்றழுத்த தாழ்வுநிலை மட்டும் அல்லாது, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் தற்போது நிலவியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா பகுதிகள், கோவை, நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வங்ககடலில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுநிலையினால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 7–ந் தேதி வரை மழை இருக்கும். கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும், அதன் பிறகு படிப்படியாக மழை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை வரும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகபட்சமாக தாம்பரத்தில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) பரவலாக நல்ல மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
*தாம்பரம் – 49 செ.மீ.
*செம்பரம்பாக்கம் – 47 செ.மீ.
*மரக்காணம் – 42 செ.மீ.
*செங்கல்பட்டு, பொன்னேரி – தலா 39 செ.மீ.
ஸ்ரீபெரும்புதூர், செய்யூர் ஆகிய இடங்களில் தலா 38 செ.மீ., சென்னை மீனம்பாக்கம் 35 செ.மீ., மகாபலிபுரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 34 செ.மீ., செங்குன்றம், அண்ணா பல்கலைக்கழகம் தலா 32 செ.மீ., தரமணி 30 செ.மீ., சோழவரம், நுங்கம்பாக்கம் ஆதலா 29 செ.மீ., தாமரைப்பாக்கம், மதுராந்தகம் தலா 28 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம் 27 செ.மீ., திருவள்ளூர், புதுச்சேரி 22 செ.மீ., பூண்டி, உத்திரமேரூர் தலா 19 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னைக்கு கனமழைக்கான வாய்ப்பு எப்படி?
வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், இதன் தொடர்ச்சியாக உள்மாவட்டங்களில் நிலவும் மேலடுக்கு சுழற்சியினால் மலைப்பகுதிகளில் மழை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.
இந்த நிலையில், சென்னையை நோக்கி கிழக்கில் இருந்து நிறைய மேகக்கூட்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கனமழையும் பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் இதுவரை பெற்ற சராசரி மழை அளவு 57 செ.மீ.
தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர்–டிசம்பர்) சராசரியாக 44 செ.மீ. மழை அளவை பெறும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28–ந்தேதி தொடங்கியது.
இதுவரை தமிழகத்தில் பெய்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, சராசரியாக 57 செ.மீ. மழை அளவை பெற்றுள்ளது. இது சராசரி அளவை விட 13 செ.மீ. அதிகம் ஆகும். சென்னையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 154 செ.மீ., மீனம்பாக்கத்தில் 175 செ.மீ. மழை பெய்து உள்ளது.
மிக கனமழை, கனமழை பெய்த மாவட்டங்கள் எவை?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) நல்ல மழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் படி, நேற்று முன்தினம் முற்பகல் வரை பதிவான மிக கனமழை, கனமழை, மிதமான மழை பெய்த மாவட்டங்களின் விவரம் பின்வருமாறு:–
மிக கனமழை – கடலூர், காஞ்சீபுரம், புதுச்சேரி, விழுப்புரம்.
கனமழை – நாகப்பட்டினம், தஞ்சை, திருவள்ளூர், வேலூர்.
மிதமான மழை – அரியலூர், சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர்.
மழை பெய்யாத மாவட்டங்கள் – மதுரை, தேனி.

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:
சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள்
தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10–ந்தேதி ஒரே நாளில் 26 செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை நேற்று முன்தினம் பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2–வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:
சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள்
தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10–ந்தேதி ஒரே நாளில் 26 செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை நேற்று முன்தினம் பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2–வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்வு 2 பெண் உள்பட மேலும் 6 பேர் சாவு:

சென்னையில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்வு 2 பெண் உள்பட மேலும் 6 பேர் சாவு:
சென்னை நகரின் மழையால் நேற்றும், நேற்று முன்தினம் இரவும் 2 பெண்கள் உள்பட மேலும் 6 பேர் உயிர்ப்பலியானார்கள். இதையொட்டி மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளமோ வெள்ளம்
சென்னை நகரில் மழை ஒரு பக்கம் கொட்டோ, கொட்டு என்று கொட்டுகிறது. இன்னொரு பக்கம் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி போன்றவற்றிலிருந்து உபரி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரும் வெள்ளமாக சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் ஓடுகிறது.
குறிப்பாக தென்சென்னை பகுதி முழுவதும் சாலைகளில் 10 அடிக்கு மேல் மழை தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நேற்றும் சென்னை நகர சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
68 பேர் பலி
நேற்று முன்தினம் இரவிலும், நேற்று பகலிலும் 2 பெண்கள் உள்பட மழையால் மேலும் 6 பேர் பலி ஆனார்கள் இதனால் சாவு எண்ணிக்கை 68–ஐ தொட்டது.
நேற்று முன்தினம் இரவு ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமலஹாசன் அலுவலகத்தின் அருகே உள்ள எல்டாம்ஸ் சாலையில் ஜான்சன்(வயது 28) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருகிலுள்ள வங்கி அலுவலகத்திற்குள் அவர் நுழைந்தார். அலுவலக வாசலில் உள்ள கிரில் கதவை தொட்டபோது அதில் மின்சாரம் பாய்ந்து ஜான்சன் பரிதாபமாக இறந்து போனார். அந்த வங்கி அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் மின்சார கசிவு ஏற்பட்டு கிரில் கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதைத் தொட்ட ஜான்சன் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார்.
பெண்கள் பலி
பல்லாவரம் தர்கா ரோட்டை சேர்ந்த கவிதா (33) என்ற பெண் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். ரவி என்பவர் ஆட்டோவை ஓட்டிச்சென்றார். அந்த பகுதியில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவில் செல்லும்போது ஆட்டோ மீது திடீரென்று மரம் ஒன்று விழுந்து விட்டது. அதில் ஆட்டோ நசுங்கி கவிதா பரிதாபமாக இறந்து போனார். ஆட்டோ டிரைவர் ரவி அதிசயமாக உயிர் தப்பினார்.
தாம்பரத்தில் தங்கவேலு (57) என்பவர் வீட்டில் மின்சார விளக்கு சுவிட்ச்சை போட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் லட்சுமி (65) என்ற மூதாட்டி வீட்டில் நுழைந்த மழைத்தண்ணீருக்குள் சிக்கி உட்கார்ந்த நிலையிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
நேற்று பகலில் கீழ்ப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் மாண்டு போனதாக தகவல் வெளியானது. அவரது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆற்று வெள்ளத்திலும் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது பெயர் விவரங்களும் தெரியவில்லை.

சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது:

சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது:
சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது. 
சென்னையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பலத்த மழையின் காரணமாக சென்னையில் இருந்து விமான போக்குவரத்து அடியோடு முடங்கியது. நாளை காலை 6 மணி வரை சென்னை விமானநிலையத்தில் இருந்து எந்த விமானமும் புறப்பட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது. 

வண்டலூர் பூங்காவில் பாதிப்பு! வன விலங்குகளால் தொடரும் அச்சம்:

வண்டலூர் பூங்காவில் பாதிப்பு! வன விலங்குகளால் தொடரும் அச்சம்:
சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், உடைந்த சுற்றுச்சுவர்களை சரிசெய்யும் பணி பலத்த மழையால் தடைபட்டுள்ளது. அதனால், பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலுார், அறிஞர் அண்ணா உயிரியல் 
 அந்த பூங்காவின் அமைப்பிடங்களுக்குள், 2,000க்கும் மேற்பட்ட விலங்குகளும், அதைச் சுற்றியுள்ள காப்புக்காட்டு பகுதியில் மான், நரி போன்ற சுதந்திரமாக சுற்றித் திரியும் உயிரினங்களும் வாழ்வதால், அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். இதனால், சென்னையில் இருந்து வனத்துறையின் உயர் அதிகாரிகள், போக்குவரத்து தடைகளையும் மீறி அங்கு விரைந்தனர்.
பூங்காவில், வெள்ள நீரின் அளவு அதிகரித்தபடியே இருந்ததை காரணம் காட்டி, பூங்காவுக்கு, நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி, சுற்றுச்சுவரை சரி செய்ய ஊழியர்கள் முயன்றனர். ஆனால், மழை இடையூறு செய்ததால் அப்பணியை மேற்கொள்ள இயலவில்லை. அதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, உயிரியல் பூங்கா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில், வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அரையாண்டு தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைத்து முதலமைச்சர் உத்தரவு:

அரையாண்டு தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைத்து முதலமைச்சர் உத்தரவு:
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கன மழை காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.