யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு முடிவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!!!

கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலில் இடம்பெற்ற, 43 பேரின் நியமனத்தை ரத்து செய்த, மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
மோதல்:

ஐகோர்ட்களில் காலியாக உள்ள நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட்களில் நீதிபதிகளாக நியமிக்க 77 பேரது பட்டியலை சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 34 பேரது பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 43 பெயரை திருப்பி அனுப்பியது. இதனை கடந்த 11ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தாக்கூர் கூறுகையில், 43 நீதிபதிகள் பெயரை நிராகரித்த மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. அவர்களின் பெயர்களை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி, இந்த பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

பணபரிவர்த்தனைக்கு கறும்புள்ளி வேண்டாம்: தேர்தல் ஆணையம் கடிதம்!

செல்லாத நோட்டாக அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது மீண்டும் மீண்டும் நோட்டுகளை மாற்ற வருகிறவர்களுக்கு கையில் கறும்புள்ளி வைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையம் மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம்

எழுதியுள்ளது. கடந்த புதன்கிழமை (16-11-2016) அன்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ், வங்கிகளில் ரூபாய் 500, 1000 நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு விரலில் கறும்புள்ளி வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். சிலர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் நோக்கோடு, அப்பாவி மக்களை குழுக்களாக ஒருங்கிணைத்து, வங்கியின் ஒரு கிளையிலிருந்து மற்ற கிளைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர் என அமைச்சகத்து புகார்கள் வருகின்றன. இதனால், சில மக்களால் மட்டுமே பணத்தை மாற்ற முடிந்தது. இதன் காரணமாகவே, ‘கறும்புள்ளி’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு இடது கையில்தான் மை வைக்கப்படுகிறது, ஆனால், வங்கியில், வலது கையில்தான் கறும்புள்ளி வைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்த நடவடிக்கையை பலரும் வன்மையாக விமர்சித்து இருக்கின்றனர். மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி, ட்விட்டரில் தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார். ‘அரசு தன் சொந்த மக்களையே நம்பாதது தான் இதிலிருந்து தெரிகிறது’ என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இவ்வாறு விரலில் கறும்புள்ளி வைப்பது குறித்து, தேர்தல் ஆணையத்தின் கருத்து என்னவாக இருக்கும் என்பது பற்றியும், மம்தா பானர்ஜி எச்சரித்து இருந்தார். நவம்பர் 19ஆம் தேதி, அருணாச்சலப்பிரதேசம், அச்ஸாம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் கைகளில் கறும்புள்ளி வைக்கும் முடிவு தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இடைஞ்சலை உருவாக்கும். ஆகவே கைகளில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

காவல் நிலையங்களில் பதிவாகும் FIR. இனி பதிவிறக்கம் செய்யலாம். ADGP சீமா அகர்வால் அறிக்கை...!!!

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் !!

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியால்

இணையதளம் கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்துக்கு அவசியமானதாகவும், தவிர்க்க இயலாததாகவும் இணைய வழி கல்வி இருக்கிறது. 2017 - 2018ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள 3,354 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வகுப்பறைகளை நேற்று அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் கடியம் ஸ்ரீஹரி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தரக ராம ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பஞ்சாரா மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பேசிய கடியம் ஸ்ரீஹரி, “தெலங்கானா அரசு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றல் திறனை மேம்படுத்தவுள்ளது. எனவே வரும் காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட பெகா சிஸ்டம்ஸ் நிறுவன இயக்குநர், "இத்திட்டம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். இதன் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறை எளிமையாகும்.

கடந்த மாதம், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பிழப்பு: ஒரு பயனும் இல்லை - முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்!

'மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்ததன் மூலம் நமது பொருளாதாரத்துக்கு எந்த நன்மையையும் இல்லை' என்று முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக சக்ரவர்த்தி கடந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பொறுப்பு வகித்தார் என்பது

குறிப்பிடத்தக்கது. 'தி இந்து' ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டியின் தமிழாக்கம்…

மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்திருப்பதை பற்றி உங்கள் கருத்து?

மத்திய அரசின் இந்த முடிவால் நமது பொருளாதாரத்துக்கு எந்த நன்மையையும் இல்லை.

ஆனால், கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதே?

கறுப்புப் பணம் என்றால் என்ன? எந்த ரூபாய் நோட்டுகளும் கறுப்பல்ல. எல்லா ரூபாய் நோட்டுகளும் வெள்ளை தான். நமது அமைப்புதான் கறுப்புப் பணத்தை உருவாக்குகிறது. ஒருவர் தனது வருமான வரியை தாக்கல் செய்யாதபோதே அதே கறுப்புப் பணமாக மாறுகிறது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு என்பது வரி செலுத்தாதவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது. மாறாக ரூபாய் நோட்டுகளை மட்டுமே ஒழிக்க உதவும்.

ஆனால், மத்திய அரசு கள்ள நோட்டுகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளதே..

நீங்கள் ஒரு கிலோ அரிசி வாங்கினால் அதில் ஒரு சில சிறிய கற்கள் இருக்கும். இப்போது நீங்கள் அதில் உள்ள கற்களை மட்டுமே எடுக்க வேண்டுமே தவிர, மொத்த அரிசியையும் தூக்கி வீசி விடக்கூடாது. அதேபோல தான், கள்ள நோட்டுகளை அடையாளம் கண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான வருமான வரி அமைப்பு இல்லாதது போதுமானம் சட்ட நடவடிக்கைகள் இல்லாத காரணத்தினாலும் தற்போது பொது மக்கள் தங்களது சொந்தப் பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

புழக்கத்தில் உள்ள ரூபாய் 500, 1000 நோட்டுகளில் 90 சதவிகித ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளே என்ற தகவலா அவர்களுக்கு கிடைத்தது? என்னிடம் இது குறித்தான எந்த தகவல்களும் இல்லை. ஒருவேளை அவர்களிடம் இதுகுறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு 10 லட்சம் ரூபாய் 1000 நோட்டுகளில் எத்தனை கள்ள நோட்டுகள் உள்ளது என்ற விவரத்தை அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது நீங்கள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்துள்ளீர்கள். அப்போது மத்திய அரசிடம் இருந்து ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏதேனும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதா?

ஆம். ரூபாய் நோட்டுகளை தடை விதிக்க வேண்டும் என்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பரிந்துரைத்தது. ஆனால், நாங்கள் அந்த பரிந்துரையை ஆலோசித்த பிறகு நாங்கள் இந்த முடிவை எடுக்கக்கூடாது என்று தெரிவித்து விட்டோம்.

அந்த பரிந்துரை முறையாக முன்வைக்கப்பட்டதா? அந்த பரிந்துரையை அமல்படுத்த மறுத்ததற்கான காரணம் என்ன?

அரசிடம் இருந்து வந்த பரிந்துரை அதிகாரப்பூர்வமாக வந்ததா அல்லது தொலைபேசி மூலமாக வந்ததா என்பது இங்கு பிரச்னை இல்லை. ஆனால் மத்திய அரசிடம் இருந்து அந்த பரிந்துரை வந்தது என்பது உண்மைதான். மத்திய அரசின் அந்த பரிந்துரையால் நமக்கு எந்தவிதமான விளைவுகளும் கிடைப்பதாக தெரியவில்லை. மேலும், அதனை அமல்படுத்த நாம் கொடுக்க வேண்டிய விலைதான் அதிகமாக இருக்குமே தவிர, அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மிக மிக குறைவாக இருக்கும் என்பதை அறிந்ததால் நாங்கள் அந்த பரிந்துரையை அமல்படுத்த மறுத்துவிட்டோம்.

நனறி : தி இந்து

வேலைவாய்ப்பு: ஐடிபிஐ வங்கியில் பணியிடங்கள்!

ஐடிபிஐ (IDBI) வங்கியில் காலியாக உள்ள எக்ஸிக்யூடிவ் ஆபீசர் காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 500


பணியின் தன்மை: எக்ஸிக்யூடிவ் ஆபீசர்

கல்வி தகுதி: பட்டப்படிப்பு

சம்பளம்: Rs.17,000/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

கடைசி தேதி: 30.11.2016

மேலும் விவரங்களுக்கு என்ற http://careerpower.in/wp-content/uploads/2016/11/Detailed-Advertisement-for-post-of-Executive-2016.pdf இணையத்தள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கணினி தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் சேர வேண்டுமானால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கணினி சான்றிதழ் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, இந்த சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண் பருவத்துக்குள் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி சான்றிதழ் தேர்வை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய சான்றிதழ் தேர்வு, 2017ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் www.tndote.org என்னும் இணையதள முகவரியில் நவம்பர் 11ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு நவம்பர் 18ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் ரூபாய் 530க்கான டிமாண்ட் டிராப்டுடன் சமர்ப்பிக்க நவம்பர் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு தெரிவித்துள்ளார்.

18/11/16

CCE -WORK SHEET தேர்வு வரும் வாரங்களில் எப்போது நடைபெறும்?எவ்வாறு மதிப்பீடு செய்வது?

TIME TABLE
🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு.
🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம் வாரத்தேர்வு.

🌻 28.11.16 to 02.12.16 - மூன்றாம் வாரத்தேர்வு

🌻 05.12.16 to 08.12.16 - நான்காம் வாரத்தேர்வு.

ஒவ்வொருவாரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொருபாடத்தில் தேர்வு
வினாத்தாட்களைஒவ்வொரு வாரத்திற்கும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்

தேர்வுநேரம்: பி.ப.3.00 to 4.00

தொடக்க கல்வி - பணிப்பதிவேட்டில் உடனுக்குடன் பதிவு செய்தல் அறிவுரை வழங்குதல் - இயக்குநர் செயல்முறைகள்..

SSA-CRC மையம் மூலமாக இரண்டு கட்டமாக அறிவியல் கண்காட்சி 23.11.2016. & 24.11.2016- ல் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

தங்கள்பள்ளி எந்த நாட்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை உங்கள் BRT அவர்களிடம்கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தொடக்கப்பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்யவேண்டும்.

நடுநிலைப்பள்ளிகள் நான்கு மாடல் செய்யவேண்டும். 1 - 5. (2)  6 - 8. (2).

மாடல்கள்மாணவர்கள் செய்ய வேண்டும். செய்ததைகண்காட்சி அன்று மாணவர்கள் செய்துகாட்டு விளக்குதல் வேண்டும்.

ஒரு மையத்துக்கு 10 பள்ளிகள் வீதம் கலந்து கொள்வார்கள்.

சிறப்பாகசெய்த மாணவர்க்கு பரிசு உண்டு. பள்ளிக்கும்கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்வழங்கப்படும்.

ஒரு மாடலுக்கு ரூபாய் 180. லிருந்து  300. வரைமைய தலைமை ஆசிரியர் வழங்குவார்.

P.F முன்பணம் 2013-14 AEEO அலுவலகத்தில் தணிக்கைச் செய்து உறுதி செய்யப்பட்ட AlC Slip வைத்து போடலாம் என்பதன் அரசு கடிதம்



TNOU-B.Ed -2017

ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது’

சென்னையில்பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைமாற்ற, ஆதார் அட்டையை ஒருமுறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி
அனுப்பப்பட்டனர்.

பணம் செல்லாது அறிவிப்பு

புழக்கத்தில்உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்செல்லாது என்று மத்திய அரசுஅறிவித்தது. இதனால் அதை மாற்றவங்கிகள் முன்பு பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்து கிடக்கின்றனர். இவர்கள்தங்களுடைய ஆதார் அட்டை நகலில்கையெழுத்திட்டு, வங்கிகளில் செலுத்தி பணத்தை மாற்றி செல்கின்றனர்.

முதலில்ரூ.4 ஆயிரம் மதிப்பில் மட்டும்பணமாற்றம் செய்யப்பட்டது. இதனை ரூ.4 ஆயிரத்து500 ஆக மாற்றி மத்திய அரசுஅறிவித்தது. ஒரு வாரத்தில் சகஜநிலைஏற்படும் என்று கருதிய வங்கிஅதிகாரிகளுக்கு, நாளுக்கு நாள் வங்கிகளின் முன்புநிற்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

விரலில்மை

இதனை கட்டுப்படுத்த பணம் மாற்ற வருபவர்களின்கை விரலில் மை வைக்கமுடிவு செய்யப்பட்டது. இந்த தகவலால் நேற்றுகாலையில் வங்கிகள் முன்பு கூட்டம் சற்றுகுறைவாக காணப்பட்டது. பெரும்பாலான வங்கி கிளைகளுக்கு மைவந்து கிடைக்காததால், வழக்கம் போல் மைவைக்காமல் பணமாற்றம் செய்யும் பணி நடந்தது.

இதனால்நேற்று பிற்பகலில் வங்கிகள் முன்பு மீண்டும் நீண்டவரிசை காணப்பட்டது. ஸ்டேட் வங்கி தவிரபெரும்பாலான வங்கிகளில் மாற்றித்தருவதற்கு போதிய பணம் இல்லாததால்வங்கிகளில் வழக்கம் போல் டெபாசிட்பெறுவது, காசோலை பரிமாற்ற பணிகள்மட்டுமே நடந்தன. தபால் அலுவலகங்களைபொறுத்தவரையில் போதிய பணம் இல்லாததால்வெறிச்சோடியே காணப்பட்டன.

ஆதார் அட்டை பதிவு

இதுகுறித்துஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்களின்வங்கி கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாகஇருக்கும். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்என்று ரிசர்வ் வங்கி அறிவித்துஉள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் பணம் மாற்றவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. எதாவதுஒரு அடையாள அட்டையின் நகலில்கையெழுத்திட்டு கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி85 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை நகல்மூலம் பணம் மாற்றித்தரப்பட்டது. அவ்வாறுகொண்டு வரப்படும் ஆதார் அட்டை எண்கள்கணினியில் பதிவு செய்யப்படுகிறது. மீண்டும்அதே ஆதார் அட்டைகளை கொண்டுவந்தால் கணினி அதனை ஏற்பதில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் மாற்று அடையாளஅட்டைகளை பொதுமக்கள் கொண்டு வந்து பணத்தைமாற்றி செல்கின்றனர்.

கண்காணிப்பு

குறிப்பாககுடிசை பகுதிகளில் இருப்பவர்கள் அதிகளவு வந்து பணத்தைமாற்றுவதால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் கமிஷன் வாங்கிகொண்டு வேறு நபர்களின் பணத்தைமாற்றுவது ஒரு சிலர் மூலம்தெரியவந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கிபணம் மாற்ற வருபவர்களின் கைவிரல்களில்மை வைக்க அறிவுறுத்தி உள்ளது. மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கிஅச்சகத்தில் இருந்து பெரும்பாலான கிளைகளுக்குமை வந்து சேரவில்லை. நாளை(இன்று) கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கிடைத்தஉடன் மை வைக்கும் பணியைதொடருவோம். அதுவரை வழக்கம் போல்பணம் மாற்றி தரும் பணியில்ஈடுபட்டு உள்ளோம்.

வங்கிகளில்பழைய பணத்தை சேகரிக்க தனிப்படைஅமைக்கப்பட்டு செல்லாத பணம் சேகரிக்கப்பட்டுவருகிறது. ‘ஜன்தன்’ கணக்கில் அளவுக்குஅதிகமாக பணத்தை டெபாசிட் செய்பவர்களும், கருப்பு பணத்தை டெபாசிட் செய்யவருபவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். புதிய கரன்சி நோட்டுகளைவைக்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்களும் மறுசீரமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறுஅதிகாரிகள் கூறினர்.

'கட்' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : பிள்ளையார் சுழி போட்ட பெண் அதிகாரி

இரண்டுஆசிரியர்கள் உள்ள தொடக்க பள்ளிகளில், பெரும்பாலும் மாணவர்கள் எண்ணிக்கை, குறைவாகவே உள்ளது. எனவே, ஒருவருக்குமூன்று நாள், இன்னொருவருக்கு இரண்டுநாள் வேலை என,
ஆசிரியர்கள்பிரித்துக் கொள்கின்றனர். ஆனால், வருகை பதிவேட்டில், அனைத்து நாட்களுக்கும் கையெழுத்து போட்டு விடுகின்றனர். இதற்குமுற்றுப்புள்ளி வைக்க, அதிகாரிகள் முயன்றால், சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கின்றன. அதைப் பற்றி கவலைப்படாமல், கோவை மாவட்ட தொடக்க கல்விஅதிகாரி காந்திமதி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளார்.
திடீர்ஆய்வு : தினமும் குறைந்தபட்சம், இரண்டுபள்ளிகளுக்கு, காலையில் அதிரடியாக ஆய்வுக்கு செல்கிறார். உரிய நேரத்தில் வராதஆசிரியர்களை பிடித்து, அவர்களிடம் விளக்கம் கேட்கிறார்.காலை, 9:00 மணிக்கு பள்ளி துவங்கும். தலைமை ஆசிரியர், 8:45க்கும், ஆசிரியர்கள், 9:00 மணிக்கும்வர வேண்டும். பல பள்ளிகளில், 10:00 மணிக்குமேல் தான் ஆசிரியர்கள் வருகின்றனர். அதிலும், சில ஆசிரியர்கள் வாரத்திற்குஇரண்டு, மூன்று நாள் மட்டுமேபணிக்கு வருகின்றனர்; பாதியில், 'கட்' அடித்து செல்கின்றனர். இதையெல்லாம், திடீர் ஆய்வில் காந்திமதிகண்டுபிடித்தார். அதனால், அவரே பள்ளிக்குசென்று பாடம் நடத்துகிறார். ஆசிரியர்கள்என்ன பாடம் நடத்தினர் என்பதை, மாணவர்களிடம் விசாரிக்கிறார். பின், அந்த பாடத்திற்கு, உடனடி தேர்வு வைக்கிறார்; அதன்மூலம், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் திறனைஅறிந்து கொள்கிறார்; அதில், பின்தங்கிய ஆசிரியர்களுக்குஅறிவுரை வழங்குகிறார்.
வரவேற்பு: இப்படி, கோவை மாவட்டத்தில் உள்ள, 1,100 தொடக்க பள்ளிகளில், 50 சதவீத பள்ளிகளில், இதுவரைநேரடி ஆய்வு நடத்தியுள்ளார். துணிச்சலானஇவரது நடவடிக்கைக்கு, பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவரை பார்த்து, மற்றமாவட்டங்களிலும் இதேபோல் அதிரடி ஆய்வுநடத்த, தொடக்க கல்வி இயக்குனரகம்முடிவு செய்துள்ளது. அதனால், 'கட்' அடித்து விட்டு, ஊர் சுற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர் வாழ்நாள் சான்று தவறாமல் சமர்ப்பிக்க வலியுறுத்தல்

தங்களின்வாழ்நாள் சான்றிதழை, ஓய்வூதியதாரர்கள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்' என, சென்னை மண்டல தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி அமைப்பின்முதன்மை ஆணையர், சலீம் சங்கர்
தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் விடுத்த அறிக்கை: வருங்காலவைப்பு நிதி சட்டம் உள்ளடக்கிய, தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்பஓய்வூதிய திட்டத்தின் மூலம், ஓய்வூதியம் பெறும்ஒவ்வொரு பயனாளியும், தாங்கள் தொடர்ந்து ஓய்வூதியம்பெறும் பொருட்டு, ஆண்டுதோறும், நவம்பரில், தாங்கள் உயிரோடு இருப்பதற்கானவாழ்நாள் சான்றிதழ், மனைவியை இழந்தோர் மறுமணம்செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், இந்த ஆண்டும் நவம்பரில், ஓய்வூதியதாரர்கள், மேற்படி சான்றிதழ்களை, தாங்கள் ஓய்வூதியம் பெறும்வங்கிகளில் தவறாமல் சமர்ப்பிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இந்த வாழ்நாள் சான்றிதழை, தற்போது, இணையம் மூலமாக, 'ஜீவன்பிரமான் போர்ட்டலிலும்' பதிவேற்றம் செய்யலாம்; அல்லது, 'ஜீவன் பிரமான் பதாபுரோகிராம்' பொது சேவை மையங்களைஅணுகியும் சமர்ப்பிக்கலாம். தற்போது, இந்தியாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானபொது சேவை மையங்கள் உள்ளன. எனவே, ஓய்வூதியதாரர்கள், தங்களது வங்கி, ஜீவன்பிரமான் மையம், பொது சேவைமையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அணுகி, சான்றிதழை பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை, இந்தியாவில் உள்ள எந்த ஒருஜீவன் பிரமான் போர்ட்டல் மூலமாகவும்பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்பு.

2017-ம்ஆண்டு இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதுஎன்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2016-ம் ஆண்டின்மூன்றாவது காலாண்டு சம்பள பட்ஜெட் திட்டத்தைவில்லிஸ் டவர்ஸ்
வாட்சன் நிறுவனம்வெளியிட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்துசேலரீஸ் இன் இந்தியா (salaries in india) நிறுவனம் இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதுஎன்று கூறியுள்ளது. கடந்த ஆண்டும் 10.8% உயரும்என்று கூறியிருந்தது. ஆனால் உண்மையாக 10% மட்டுமேசம்பள உயர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசஅளவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும்இந்தியா சம்பள உயர்வில் முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வில், இந்தோனேசியாவில் 9% சம்பளம் உயர்வு இருக்கும்என்றும் இலங்கையில் 8.9 சதவீதம் சம்பள உயர்வுஇருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில்7 சதவீதம் சம்பள உயர்வு இருக்கும்என்று கூறப்பட்டுள்ளது.   மேலும் இந்தியாவில்சம்பளத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் நன்கு பணிபுரியும் ஊழியர்களின்சம்பள உயர்வுக் காக 38% ஒதுக்கப்படும் என்றும்சராசரிக்கு கொஞ்சம் அதிகமாக பணிபுரியும்ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 34 சதவீதம்ஒதுக்கப்படும் என்று இந்த ஆய்வுகூறுகிறது. மேலும் சராசரியாக பணிபுரியக்கூடிய ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 28 சதவீதம்மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

``அனைத்துஊழியர்களுக்கும் சம்பளம் உயர்வு வழங்குவதைக்காட்டிலும் நன்கு பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்குசரியான சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்று இந்த ஆய்வுகள்தெளிவாக்கு கின்றன. எந்தவொரு வேறுபாடுஇல்லாமல் சம்பள உயர்வு இருக்கும்என்றால் நிறுவனங்கள் நல்ல திறமையுடைய ஊழியர்களைதக்கவைப்பது சிரமமாக இருக்கும். அதிலும்குறிப்பாக ஊழியர்கள் தேவை இருக்கும் துறைகளில்இன்னும் சிரமமாக இருக்கும்’’ என்றுவில்லிஸ் டவர்ஸ் வாட்ஸன் நிறுவனத்தின்ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தகவல்சேவை பிராக்டீஸ் தலைவர் சம்பவ் ரக்யான்தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளான அமெரிக்காமற்றும் இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டில் 3 சதவீதம்மட்டுமே சம்பள உயர்வு இருக்கும்என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் பார்மச்சூடிகல்ஸ்துறையில் சம்பள உயர்வு அதிகமாகஇருக்கிறது. நிதி சார்ந்த துறைகளில்சம்பள உயர்வு சராசரிக்கும் கீழே8.5 சதவீதமாக இருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க கோரிக்கை.

தமிழ்நாடுதலைமைச் செயலக சங்கம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றி வருகின்றனர்.

இதில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள்
விதிவிலக்கல்ல. அரசு ஊழியர்கள் வங்கிகளில்தவம் கிடப்பதால் பணியும் பாதிக்கப்படுகிறது. வருங்காலவைப்பு நிதி முன்பணம், கல்வி, குடும்ப தேவைக்காக பெற்ற கடன் தொகைக்காகபணம் எடுக்க சிரமப்படுகின்றனர்.  சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் ஊதியத்தில் 25 சதவீதத்தை வாடகையாக செலுத்துகி்ன்றனர். இதை தவிர மாதம்தோறும் குழந்தைகள் கல்விக்கட்டணம், மருத்துவச் செலவு உள்ளிட்ட செலவுகளைதற்போதைய வங்கி கட்டுப்பாட்டினால் மேற்கொள்ளமுடியாமல் உள்ளனர். வருமான வரித்துறைக்கு கணக்குகளைமுறையாக சமர்ப்பிக்கும் ஊழியர்கள் தங்கள் பண இருப்பைபெற முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களுக்கானஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை அவர்கள்வங்கிக்கணக்கில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்க முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பம்

எட்டாம்வகுப்பு தனித்தேர்வுக்கு, இன்று முதல், 25 வரை, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை
அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவிவெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரியில்நடக்கவுள்ள, 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 12 ஆண்டு, ஆறு மாதங்களை பூர்த்திஅடைந்தவர்கள், இன்று முதல், 25 வரைஆன்லைனில் பதிவு செய்யலாம். அரசுதேர்வுத் துறையின் சேவை மையங்கள் மூலம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை, தேர்வுத்துறை இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Exam - 15, 30 மதிப்பெண் வினாக்களை சேர்க்க டிஎன்பிஎஸ்சி முடிவு.

*நகராட்சிஆணையர் (கிரேடு-2)* துணை வணிகவரி அலுவலர், சார்-பதிவாளர் (கிரேடு-2) தலைமைச் செயலக உதவிபிரிவு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி
ஆய்வாளர், வருவாய்உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளை நேரடி யாகநிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுஎழுதுவதற்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி *ஏதேனும் ஒரு பட்டப்படிப்ப*ு முடித்திருக்க வேண்டும்.
கடந்த 2013-ம் ஆண்டு வரைகுரூப்-2 பணிகளுக்கு ஒரே தேர்வு தான்நடத்தப்பட்டு வந்தது. அதுவும் அப்ஜெக்டிவ்முறையில் அமைந்தி ருக்கும். அதன்பிறகுபுதிதாக மெயின் தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 250 மதிப்பெண்ணுக்கு அப் ஜெக்டிவ் முறையிலானகேள்விகளும், 50 மதிப்பெண்ணுக்கு விரிவாக பதிலளிக்கும் கேள்விகளும்கேட்கப் பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மெயின்தேர்வில் அப்ஜெக் டிவ் முறையிலானகேள்விகள் நீக் கப்பட்டன. அனைத்துகேள்விகளுக் கும் விரிவாக பதிலளிக்கும்புதிய முறை கொண்டுவரப்பட்டது. அதில்*3, 5, 8 மதிப்பெண் கேள்விகள*் கேட்கப்பட்டன.
இந்நிலையில், குருப்-2 மெயின் தேர்வு வினாத்தாள்முறையில் டிஎன்பிஎஸ்சி மீண்டும் மாற்றம் செய்திருக்கிறது. அதன்படி, ஏற் கெனவே இடம்பெற்றிருந்த *5 மதிப்பெண் கேள்விகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.*
அதற்குப்பதில் *புதிதாக 15 மதிப் பெண் கேள்விகளும், 30 மதிப்பெண் கேள்விகளும்* சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஒவ்வொரு பகுதி யிலும்கூடுதல் வினாக்கள் கொடுக் கப்பட்டு அவற்றில்தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான கேள்வி களை தேர்வுசெய்து(Choice) விடையளிக்கலாம்.
இந்த புதிய வினாத்தாள் முறைகுறித்து சென்னை வெங்கடேஸ்வரா போட்டித்தேர்வுகள்பயிற்சி நிறுவனத் தின் இயக்குநர் பி.அங்கமுத்து கூறும்போது, “3 மதிப்பெண், 5 மதிப்பெண் கேள்விகள் எனில் நன்றாக விடையளித்திருந்தால்அதற்கு முழு மதிப்பெண் பெறும்வாய்ப்பு உண்டு. ஆனால், 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகளுக்கு நன்றாக விடையளித்திருந்தாலும் மதிப்பீட் டாளர்எதிர்பார்க்கும் விவரங்கள் முழுமையாக இல்லாவிட்டாலோ, அல்லது பதிலில் அவர்திருப்தி அடையாவிட்டாலோ மதிப்பெண் பெருமளவு குறைக்கப்படலாம். இருப்பினும், நல்ல எழுத்தாற்றலும், விடைகளைநல்ல முறையில் வழங்கும் ஆற்றலும் மிக்க தேர்வர்களுக்கு 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகள் வரப்பிரசாதமாகவே இருக்கும்” என்றார்.

*குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.* நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், வருவாய்உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் *ஏறத்தாழ 1,700 இடங்கள் நிரப்பப்படும்*என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப்-2 மெயின்தேர்வில் புதிய வினாத்தாள் முறையைபின்பற்ற டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களைசரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்விஅதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி
இயக்குனரகம்சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள்ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்கூறியிருப்பதாவது:-
மாணவர்களின்விவரம்
அடுத்தஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின்விவரங்களை விரைவில் சேகரித்து சரிசெய்யவேண்டும். மாணவர்கள் பிறந்த தேதி, பெற்றோர்பெயர், சாதி, ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து வகைகளும் அந்தபட்டியலில் இடம்பெற வேண்டும்.
இந்த விவரங்கள் அனைத்தும் வருகை பதிவேட்டில் உள்ளபடிசரியாக இருக்க வேண்டும். இதனைகல்வி தகவல் மேலாண்மை முறையில்ஏற்கனவே உள்ளடு செய்த மாணவர்களிடம், அவர்கள் கொடுத்த விவரங்கள் சரியாகஉள்ளனவா? என வகுப்பு ஆசிரியர்கள்சரிபார்க்கவேண்டும். இதில் எந்தவித தவறும்இருக்கக்கூடாது.
கண்காணிக்கவேண்டும்
அனைத்தையும்வகுப்பு ஆசிரியர் சரிபார்த்த பின்னர் தலைமை ஆசிரியர்கையெழுத்திட வேண்டும். பிறகு அதை மாவட்டகல்வி அதிகாரிகள் பெற்று கையெழுத்திட வேண்டும். இந்த பணியை மாவட்ட கல்விஅதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும்கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில்காணொலி காட்சி மூலம் முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம்பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் நேற்றுதெரிவித்தார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி திட்ட மாநிலஇயக்குனர் பூஜா குல்கர்னி தலைமையில்நடைபெற்றது. அப்போது இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், வி.சி.ராமேஸ்வர முருகன், கருப்பசாமி, பழனிச்சாமி மற்றும் இணை இயக்குனர்கள்தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து பேசினர்.

இன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000!

இன்று முதல் ரூ.4,500க்குபதிலாக ரூ.2,000!: பணம் மாற்றுவதில் ஆர்.பி.ஐ., உத்தரவு:விவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகை:மணமக்கள் பெறலாம்
ரூ.2.5 லட்சம்
வங்கிகளில்பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டு களைமாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டி ருந்தஉச்சவரம்பு 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக இன்று முதல்குறைக்கப்படுகிறது.
அதிக மக்கள், பணத்தை பெறவசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅறிவித் துள்ள மத்திய அரசு, பணம் எடுப்பதில் விவசா யிகள், வியாபாரிகளுக்குசலுகை அளித்துள் ளது. திருமணச் செலவுக்காகமணமக்கள் வீட் டார் வங்கிகணக்குகளில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பெறவும்அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகள்மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கநீண்ட வரிசைகளில் நிற்க வேண்டி இருப்பதால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்ற னர். மீண்டும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும், மக்களின் சிரமங்களை யும் மத்திய அரசுஉன்னிப்பாக கவனித்து வருகிறது.
பொருளாதாரவிவகாரங்கள் செயலர் சக்தி காந்ததாஸ் டில்லியில் நேற்று கூறியதாவது:
வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றஅனுமதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு, 4,500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக, 18ம் தேதி முதல்குறைக்கப்படுகிறது. அதிக மக்கள், பணத்தைபெற வசதியாக இந்த நடவடிக்கைஎடுக்கப்படுகிறது. அரசிடம் போதிய பணம்இருப்பு உள்ளது என்பதை, மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறோம்.
விவசாயிகள், தங்கள் வங்கிகணக்கில் இருந்து, வாரத்துக்கு,25 ஆயிரம் ரூபாய்,பெற்றுகொள்ள அனுமதிக்கப்படுவர். ரபி பருவ பயிர்களைபயிரிட, சிரமம் இருக்கக் கூடாதென, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து வர்த்தகர்களும், இதேஅளவு தொகையை பெற, ஏற்கனவேஅனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள், 24 ஆயிரத்து, 500 ரூபாய் வரை, வங்கிக்கணக்கில் இருந்து பெறலாம். விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீடுகளுக்கான பிரீமியம்தொகையை செலுத்த, 15 நாள் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.திருமண செலவு களுக்கு, வங்கி கணக்குகளில் இருந்து, 2.5 லட்சம் ரூபாய் பெறஅனுமதிக்கப்படும். திருமணம்நடக்கும் குடும்பத்தில், யாராவது ஒரு உறுப்பினர், இந்த தொகையை பெறலாம்.
இதற்கு, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அந்ததொகையை பெற்றுள்ளதாக, சுய அறிவிப்பு கடிதத்தையும், 'பான்' எனப்படும், நிரந்தரக் கணக்கு எண்ணையும் வங்கியில்சமர்ப்பிக்க வேண்டும்.
பல்வேறுபொருட்களை மண்டிகளில் வைத்து வர்த்தகம் செய்வோர், வாரத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் இருந்து பெற அனுமதிக்கப்படுவர். மத்திய அரசில், 'குரூப்சி' பிரிவை சேர்ந்த ஊழியர்கள், சம்பளத்தில் முன் பணமாக, 10 ஆயிரம்ரூபாய் வரை பெறலாம்; நவம்பர்மாத சம்பளத்தில், இந்த தொகை நேர்செய்யப்படும்.
ஏ.டி.எம்.,களில், புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும்வகையில், தக்க மாற்றங்களை செய்யும் பணிகளை விரைவுபடுத்த, சிறப்புநிபுணர் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.

இதற்கிடையே, ரூபாய் நோட்டு விவகாரம், பார்லிமென்டின்இரு சபைகளிலும், நேற்று, எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின்அமளியால், இரு சபைகளும், நாள்முழுவதும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டன

நவ., 26ல் அரசியலமைப்பு சட்ட நாள்: பள்ளிகளில் கொண்டாடும்படி உத்தரவு

பள்ளி, கல்லுாரிகளில், வரும், 26ல், அரசியலமைப்பு சட்டநாள் கொண்டாடும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது.

சுதந்திரம்பெற்ற பின், 1949 நவ., 26ல், இந்தியஅரசியலமைப்பு சட்டம்
தேசிய அளவில்ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாள், சட்டநாளாக ஏற்கனவே கொண்டாடப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு, அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 26ம் தேதி, இந்தியஅரசியலமைப்பு சட்ட நாளாக கொண்டாடப்படும்என, அறிவித்தார். அதன்படி, 26ல் அரசியலமைப்பு சட்டநாளை, பள்ளி, கல்லுாரிகளில் கொண்டாட, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. 'சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், அரசியலமைப்பு சட்ட நாளை கட்டாயமாககொண்டாட வேண்டும்; அதன் அறிக்கையை, நவ., 30ல் சமர்ப்பிக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ப.க.இ.ந.க.எண்,74499 எம்/இ/04/2015 நாள் 16/11/2016ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இயக்குநகரத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்-CM CELL REPLIED

நேர்மறை சிந்தனையின் சக்தி

படித்ததில்

பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?

பாதம் தொட்டு பணிகிறேன்

பீட்ரூட் ஜூஸ்

புகழ்பெற்றநூல்கள்

பெண்களுக்கு நன்மை பயக்கும் மீன் உணவுகள்

பொடுகு என்றால் என்ன?

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள்

மரங்களை பற்றிய அறிய தகவல்

மாமிசம் மனித உணவா

மாம்பழம்

மிகவும் ஆபத்து

முக்கியமான சட்ட பிரிவுகள் உங்கள் பார்வைக்கு

யார் யார் இரத்த தானம் செய்யலாம்

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் புதினாக்கீரை

வன்முறையில்லா வகுப்பறை

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

வீட்டில் உள்ள தரை பளிச்சிட

DSR (Digital Service Register) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை

*அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு*
மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:: 

1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.

2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,


3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்

4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்

5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்

6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..

7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.

8) RETIREMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது, மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்

9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளி SR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்


  8) SR SCAN செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...

9)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்., இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...

10)N.O.C,
ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..

11)எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது்

12) DSR ல் NEXT INCREMENT ,
HRA SLAp அனைத்துமிருக்கும்

13)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,

அதன்பின் நாம் ஏதேனும் மிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்...

புதிய வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் ஆப்..!! வரவேற்ற பயன்பாட்டாளர்கள்

புதிய வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் ஆப்..!! வரவேற்ற பயன்பாட்டாளர்கள்

மும்பை: வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியா உட்பட சுமார் 180 நாடுகளில் வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், 
தனது பயனாளர்களுக்காக ஏற்கனவே வாய்ஸ் கால் வசதியை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது விடியோ கால் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.

ஐபோன், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என மூன்று தளங்களில் இந்த விடியோ கால் வசதி இயங்கும். இதற்கு நீங்கள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோர்க்கு சென்று உங்கள் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் உள்ள காண்டாக்ட் லிஸ்டிற்கு சென்று நீங்கள் பேச விரும்பும் நபரை தேர்வு செய்தால் வாய்ஸ் கால், விடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும்.

அதில் நீங்கள் விடியோ கால் வசதியை தேர்வு செய்தால் நீங்கள் பேச விரும்பும் நபருக்கு விடியோ கால் இணைக்கப்படும். இந்த விடியோ கால் வசதியைப் பொறுத்தவரை நீங்கள் பேச விரும்பும் நபரும் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் பேச விரும்பும் நபருக்கு விடியோ கால் வசதி இணைக்கப்படவில்லை என்றாலோ அல்லது உங்கள் மொபைலில் இந்த வசதி சப்போர்ட் செய்யாது என்று காட்டினாலோ, தயங்காமல் உடனடியாக வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இந்த விடியோ கால் வசதி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

17/11/16

எமிஸ் (EMIS)தகவல் தொகுப்பில் உள்ள விபரங்கள் மூலம் sslc மற்றும் +2 அரசு பொதுத் தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உத்தரவு.

TNPSC Result Published for ELCOT துணை மேலாளர்-II பதவிக்கான 12 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC RESULT | ELCOT துணைமேலாளர்-II பதவிக்கான 12 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.
| தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடுமின்னணுவியல் கழகத்தின் (ELCOT) துணை மேலாளர்-II
பதவிக்கான12 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுகள் 02.07.2016 மு.ப. & பி.ப. மற்றும் 03.07.2016 மு.ப. ஆகிய நாட்களில்நடத்தப்பட்டன.

அவற்றில்மொத்தம் 608 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டுவிதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில்வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ்சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 35 விண்ணப்பதாரர்களின்பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணையவலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ்சரிபார்ப்பு 28.11.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில்நடைபெறும். வெ. ஷோபனா, இ.ஆ.ப., தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examinations for the post of Deputy Manager-II (ELCOT) was held on 02.07.2016 FN & AN and 03.07.2016 FN. Totally 608 candidates have appeared for the said Examinations. Based on the marks obtained in the above said Examinations, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 35 candidates those who have been provisionally admitted to Certificate Verification for Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held on 28.11.2016 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS

தொடக்கக்கல்வி - ஆண்டுமுழுவதும் விடுப்பு எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசின் பாராட்டு சான்றிதழ் - மாண்புமிகு தமிழகமுதலமைச்சரின் ஆனைபடி வழங்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குநவம்பர் முதல் ஜனவரி மாதம்வரையில் மாத ஊதியத்தை வங்கிகணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாகவழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்துதமிழ்நாடு தலைமை செயலக சங்கதலைவர் ஜெ.கணேசன்
நேற்றுமுதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
மத்தியஅரசு கடந்த வாரத்தில் அறிவித்ததிட்டத்தால், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வசமுள்ள 500, 1000 ரூபாய்நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளில் தவம் கிடக்க வேண்டியகட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால்வெகுவாக அலுவலக பணியும் பாதித்துள்ளது.
சென்னைபோன்ற பெருநகரங்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்குடியிருப்பதற்கு போதிய அரசு வாடகைகுடியிருப்புகள் இல்லாததால், பெரும்பான்மையோர் தனியார் வீடுகளில்தான் குடியிருந்துவருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கான வாடகையானது ஒவ்வொருஅரசு ஊழியரின் ஊதியத்திலும் ஏறத்தாழ 25 சதவீதம் அளவிற்கு உள்ளது.
இதைத்தவிர, மாதந்தோறும் தங்களது குழந்தைகளுக்கான கல்விகட்டணம், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கான மருத்துவ செலவு, வீட்டு மளிகைபொருட்களை வாங்குவதற்கான செலவு உள்ளிட்ட செலவுகளைசெய்ய இயலாமல் உள்ளனர். தற்போது, சம்பளம் உள்ளிட்ட அனைத்து பணப்பட்டுவாடாக்களும் ஊழியர்களின் வங்கிகணக்கில்தான் வரவு வைக்கப்படுகின்றன.

தற்போதுள்ளவங்கி கட்டுப்பாடுகளால், மத்திய அரசின் வருமானவரித்துறைக்கு கணக்குக்களை முறையாக சமர்ப்பித்து, ஊதியத்தைபெற்றுவரும் ஊழியர்கள் தங்களது பண இருப்பைபெற இயலாமல் போகும் நிலைஉருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் முதல்ஜனவரி மாதம் வரையில் மாதஊதியத்தை வங்கி கணக்கில் வரவுவைக்காமல், ரொக்கமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

DSE PROCEEDINGS- 2012-13 English BT Regularsation Order

CCE Worksheet Exam Guidelines Proceeding - 4 க்கு குறைவான விடையளித்த மாணவர்களுக்கு குறைதீர்கற்பித்தல் உறுதி செய்ய வேண்டும் !!!*

சம்பளத்தை ரொக்கமாக கொடுங்க! : கோவா அரசு ஊழியர்கள் கோரிக்கை

பனாஜி: கோவா மாநில அரசு ஊழியர்கள், நடப்பு மாதத்துக்கான சம்பளத்தை, ரொக்கமாக தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, பிரதமர் மோடி அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்ற, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய நோட்டுகளை மாற்றவும்,
ஏ.டி.எம்.,களில் பணம் பெறவும், வங்கிகள் முன், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதால், மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது. இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர் தலைமையிலான ஆட்சி நடக்கும் கோவாவில், அரசு ஊழியர்கள், நடப்பு மாதத்துக்கான சம்பளத்தை, வங்கியில், 'டிபாசிட்' செய்வதற்கு பதில், ரொக்கமாக தரும்படி கோரியுள்ளனர். இது தொடர்பாக, முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகருக்கு, கோவா அரசு ஊழியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதே சமயம், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக வெளியான அறிவிப்புக்கு, அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் முயற்சி

போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை சிந்திக்க வைக்கும் வகையிலான வினாத்தாள்களை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, பல விதமான தேர்வுகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன. அத்துடன், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், உயர்கல்வியில் சேர, 'ஜே.இ.இ., - நீட் - கேட்' என, பல நுழைவுத் தேர்வுகளும் உள்ளன.
இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்தங்கியிருப்பதாக, கல்வியாளர்கள் பலர் புகார் தெரிவித்தனர். அதனால், நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை தொடக்கப் பள்ளியில் இருந்தே தயார் செய்ய, புதிய வினாத்தாள் முறையை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை, குழந்தைகள் தின விழாவிலேயே, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், புதிய வினாத்தாளை பயன்படுத்தி, சிறப்பு தேர்வுகள் துவங்கியுள்ளன.
இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது: மாணவர்கள் ஒவ்வொரு வினாவையும் புரிந்து, சிந்தித்து, விடையை தேர்வு செய்யும் வகையில், புதிய வினாத்தாளில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம் பெற்றுஉள்ளன. இந்த நடைமுறை, மூன்று பருவ தேர்வுகள் மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும். இந்த வினாத்தாளுக்கு, மாணவர்கள் தொடக்கப்பள்ளி முதலே பழகிவிட்டால், உயர்கல்விக்கு வரும் போது, போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

சென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்

சென்னை: 'தொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பல்லை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில்,
இளநிலை, முதுநிலை, தொழில் படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள், டிச., 10ல் துவங்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், தேர்வுகள் நடக்கும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். ஹால் டிக்கெட், டிச., 3ல், பல்கலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கான முழு கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விபரத்தை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSA-CRC மையம் மூலமாக இரண்டு கட்டமாக அறிவியல் கண்காட்சி 23.11.2016. & 24.11.2016- ல் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

தங்கள் பள்ளி எந்த நாட்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் BRT அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

நடுநிலைப் பள்ளிகள் நான்கு மாடல் செய்ய வேண்டும். 1 - 5. (2)  6 - 8. (2).


மாடல்கள் மாணவர்கள் செய்ய வேண்டும். செய்ததை கண்காட்சி அன்று மாணவர்கள் செய்து காட்டு விளக்குதல் வேண்டும்.

ஒரு மையத்துக்கு 10 பள்ளிகள் வீதம் கலந்து கொள்வார்கள்.

சிறப்பாக செய்த மாணவர்க்கு பரிசு உண்டு. பள்ளிக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

ஒரு மாடலுக்கு ரூபாய் 180. லிருந்து  300. வரை மைய தலைமை ஆசிரியர் வழங்குவார்.

CCE - worksheet important guide lines வழங்குதல் சார்பு.4 க்கு குறைவான விடையளித்த மாணவர்களுக்கு குறைதீர்கற்பித்தல் உறுதி செய்ய வேண்டும்

CCE- 1,2,4 science English medium question paper..


16/11/16

நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!’ பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை.

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால்,அங்கீகாரம் கிடையாது‘ என, அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.கலை மற்றும் அறிவியலில்,இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர,பி.எட்., என்ற ஆசிரியர் கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.கடந்த கல்வி ஆண்டுக்கு முன் வரை, இந்த படிப்பு, ஓராண்டு காலமாக நடத்தப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் புதிய பாடத்திட்டத்தின் படி, கடந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் பல கல்லுாரிகளில்,எம்.எட்., படிப்பும் நடத்தப்படுகிறது.‘இரண்டு ஆண்டு படிப்புகளை நடத்தும் வகையில்,

பல கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை; நிரந்தரகல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை‘ என,ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து,அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் கலைச்செல்வன் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில்,நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம். கல்லுாரிகளில்,

இரண்டு பிரிவு வகுப்புகள் என்றால், தலா, 50மாணவர் வீதம், இரு ஆண்டுகளுக்கு, 200மாணவர்களை சேர்க்கலாம். இதற்கு, 16ஆசிரியர்கள் கண்டிப்பாக நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல்,ஒரு பிரிவு வகுப்பு என்றால், 50 மாணவர் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு, 100மாணவர்களை சேர்க்கலாம். இந்த கல்லுாரிகளில், எட்டு பேர் நிரந்தர ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.இந்த ஆசிரியர்களின் பட்டியலை, பல்கலையில் ஆவணங்களுடன் அளித்தால் மட்டுமே,கல்லுாரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 4,000 -க்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணி நியமனம் எப்போது?

அரசுப் பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழக முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதியப் பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதைத் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்கிறது. மாற்றியமைக்கப்படும் புதியப் பாடத் திட்டம் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (நீட்) போன்ற போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் அமையும் என நம்புகிறோம். 

இதுபோல், பள்ளிகளில் நிர்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் தொய்வின்றி நடைபெற ஏதுவாக அனைத்து காலிப் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முன்வரவேண்டும். பள்ளிகளில் 4,265 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் காலிப் பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CPS NEWS : ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை.

ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை
கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில்,

அரசு ஊழி யர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் அலு வலக சிறப்பு பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமை யில் நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இக்குழுவினர் அரசு பணியாளர் சங்கங்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்பு, தங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் என ஓய்வூதிய ஆணையரகம் தெரிவித்திருந்தது. இதன்படி, நிபுணர் குழுவினரை ஓய்வூதிய ஆணையரக அதிகாரிகள்நேற்று சந்தித்தனர்.ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

EMIS ல் COMMON POOLல் எவரும் இல்லை, எந்த மாணவரும் பதியாமல் இல்லை. பதிவுகள் சரியானவை. என்று கல்வித்துறைக்கு தலைமையாசிரியர் சான்று அளித்து தரவேண்டிய படிவம்.

CCE Worksheet result analysis

குரூப் - 2 ஏ' கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவக்கம் - டிசம்பர் 4 வரை நடக்கிறது : .என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: 'குரூப் - 2 ஏ பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணிக்கு, 1,863 காலியிடங்களை நிரப்ப, ஜன., 24ல், 'குரூப் - 2 ஏ' எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூன், 8ல் வெளியாகின. வெற்றி பெற்றோருக்கு, ஜூலை, 4 முதல், 19 வரை, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை, சென்னையிலுள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும். அழைப்பு கடிதம் குறித்த விபரங்களை தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது கிடைக்கும் : வங்கி அதிகாரிகள் தகவல்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், 500 ரூபாய் நோட்டுகள், வங்கிகளில், இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பின், 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய, 500 ரூபாய் நோட்டுகளை, தமிழகத்திற்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. அது, 13ம் தேதி மாலை, சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது; ஆனால், இன்னமும் மற்ற வங்கிகளுக்கு சென்று சேரவில்லை. அதனால், 500 ரூபாய் நோட்டுகள், இன்று மாலை, சென்னையில் மட்டும் கிடைக்கும். மற்ற பகுதிகளில் கிடைப்பதற்கு, ஓரிரு நாட்கள் ஆகும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

CRC level science exhibition topics !!

1. உடல்நலம்
2. தொழில்துறை
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. நிலையான சுற்றுச்சூழலுக்கான புதுப்பிக்கத் தக்க வளங்களைக் கண்டுபிடித்தல்
5. உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள்
6.அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள்


Primary level - 2 models or 2 projects

Upper primary level -2 models or 2 projects.

CRC level prizes.
1st prize - 400
2 nd prize- 300
3 rd prize - 200

வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தற்போது வாட்ஸ் அப் வீடியோ கால் வசதி புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் இதுவரை குரல் அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ காலிங் அழைப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது.
உலக அளவில் வாட்ஸ் அப் சமூக வலைதளத்தை உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற இயங்குதளங்களால் ஆன போன் வைத்திருப்பவர்கள் இந்த வாட்ஸ் அப்பை உபயோகப்படுத்த முடியும்.

இதுநாள் வரை குரல் அழைப்பு வசதி மட்டுமே வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது. வீடியோ அழைப்பு வசதியை எப்போது ஏற்படுத்துவார்கள் என வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் தற்போது சோதனை முயற்சியாக வீடியோ காலிங் முறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ காலிங் வசதியானது தற்போது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் மட்டும் வேலை செய்வது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல ஆண்ட்ராய்ட், ஆப்பிள் போன்ற இயங்குதளங்களில் இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

15/11/16

பிளஸ் 2வில் சாதிக்கலாம்; ஆசிரியர்கள் ‘டிப்ஸ்’

தினமலர்’ நாளிதழ் சார்பில், ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, அவிநாசி, சந்திர மஹாலில் நேற்றுநடைபெற்றது. பத்தாம் வகுப்பு, பிளஸ்
2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிநேற்று நடந்தது. நேற்று மதியம், பிளஸ்அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்குஆசிரியர்கள், ‘டிப்ஸ்’ வழங்கினர்.


SECOND TERM SUMMATIVE ASSESSMENT – TIME TABLE STANDARD : IX

DATE
DAY
SUBJECT
09.12.2016
FRIDAY
LANGUAGE PAPER – I
10.12.2016
SATURDAY
LANGUAGE PAPER – II
14.12.2016
WEDNESDAY
ENGLISH PAPER – I
15.12.2016
THURSDAY
ENGLISH PAPER –II


17.12.2016
SATURDAY
SOCIAL SCIENCE
19.12.2016
MONDAY
MATHEMATICS
21.12.2016
WEDNESDAY
OPTIONAL LANGUAGE
22.12.2016
THURSDAY
EVS & PET
23.12.2016
FRIDAY
SCIENCE

SSLC HALF YEARLY EXAMINATION - DECEMBER 2016 TIME TABLE

DATE
DAY
SUBJECT
09.12.2016
FRIDAY
LANGUAGE PAPER – I
10.12.2016
SATURDAY
LANGUAGE PAPER – II
14.12.2016
WEDNESDAY
ENGLISH PAPER – I


15.12.2016
THURSDAY
ENGLISH PAPER –II
17.12.2016
SATURDAY
MATHEMATICS
19.12.2016
MONDAY
SCIENCE
21.12.2016
WEDNESDAY
OPTIONAL LANGUAGE
23.12.2016
FRIDAY
SOCIAL SCIENCE



HOURS :10:00 a.m. to 10:10.a.m - Reading the question paper
     10:10 a.m. to 10:15 a.m - Filling up of particulars in the answer sheet

      10:15 a.m. to 12:45 p.m - Duration of Examination