யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/16

நமது SPD மேடம் அவா்களின் ஆனைப்படி அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு 8.12.2016 அன்று கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.


நாளை முதல் கனமழை பெய்யும், ஆனா, வெள்ளம்லாம் வராது... நம்பிக்கை தரும் "வெதர்மேன்"

சென்னை: கடந்தாண்டைப் போலவே நாளை பெய்ய இருக்கும் கனமழையால் வெள்ளம் வரலாம் என யாரும் அஞ்சத் தேவையில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மழை என்று வந்து விட்டாலே பலருக்கும் ரமணன் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சமூக வலைத்தளவாசிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் போடும் பதிவுகள்தான் நினைவுக்கு வரும். கடந்தாண்டு சென்னை வெள்ளம் வந்த போது அவர் போட்ட பதிவுகள் பலருக்கும் உதவி செய்தது. எனவே, இந்தாண்டும் இவரது பேஸ்பும் பக்கத்தை பலரும் கவனித்து வருகின்றன.
இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்தாண்டும் இதே டிசம்பர் 1ம் தேதி கனமழை பெய்ததால் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டும் அதே நாள் கனமழை பெய்ய இருப்பதால் மக்கள் மத்தியில் வெள்ளம் குறித்த பீதி அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த பீதி தேவையற்றது, தேவையற்ற புரளிகளைப் பரப்ப வேண்டாம் என தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் முதல் காற்றழுத்த தாழ்வு நிலை இதுதான். முன்பு உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகளும் வேறு திசையில் நகர்ந்ததால், தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவியது.
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, டிசம்பர் 1ம் தேதி தமிழ்நாடு கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது டிசம்பர் 1 அல்லது 2ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்கலாம். அப்போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.
சென்னை வரலாற்றில், இந்த நவம்பர் மாதம்தான் மிகவும் வறட்சியான மாதமாக பதிவாகியுள்ளது. ஆனால், அதே சமயம், இந்த டிசம்பர் 1ம் தேதி பெய்யும் கன மழை காரணமாக நிச்சயம் வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த ஆண்டைப் போல வெள்ளம் ஏற்படும் என்று புரளியை நம்ப வேண்டாம்.
அதே சமயம், சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும். கடலூர் முதல் புதுசேரி வரையில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்.
டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். படிப்படியாக அடுத்தடுத்து நாட்களில் மழை குறையும். 2 மற்றும் 3ம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMHJbWiuAbLSvmsFvCjXuLxHaQ9hc4bgKkJOVQI4QSJyWBJaw_RG6tVCo03A4S7nNKuUM_B-ONnXkgZh3mtD-FjMAXaWSa_jcfI7n6WGzZgi37jJws9jUD-k6f_l05dWbQ9rggOZemV48/s320/IMG-20161129-WA0365.jpg

டெல்லி ஜந்தர்மந்தரில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்

செல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது

புதுடில்லி:'வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம், போதிய பண இருப்பு உள்ளதால், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின், நீட்டிக்கப்படாது' என, மத்திய அரசு கூறியுள்ளது. 
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால்எழுத்து மூலம் அளித்த பதில்:வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்புள்ளன. 100 ரூபாய்நோட்டுகளை வினியோகிக்கும் பணிகள், ஏற்கனவே துவங்கிவிட்டன. வங்கிகளில் செல்லாத நோட்டுளை டிபாசிட் செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின் நீட்டிக்கப்படாது. 


சிறிய தொகை

கிராமப் பகுதிகளின் தேவைகளுக்காக, 100ரூபாய் போன்ற சிறிய தொகை நோட்டுகளை சப்ளை செய்யும்படி, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், ராஜ்யசபாவில் அளித்த மற்றொரு பதிலில், ''வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவைக்கேற்ப அதிகரிக்கும்படி, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது,'' என்றார்.

பஸ் ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்

சென்னை: அரசு பஸ் ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாயை, ரொக்கமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. 
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகத்தில், 1.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காரணமாக, இந்த மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும்
என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாய் மட்டும் ரொக்கமாக வழங்க, போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதில், மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும், 22 ஆயிரத்து, 400 ஊழியர்கள் பயனடைவர். அவர்கள், ஒரு வாரத்திற்கு, ஏ.டி.எம்.,களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்

ஆதிதிராவிட இளைஞர்களுக்கு நிதியுதவி

சென்னை:நிதியுதவி பெற விரும்பும், ஆதிதிராவிட இளைஞர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பட்டய கணக்கர், செலவு கணக்கர் தேர்ச்சி பெற்ற, ஆதிதிராவிட இளைஞர்கள், சுயமாக தொழில் செய்ய, நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, நிதியுதவி பெற விரும்புவோர், http://application.tahdco.com என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அரசு பள்ளிகளுக்கு 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்'

சிவகங்கை: தமிழகம் முழுவதும் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தில் அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கழிப்பறைகள் பராமரிக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயினும் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன.
இதனால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்கவும், சிறப்பாக பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தவும் மாநில புதுமை நிதி மூலம் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தை செயல்படுத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.முன்னோடி திட்டமாக மாவட்டந்தோறும் சிறப்பாக கழிப்பறைகளை பராமரிக்கும் ஆறு பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஒன்பது பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பள்ளி கழிப்பறைகள் நவீனப்படுத்தப்படும்.
ஆண், பெண் கழிப்பறைகளுக்கு தனித்தனியாக 2 ஜன்னல்கள், கதவு, கை கழுவுமிடம், கண்ணாடி, சோப்பு, டவல், கழிப்பறை சுவர்களில் வண்ணமயமான சித்திரங்கள், தண்ணீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்படும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு பள்ளிகளை தேர்வு செய்து, மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி

1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும். 
2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிறது அதிகாரிகள் குழு

வேலூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் இதுவரை 64 சதவீதம் பேர் ஆதார் அட்டை எண்ணை இணைத்துள்ளனர். எஞ்சிய அட்டைதாரர்களை இணைப்பதற்காக அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வீடுவீடாக ஆய்வு செய்யும் பணியை புதன்கிழமை தொடங்குகிறது.

சுமார் 10.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட வேலூர் மாவட்டத்தில், அரக்கோணம் வட்டத்தில் 151 கடைகள், நெமிலியில் 115 கடைகள், வாலாஜாவில் 186, ஆற்காட்டில் 159, காட்பாடியில் 184, வேலூரில் 164, அணைக்கட்டில் 105, குடியாத்தத்தில் 114, பேர்ணாம்பட்டில் 96, ஆம்பூரில் 143, வாணியம்பாடியில் 123, நாட்டறம்பள்ளியில் 85, திருப்பத்தூரில் 190 கடைகள் என 1,815 நியாய விலைக் கடைகளில் செயலி முறை பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு செயலியை இயக்க மாவட்டத்தில் 8 மையங்களில் செயல்முறை பயிற்சி அளிக்கப்
பட்டுள்ளது.
 நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் செயலியில் குடும்ப அட்டையில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர், ஆதார் எண், செல்லிடப்பேசி போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படுவதுடன், பொருள்கள் வாங்கிய விவரம், குடும்பத் தலைவரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.
 இந்தத் திட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இதுவரையில் 64 சதவீத அட்டைதாரர்கள் தங்களது ஆதார் எண், செல்லிடப்பேசி விவரங்களை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்துள்ளனர்.
 ஆதார் அட்டை எடுக்கத் தவறியவர்களுக்கு அட்டை எடுக்கும் பணி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் சுமார் 50,000 பேர் இணைந்துள்ளனர்.
 மாவட்டம் முழுவதிலும் உள்ள 13 வட்டங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மண்டலக் குழுவானது, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, ஆதார் அட்டையை நியாய விலைக் கடைகளில் இணைக்கும் முயற்சி எடுக்கவுள்ளது.  
இதுகுறித்து பொதுவிநியோகத் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம், போலி கார்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண், செல்லிடப்பேசி விவரம் இணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
 நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைக்காத உறுப்பினர்களை இணைப்பதற்காக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை முதல் தொடங்கி சில நாள்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 நியாய விலைக் கடையில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினரின் ஆதார் அட்டை இணைக்க முடியாதவர்களின் பெயரை நீக்கம் செய்வதோ, பொருள்கள் வழங்குவதோ நிறுத்தப்பட மாட்டாது என்றார்.

லஞ்ச வழக்கு: ஊரீசுக் கல்லூரி செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலூர் ஊரீசுக் கல்லூரியில் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்லூரியின் செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர், அண்ணா சாலையில் சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் செயல்படும் ஊரீசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பேராயர் ராஜவேலு, அப்போதைய கல்லூரி நிதியாளுநரும், தற்போதைய பொறுப்பு முதல்வரான எழில்கிறிஸ்துதாஸ் உள்பட 9 பேர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு, கல்லூரி நிர்வாகத்துக்கு திங்கள்கிழமை அனுப்பிய உத்தரவில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேராயர் ராஜவேலுவை, கல்லூரிச் செயலர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்து, நிர்வாகக் குழுவைக் கூட்டி மாற்றுச் செயலரை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல, பொறுப்பு முதல்வர் எழில்கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் அவரை புதன்கிழமை (நவ.30) பணி ஓய்வு பெற அனுமதிக்கக் கூடாது. மேலும் வழக்கு முடிவடையும் வரையில் அவருக்குச் சேர வேண்டிய பணி பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொறுப்பில் இருந்து எழில்கிறிஸ்துதாஸ் செவ்வாய்க்கிழமை விலகினார்.
கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள உத்தரவு குறித்து பேராயர் ராஜவேலுவின் கருத்தை அறிய தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

டாக்சி டிரைவரின் வங்கி கணக்கில் ரூ.9806 கோடி அதிர்ச்சியில்...

டாக்சி டிரைவரின் வங்கி கணக்கில் ரூ.9806 கோடி அதிர்ச்சியில்...

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங், டாக்சி டிரைவர். இவருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் கணக்கு உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இவரது வங்கி கணக்கில் 98,05,9510,231 ரூபாய் கணக்கு வரவு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மறு நாளே அவர் கணக்கில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இது குறித்து பல்வீந்தர் சிங் பலமுறை வங்கியில் சென்று கேட்டும் எந்த பதிலும் இல்லை.தற்போது இது தொடர்பாக வருமான வரிசோதனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பல்வீந்தர் சிங் கூறியதாவது:-

நான் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் கணக்கு தொடங்கினேன். எனது கணக்கில் மொத்தம் ரூ.3 ஆயிரம் இருந்தது.எனது கணக்கில் ரூ.9806 கோடி வரவு வைக்கபட்டது தொடர்பாக பல முறை வங்கிக்கு சென்றேன் ஆனால் யாரும் எந்தவித பதிலும் சொல்ல வில்லை.

அதே சமயம் எனது பழைய பாஸ் புக்கை வாங்கி கொண்டு 7 ந்தேதி புதிய பாஸ் புக் வழங்கினார்கள்.ஆனால் அதில் ஏற்கனவே எனது கணக்கில் வரவு வைக்கபட்ட 9806 கோடி கணக்கு விவரம் எதுவும் இல்லை.

வங்கியின் கிளை மேலாளர் ரவீந்தர் குமார் எந்த வித தகவலும் என்னிடம் கூற மறுத்து வந்தார்.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வங்கியின் மேலாளர் குறிப்பிடும் போது இது தவறுதலாக பதிவு செய்யபட்டு உள்ளது. மறுநாள் அது சரிசெய்யப்பட்டு விட்டது

இனி பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாதா? மகிழ்ச்சி தகவல்

இனி பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாதா? மகிழ்ச்சி தகவல்

கடந்த 9 ஆம் தேதி முதல் வங்கிகளில் பணம் எடுக்க மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

அதன்படி, இனி வங்கியில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது மற்றும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி, வாரத்திற்கு ஒருவர் ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும், இந்த தொகையும் பல தடவை பிரித்து எடுக்கவே அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், அவசர தேவைக்கு பணம் இல்லாமல் சிரமத்திற்கும் மக்கள் ஆளாகினர். இதனால், பலர் பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய யோசித்தனர்.

இதற்கிடையில், செல்லாமல் போன பழைய ரூபாய் நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்பட்டால் தான், மீண்டும் மக்களிடம் பணம் புழக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற முடிவு செய்த மத்திய அரசு, இது குறித்து நேற்று உயர் மட்ட ஆலோசனையில் ஈடுபட்டது.

 இதன் பிறகு வங்கிகளில் பணம் எடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவும் எடுக்கப்பட்டது.

அந்த முடிவை ரிசர்வ் வங்கி நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதன்படி இன்று (29-ந் தேதி செவ்வாய்க்கிழமை) முதல் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்படி பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று முதல் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் பெற வழி ஏற்பட்டுள்ளது.

சில வங்கிகளில் இந்த நடைமுறை இன்றே அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் கேட்ட கூடுதல் பணத்தை வழங்கினார்கள்.

அதே சமயம், வங்கிகளில் போதிய பணம் இல்லாததால், மக்களுக்கும் தற்போது சிறு சிறு தொகையாகவே வழங்கப்படுவதாக, சில வங்கிகள் தெரிவித்துள்ளன.

ஜியோவின் அதிரடி

சென்னை: சேவையை தொடங்கிய 3 மாத காலத்தில் 5 கோடி வாடிக்கையாளர்களை கடந்து ஜியோ நிறுவனம் சாதனை புரிந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தனது 4G சேவையைத் தொடங்கியது.

ஜியோ தனது சேவையை ஆரம்பித்து மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில், தற்போது 5 கோடி வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.

ஒரு நாளைக்கு 6 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் தன் சேவைக்குள் இணைத்ததாக கூறப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனத்துக்கு 5 கோடி வாடிக்கையாளர்களை கடக்க 12 ஆண்டுகளும், வோடாபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 13 ஆண்டுகளும் ஆன நிலையில்

 ஜியோ நிறுவனம் இந்த சாதனையை 3 மாதங்களில் நிகழ்த்தி காட்டியுள்ளது குறைந்த காலத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களை தனது சேவைக்குள் கொண்டு வருவதே ஜியோவின் இலக்கு என்று அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறி இருந்தார்.

நொடிக்கு 58 கி.மீ வேகத்தில் காற்று : இது டிசம்பர் மாத எச்சரிக்கை அதிர்ச்சி தகவல்

நொடிக்கு 58 கி.மீ வேகத்தில் காற்று : இது டிசம்பர் மாத எச்சரிக்கை அதிர்ச்சி தகவல்

சென்னை, நவ.29 (டி.என்.எஸ்) கடந்த ஆண்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளை தண்ணீரில் தத்தளிக்க வைத்த டிசம்பர் பேய் மழையை யாராலும் மறந்திருக்க முடியாது.

100 வருடங்களுக்குப் பிறகு பார்த்த அத்தகைய கன மழை தற்போது மீண்டும் வரும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பு இருப்பதால், மக்கள் சற்று பீதியடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கையும், மக்களிடம் நல்லா கிளப்புகிறது பீதியை.

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்வதோடு, நொடிக்கு 58 கி.மீ வேகத்தில் காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாளை முதல் தமிழக மீனவர்கள் யாருடம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் உடனடியாக கரைக்குத் திரும்புங்கள், என்று தெரிவித்துள்ளார்.

ஆக, கடந்த ஆண்டு டிசம்பர் சம்பவம் இந்த ஆண்டும் நிகழும் போல!

மது மயக்கத்தில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் : அதிர்ச்சி செய்தி

மது மயக்கத்தில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் : அதிர்ச்சி செய்தி

கன்னியாகுமரி மாவட்ட  ஆசிரியர் மது அருந்திவிட்டு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருதங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு அரசு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்து பாடம் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், தமிழ் ஆசிரியர் சுரேந்திரன் என்பவர் பள்ளி மாணவிகளிடம் மிகவும் ஆபாசமான வார்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற தொடர் சம்பவங்களால் கோபம் கொண்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் குழித்துறை கல்வி மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் மற்றும் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அப்துல் கலாம் நினைவிடத்தில் வெண்கல சிலை அகற்றம்

அப்துல் கலாம் நினைவிடத்தில் வெண்கல சிலை அகற்றம்


ராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடப்பதால், அங்கிருந்த கலாம் வெண்கல சிலை அகற்றப்பட்டுள்ளது.


ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சமாதி உள்ளது. ஜூலை 27ல், சமாதி முன், 6 அடி உயரத்தில் அப்துல் கலாம் வெண்கல சிலை நிறுவி, நினைவிடம் அமைக்க மத்திய அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.

இந்நிலையில், 15 கோடி ரூபாய் செலவில், நினைவு மண்டபம் அமைக்கும் பணி, முழுவீச்சில் நடப்பதால், இதற்கு இடையூறாக இருந்த கலாம் வெண்கல சிலையை அகற்றி, பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.

சிலை இருந்த பீடம், அடித்தளத்தை இடித்தனர்.அப்பகுதியில், கட்டுமானப் பொருட்கள் குவிந்து கிடப்பதால், அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள், நுழைவாயில் முன், கலாம் சிலை இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

8 வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவருக்கு வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், புதன்கிழமை (நவ.30) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை பெற்றுத் தரும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்
அவ்வப்போது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்
நடத்தப்படுகின்றன.


அதன்படி, புதன்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முகாம் தொடங்குகிறது.

இந்த முகாமில், கோவை, சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான இளைஞர்களை தேர்வு
செய்கின்றனர்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள், ஐடிஐ, பட்டயம், பி.எட்., படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜந்தர்மந்தரில் அனைத்திந்திய ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

TET Genuineness Apply Form

Important GO Details

அரசானைகள் GO'S

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.


1.G.O.No. 270  Dt : OCTOBER 22, 2012
பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

2.G.O.No. 229 Dt : செப்டம்பர் 4, 2012
அரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல்

3.G.O.No. 123 Dt : may 17, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை

4.G.O.No. 178 Dt : July 12, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை

5.G.O.No. 270 Dt : July 10, 2012
பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல்

6.G.O.No. 264Dt : July 6, 2012
CCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை

7.G.O.No. 243 Dt : June 29, 2012
புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல்

8.G.O.No. 96 Dt : June 18, 2012
திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல்

9.G.O.No. 140  Dt : June 11, 2012
2012 - 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-2012

10.G.O.No. 133  Dt : June 14, 2012
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-2012

11.G.O.No. 203 Dt : June 8, 2012
INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government - Interest rates for the year 2012-2013 2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம்

12.G.O.No. 123  Dt : may 17, 2012
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்

13.G.O.(Ms).No.139 Dated: 27.4.2012.
NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION Rs 75-EFFECT FROM 11.06.2012 -GO No139

14.G.O.(Ms).No.56 Dated: 24.4.2012.
B.Ed Special Educaton is equivalent to B.Ed General Education

15.Lr No 35574  Dated: 23.4.2012.
CPS-Mode of recovery of subscription and arrear amount-clarification

16.G.O Ms. No. 20309/12/2011
முப்பருவ தேர்வுமுறை முதல் அமல் -

17. G.O Ms. No. 21223/12/2011
அரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை :

18.G.O Ms. No. 193 02/12/2011
2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக

19.G.O Ms. No. 190  29-11-2011
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.

20. G.O Ms. No. 325    28-11-2011
அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்-

21.GO MS No-325 Dated the 28/11/2011Lr No. 59617 /CMPC 2011 DT 25-11-2011
HIGHER SECONDARY SCHOOL HM/DEO - FIXTATION OF PAY OF IN THE SELECTION GRADE -CLARIFICATION

22.G.O Ms. No. 177 11-11-2011
பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS No-177 Dated the 11/11/2011

23.G.O Ms. No. 175   08-11-2011
முதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS No-175 Dated the 8/11/2011

24.G.O Ms. No. 29421-10-2011
பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS No-294 Dated the 21th october 2011

25.G.O Ms. No. 994  20-10-2011
அரசு பொது விடுமுறை நாட்கள் -2012-GO MS No-994 Dated the 20th october 2011

26.G.O Ms. No. 273   03-10-2011
1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை

27.G.O Ms. No. 141  13-09-2011
பள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் - தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/2011

28.G.O Ms. No. 141   13-09-2011
10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்

29.G.O Ms. No. 112     28-07-2011
சாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை

30.G.O Ms. No. 51  16-06-2011
மகப்பேறு விடுப்பு - 180 நாட்கள் amendment

31.G.O Ms. No. 51  16-05-2011
மகப்பேறு விடுப்பு - 180 நாட்கள்

32.G.O Ms. No. 58    February 25, 2011
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை

33.GO No23 dated:12 –01—2011
Revised Fixation of pay for teachers –2010வருட அரசாணைகள்

34.Letter No.63305 dated: 08 –11—2010.
Fixation of pay of employees in the Selection Grade / Special Grade –

35.G.o No 391 dt 7/10/2010
மாற்று திறனாளிகளின் ஊர்தி படி ரூ 300 லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தி அரசு ஆணை

36.G.o No 240 dt 18/8/2010
மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான கல்வி தகுதிகள்

37.GO.MS.NO-270 Dated-26-08-2010
implementation of one man commision38.GoMs.No 116 Dt 18/08/2010Openuniversity-pg degree not valid for Govt.service39.Go.no175Dt18/06/2010Withdrawal of acquittance for salaries credited in bank through-order issued ECS

40.Go ms no 157 Dt.10-06-2010
30 upgraded Hr.Sec.School List41.GO No 128 Dt 05/07/201010 day ALM training-reg

42.GO.MS.NO-154 Dated-10/06/2010
Upgraded Hr.Sec.School list 2010

43.GO.MS.NO-143 Dated-21/05/2010
Upgraded Hr.Sec.School list 2010

44.GO.NO-131 Dated-28/04/2010
ஆசிரியர் பொது மாறுதல்-நெறிமுறைகள்-2010 -1145.GO No 96 Dt 22-03-2010temporary Post Continuation Order -2007-2009 upgraded schools-order issued up to 30/06/20112009வருட அரசாணைகள்

46.GO No.445 dated: 10–09—2009.
House Building Advance - Rate of interestLr No.29593 dated: 25–08—2009.இறந்த அரசு ஊழியருக்கு CPS தொகை வழங்குவது தொடர்பான விளக்கம்

47.Letter No.38561 dated: 16 –11—2009.
B.Sc Bio-chemistry is not equivalent to B.Sc Chemistry2007வருட அரசாணைக

48.Lr NO 356 Dated: 2-11-2007
முன் அனுமதியின்றி எம்.பில் முடித்தமைக்கு பின் ஏற்பு

49.Go NO 31 Dated: 06-02-2007
அரசு தேர்வுகளை நடத்த முதன்மை கண்காணிப்பாளராக வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம்.2006வருட அரசாணைகள்
50.GO NO 120 Dated: 18-07-2006
1-1-2006 முதல் தகுதிகாண் பருவம் துவங்குதல் குறித்து ஆணை

51.GO NO 99 Dated: 27-06-2006
1-1-2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கல்

52.GO NO 73 Dated: 23-06-2006
வேலை நிறுத்த காலம்-பணிக்காலமாக வரன்முரைபடுத்தும் ஆணை

53.GO NO 73 Dated: 17-11-2006
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு எழுதவேண்டிய துறைதேர்வுகள் ஆணைDOWNLOADS2006 க்கு முந்தைய அரசாணைகள்

54.GO Ms No.11 dated: 09–02—2004.
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் -ஒய்வு பெரும் நாள் -பணி நீட்டிப்பு இல்லை

55.G.O.No.1144 Dt : dec 13, 1993
பள்ளிக்கு வருட இடையில் எந்த நிகழ்ச்சிக்காகவும் அரசுவிடுமுறைவிட்டாலும் பள்ளிவேளைனாட்களில் குறைவு ஏற்ப்படகூடாது என்பதர்க்கானா அரசு ஆணை

56.GO Ms No.71 dated: 06–06—2002.
B.Sc(Bio-Chemistry) With B.Ed Physical science Eligible for B.T Science

57.GO Ms No.504 dated: 02 –11—2000.
Special Provident fund Scheme -2000 –click hereSpecial Provident fund Scheme -2000 rules
DOWNLOADTamilnadu education rules

58.GO.MS.NO-164 Dated-21/08/2000
M.Sc Applied chemistry is equivalent to M.Sc Chemistry

CCE - Worksheet 3 | Maths [English Medium] Question Papers.

29/11/16

தொடக்கக் கல்வி - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு 2016 - விண்ணப்பங்கள் வரவேற்பது சார்ந்த இயக்குனரின் செயல்முறைகள்

கணக்குல காட்டிட்டா 50% வரி... கண்டுபிடிச்சா 85% வரி.. வருமானவரிச் சட்டத்தில் திருத்தம்

கணக்கில்காட்டாத பணத்திற்கு அதிக வரி விதிப்பதுதொடர்பாக புதிய வருமானவரிச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாதுஎன்ற அறிவிப்பிற்கு பின்னர், ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொண்டு அதற்கேற்ப வரிவிதிப்புகளைசெயல்படுத்த புதிய வருமானவரிச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடும்அமளிக்கிடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த8ம் தேதி இரவில் இருந்து500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாதுஎன்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு பழைய நோட்டுக்களைவங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்பவர்கள்கணக்குக் கேட்கப்படும் என்றும், கணக்கு சரியாக இல்லைஎன்றால் கறுப்புப் பணமாக கருதப்படும் என்றும்அறிவிக்கப்பட்டது. அப்படி கணக்கில் காட்டாதகறுப்பு பணத்திற்கு 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்என்றும் வருமான வரித்துறை அறிவித்தது. பின்னர், இந்த அறிவிப்பை செயல்படுத்ததற்போதுள்ள வருமான வரி சட்டத்தில்உரிய அங்கீகாரம் இல்லை. எனவே இந்தமுடிவை மத்திய அரசு கைவிட்டது.
கறுப்புபணம் வைத்திருப்பவர்கள் மீது கூடுதாக வரிகளைவிதிப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்கள்காரணமாக புதிய வருமானவரி சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய மத்திய அரசு முடிவுசெய்தது. அதன்படி, இன்று லோக்சபாவில் இந்தமசோதாவை மத்திய நிதி அமைச்சர்அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
ரூபாய்நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்க்காலக் கூட்டத்தில் கடும் அமளி நிலவிவரும் சூழ்நிலையில் லோக்சபாவில் இந்த மசோதா தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வருமானவரி சட்டத்திருத்த மசோதாவின் படி, வருமானத்தை கணக்கில்காட்டாமல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் தொகைக்கு 30 சதவீதம் வருமான வரிவிதிக்கப்படுகிறது. மேலும், அபராதமாக 10 சதவீதவரி விதிக்கப்படுகிறது. இதுபோக 30 சதவீத வரி மீது33 சதவீத செஸ் வரியும் விதிக்கப்படும். இவை அனைத்தையும் கூட்டினால், அதன் மதிப்பு கணக்கிற்குமீறியுள்ள பணத்தில் 50 சதவீதமாகும். இந்த தொகையில், 25 சதவீதம்பிரதமரின் ஏழைகள் நலன் வைப்புதிட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். நாட்டில் குடிநீர், சாலை போன்ற அடிப்படைவசதிகளை அமைக்க அந்த கருப்புபணத்தை அரசு பயன்படுத்தும்.
அதேவேளையில், எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என நினைத்துக்கொண்டு வருமானத்திற்குஅதிகமாக பணம் சேர்த்துள்ளதை மறைத்தால், வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கும்போது, கணக்கில் வராத வருமானத்திற்கு 75 சதவீதம்வரியும், 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், இந்த வருமானத்தின் ஒருபகுதியை நான்காண்டுகளுக்கு வங்கியில் இருந்து எடுக்க முடியாது. எனவே சிக்கினால் 85 சதவீத வரியும், தானாகஅறிவித்துவிட்டால் 50 சதவீத வரியோடும் தப்பிவிடலாம்.
முன்னதாகஇந்த மசோதா குறித்து முடிவுஎடுக்க பிரதமர் நரேந்திர மோடிதலைமையில் கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Directorate of Government Examinations - National Talent Search Examination (NTSE)- November 2016 - Tentative Key Answer...

20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் சிக்கல்!

500, 1000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலிஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது  ஊதியத்தைபெறுவதில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கடும்சிக்கல்களை ஏற்படுத்தும்.

இதனால்தமிழக அரசின் பதிலை எதிர்பார்த்து20 லட்சம் பேர்
காத்திருக்கின்றனர்.

DSR:அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு.

அரசு ஊழியர்களின் பணி பதிவேடு டிஜிட்டல்மயமாகிறது. கருவூலங்களில் இது கணினியில் பதிவுசெய்யப்படும்.அனைத்து சார்நிலை கருவூலங்களிலும், மாவட்ட கருவூலங்களிலும் அரசு
ஊழியர்களின் பணிபதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த முறையில் பணி பதிவேட்டின் பக்கங்கள்ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறுஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் ஒரு பிரிண்ட்அவுட் வழங்கப்படும். அதனை அரசு ஊழியர்கள்கவனமாக சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் உடன் சரி செய்யவேண்டும்.
இப்பணிமுடிந்தபின்னர் பணி பதிவேடு ‘டிஜிட்டல்சர்வீஸ் ரெஜிஸ்டர்’ என்று அழைக்கப்படும்.இந்தடிஜிட்டல் மயத்திற்காக பணி பதிவேட்டில் உள்ளமுதல் பக்க சுய விபரம்மற்றும் புகைப்படம், பணி நியமன ஆணைபதிவு செய்யப்பட்ட விபரம், பணி வரன்முறைதகுதிகாண் பருவ பதிவுகள், அனைத்துகல்வி தகுதிகள் சார்ந்த பதிவுகள், கல்விதகுதிகளின் உண்மை தன்மை சார்ந்தபதிவுகள், ஜிபிஎப், சிபிஎஸ் திட்டங்களில் சேர்ந்தமைசார்ந்த பதிவுகள், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர் கல்வி பயிலமுன்பு அனுமதி பெறப்பட்ட பதிவுகள், பணியிட மாறுதல், பதவிஉயர்வு சார்ந்த பதிவுகள், ஊதியநிர்ணயம், தேர்வு நிலை, சிறப்புநிலை, ஊக்க ஊதியம் சார்ந்தபதிவுகள், பல்வேறு வகையான விடுப்புபதிவுகள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசுநியமன படிவங்கள் போன்றவை இவற்றில் சரிபார்க்கப்படும்.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர்கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘பள்ளி கல்வித்துறையில் பணி பதிவேட்டை டிஜிட்டல்மயமாக்கும் போது கடைபிடிக்க வேண்டியவழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

பதிவுகளைஒருமுறை தனி கவனம் செலுத்திஆய்வு செய்த பின்னர் பணிபதிவேடுகளை பாதுகாப்பான முறையில் அந்தந்த கருவூலங்களில் சென்றுடிஜிட்டல் மயமாக்கும் பணியை நிறைவு செய்யதலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிடமுதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் இதற்கெனஒரு பதிவேடு தொடங்கி ஒவ்வொருநாளும் இப்பணியை நிறைவு செய்த பள்ளிகள்சார்ந்த விபரங்களை பதிவு செய்து கண்காணித்திடவேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு

அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம்போல வங்கி
கணக்கில் செலுத்ததமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பண கட்டுப்பாடு
தமிழகத்தில்14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும்உள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் மாதந்தோறும்30-ந்தேதி பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோன்றுஇந்த மாதமும் வங்கி கணக்கில்பணம் செலுத்துவதற்கு தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அன்றைய தினமே அவர்கள்பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இதுகுறித்துஎன்.ஜி.ஓ. சங்கதலைவர் சண்முகராஜாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

வங்கி கணக்கு மூலம் அரசுஊழியர்களுக்கு சம்பள தொகையும், ஓய்வூதியதாரர்களுக்குபென்சன் தொகையும் வழக்கம் போல் வங்கிகணக்கு மூலம் 30-ந்தேதி வழங்கப்பட உள்ளது.

வங்கிகளில்ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமேபணம் எடுக்க முடியும் என்றுகட்டுப்பாடு உள்ளது. இதனை தளர்த்தினால்மட்டுமே ஒட்டுமொத்த தொகையையும் எடுக்க முடியும்.

ரிசர்வ்வங்கிக்கு கோரிக்கை
அரசு ஊழியர்கள் மாத தொடக்கத்தில் வீட்டுவாடகை, மளிகை செலவு, பால்செலவு போன்ற குடும்ப செலவுகளைமேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவேஅரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத் தொகையையும் ரிசர்வ்வங்கி வழங்க அனுமதிக்க வேண்டும்என்று கோரிக்கை விடுகிறோம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

விடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக குறைப்பு

சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு (அரைச்சம்பளவிடுப்பு) எடுக்கும், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குவீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்,
ஆசிரியர்களுக்கு அரைச்சம்பள விடுப்பாக 90 நாட்கள் எடுக்க அனுமதிஅளிக்கப்படுகிறது.
பத்து ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு 180 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த விடுப்புஎடுப்போருக்கு அடிப்படை ஊதியத்தில் அரைச் சம்பளம் மட்டுமேவழங்கப்படும். ஆனால் வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி முழுமையாக தரப்படும். தற்போது அடிப்படை சம்பளம்போன்றே படிகளையும் பாதியாக குறைத்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பலர்தொலை துார கல்வி மூலம்பல்கலைகளில் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., ல் 90 நாட்கள்ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சிக்காக ஆசிரியர்கள் அரைச்சம்பள விடுப்பு எடுத்து வந்தனர். தற்போதுபடி பாதியாக குறைக்கப்பட்டதால் மொத்தசம்பளத்தில் 50 சதவீதம் வரை பாதிப்புஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நவம்பர் மாத சம்பள கோரிக்கை, அரசு ஊழியர்கள் அதிருப்தி

நவம்பர்மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் விடுத்தகோரிக்கைக்கு, அரசு தரப்பில், எந்தபதிலும்
அளிக்கப்படவில்லை; இது, அரசு ஊழியர்களுக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகள் மற்றும்ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்க, மக்கள்நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, நவ., மாத சம்பளத்தை, ரொக்கமாகவழங்க வேண்டும் என, அரசு ஊழியர்மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று, அரசு அலுவலகஉதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்சங்க நிர்வாகிகள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலரை சந்தித்து, மனுகொடுத்தனர்; ஆனால், எந்த பதிலும்தெரிவிக்கப்படவில்லை. வழக்கம் போல், வங்கிக்கணக்குகளில் தான், சம்பள பணம்போடப்படும் என்பதால், அரசு ஊழியர்கள் அதிருப்தியடைந்துஉள்ளனர்.

வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் தளர்வு

வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போதுவாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரைஎடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாகவங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்யவாடிக்கையாளர்கள்
தயங்கியதாக தெரியவந்தது.
எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில்கொண்டு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கி கணக்கில் இருந்துவாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டைதளர்த்தி ரிசர்வ் வங்கி நேற்றுஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, தற்போது வரையறுக்கப்பட்டுள்ள தொகையை (ரூ.24 ஆயிரம்) விட கூடுதல் தொகையை எடுத்துக்கொள்ளஅனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுஇருக்கிறது. அப்படி எடுக்கும் போதுஅந்த தொகை 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக கிடைக்கும்என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துஇருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாதஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல்,
பணத்தட்டுப்பாட்டைபோக்கும் வகையில் சுமார் 200 கோடிமதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மையங்களில் நிரப்பப்படவுள்ளன.
புழக்கத்தில்இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதியரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
மத்தியஅரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்துவங்கி ஏடிஎம் மையங்களில் இருந்துபணம் எடுக்க அதிகளவில் மக்கள்வருவதால் பெரும்பாலான மையங்கள் பணம் இன்றி மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட புதிய500 ரூபாய் நோட்டுகள் ஒரு சில இடங்களைத்தவிர்த்து, பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் புழக்கத்துக்கு கொண்டுவரப்படவில்லை. வங்கி ஏடிஎம் மையங்களில்குறைவான தொகைதான் பெற முடியும் என்பதோடு, பணமின்றி பெரும்பாலானவை மூடப்பட்டிருப்பதால் மாநிலம் முழுவதிலும் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாகவழங்க வேண்டுமென அரசு ஊழியர் அமைப்புதொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் மட்டும்சுமார் ஒரு லட்சம் அரசுஊழியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதியம்வழங்க இன்னும் ஒரு நாள்மட்டுமே உள்ளதால் பணத் தட்டுப்பாடு நிலைமையைவங்கிகள் எப்படி சமாளிக்கப் போகின்றனஎன்ற கேள்வி மக்கள் மத்தியில்நீடித்து வருகிறது.
இதுகுறித்துமாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரனிடம்கேட்டதற்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்ஊதியத்தை வங்கி ஏடிஎம் மையங்களில்எடுக்க அதிகமானோர் வரக் கூடும் என்பதால், அதனை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு வரப்பெற்றுள்ள500 ரூபாயில் சுமார் 200 கோடி மதிப்பிலான 500 ரூபாய்நோட்டுகள் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்படவுள்ளன.
மாவட்டம்முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்களில்வருகிற புதன்கிழமை (நவ.30) 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில்நிரப்பப்படவுள்ளன. இதன்மூலம் பணத்தட்டுப்பாட்டை குறைப்பதோடு, கூட்ட நெரிசலையும் கட்டுக்குள்கொண்டு வர முடியும்.

அத்தியாவசியத்தேவைகளுக்கு மட்டுமே ஏடிஎம் மையங்களில்இருந்து பணம் பெற்றுக் கொள்வதோடு, வங்கிகள் மூலம் பெரிய வர்த்தகநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாய்ன்ட் ஆப் சேல்ஸ் மிஷினைப்பயன்படுத்தி மளிகைப் பொருள்கள் போன்றவற்றைவாங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார்.

உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்

உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தைஉயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும்மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்துபள்ளிகளின்
தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சிஅளிக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்டசெயல் திட்டங்கள் மூலம் அறிவார்ந்த குழந்தைகளைஉருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் முக்கியக் கடமையாகும். செயல் திட்டங்கள் சிறப்பாகஅமல்படுத்தப்பட வேண்டுமானால் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, மனிதவளம், கற்றல், கற்பித்தல் முறை, சமூகத்துடன் இணைந்துசெயல்படும் நடைமுறை போன்றவை நன்முறையில்பேணுதல் அவசியம்.
பள்ளிக்குஅரசு வழங்கும் சலுகைகள், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அனைத்துப் பள்ளிகளும் தாமாகவே பள்ளிச் சூழலுக்குஏற்ப செயல்களை திட்டமிட்டு தகுந்த மனித வளத்துடன்நடைமுறைப்படுத்துவது மிகுந்த பலனைத் தரும். அந்த வகையில் ஒவ்வொரு பள்ளியும்தமது முன்னேற்றத்தை அவ்வப்போது சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.
அதற்காகமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்வழிகாட்டுதலின்பேரில், தேசியக் கல்வி திட்டமிடல்மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தரத்தைஉலக தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் பள்ளித் தரங்கள் மற்றும்மதிப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும்நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டஆலோசனைக்குப் பிறகு, இத்திட்டம் தமிழகத்தில்உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் தரமானதுபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும்ஆசிரியர்கள் உதவியுடன் சுய மதிப்பீடும், ஆய்வுஅலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் மாநில கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனகல்வியாளர்கள் அடங்கிய குழு மூலம்புற மதிப்பீடும் செய்யப்படுகிறது.
இதற்காகபள்ளித் தரங்களம் மற்றும் மதிப்பீடு திட்டஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடுமுகவரி மற்றும் கடவுச் சொல்உருவாக்கி அதன்மூலம் சுய மதிப்பீடு அறிக்கைகளைபதிவேற்றம் செய்யலாம். மேலும் மதிப்பீடு சார்ந்தகருத்துருக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோலபுற மதிப்பீட்டாளர்
களும் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடுமுகவரி மற்றும் கடவுச் சொல்உருவாக்கி அதன் மூலம் புறமதிப்பீட்டு விவரங்கள் செலுத்தி, புற மதிப்பீட்டு அறிக்கையினைஉருவாக்கலாம்.
அவ்வாறுமதிப்பீடு அடிப்படையில் முதல், இரண்டு மற்றும்மூன்று என பள்ளிகள் தரஅந்தஸ்து (கிரேடு) வழங்கப்
படுகிறது.
முதல் தரம் அந்தஸ்து என்றால்சுமார், 2-வது சாதாரணம், 3-வதுதர அந்தஸ்து பெற்ற பள்ளி சிறந்தபள்ளி ஆகும்.
2016-2017 ஆண்டிலேயேஇத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 2016 நவம்பர் மாதத்தில் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு இத்திட்டம் குறித்த அடிப்படை பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது.
அரசுப்பள்ளிகள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாககல்வி வழங்கும் பள்ளிகளாக தரம் உயர்வதையும், நாடுமுழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்ஒரே சீரான தரத்துடன் கல்விவழங்குவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்தும்.
தரங்கள்மதிப்பீடு செய்ய ஏழு முக்கியக்காரணிகள்
1. பள்ளிவளாகம், விளையாட்டு மைதானம், கணினி, வகுப்பறைகள், மின்சாதனங்கள், நூலகம், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட வளங்களை கையாளுதல்.
2. ஆசிரியர்கள்கற்போரை புரிந்து கொள்ளுதல், ஆசிரியர்களின் பாடம் மற்றும் கற்பித்தல்அறிவு, கற்பித்தலுக்கான திட்டமிடல் உள்ளிட்ட கற்றல், கற்பித்தல் மற்றும்மதிப்பிடுதல் ஆகும்.
3. கற்போரின்வருகை, கற்போரின் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, கற்போரின்வளர்ச்சி ஆகியவை உள்ளடங்கிய கற்போரின்முன்னேற்றம், அடைவு மற்றும் வளர்ச்சியாகும்.
4. புதியஆசிரியர்களுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களின்வருகை, செயல் இலக்குகளை வரையறுத்துபொறுப்புகளை ஒப்படைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்தவளர்ச்சியினை நிர்வகித்தல் ஆகும்.
5. தொலைநோக்குச்சிந்தனைகளை உருவாக்குதல், மாற்றம் மற்றும் முன்னேற்றத்துக்கானசெயல்பாடுகளை உள்ளடக்கிய பள்ளித் தலைமை மற்றும்மேலாண்மையாகும்.
6. உள்ளடங்கியகற்றல் சூழல், சிறப்புத் தேவையுள்ளகுழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி, உடல் பாதுகாப்பு, உளவியல் ரீதியான பாதுகாப்பு, சுகாதாரம்ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.

7. பள்ளிமேலாண்மைக் குழு மற்றும் பள்ளிமேலாண்மை வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பு, பள்ளிமுன்னேற்றத்தில் பங்கு, பள்ளிக்கும் சமுதாயத்துக்கும்இடையே உள்ளத் தொடர்பு, சமுதாயமகற்றல் வளம், சமுதாய மேம்பாடுஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான சமுதாய பங்கேற்பு.

இணையம் இல்லாமல் பண பரிவர்த்தனை வசதி

இன்று (29.11.2016)-திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆய்வு கூட்டம் நடத்துகிறார் .

திண்டுக்கல் மாவட்டம் SSM பொறியியல் கல்லூரியில் இன்று (29.11.2016) தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்பு .மிகு .
திரு.இளங்கோவன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் 
மாவட்டத்தை சேர்ந்த CEO,DEO,DEEO,MATRIC,AEEOs,BRTEs  மற்றும் ஆசிரியர்களுக்கிடையே ஆய்வு கூட்டம் நடத்துகிறார் .

CCE WORKSHEET - 3 ENGLISH TENTATIVE ANSWER KEYS...

28/11/16

அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய தகவல் டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை

1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்
2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட  விவரம்
3)பணி வரன்முறை
4)தகுதிகாண் பருவம்
5)அனைத்து கல்வி விவரங்கள்
6)கல்வித்தகுதிகளின் உண்மைத் தன்மை
7)துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள்
8)FBF
9)SPF
10)GPF/CPS
11)பணிக்காலம் சரிபார்ப்பு
12)உயர் கல்வி பயில முன் அனுமதி
13)பதவி உயர்வு சார்பான பதிவுகள்
14)பணியிட மாறுதல் சார்பான விவரம்
15)ஊதிய நிர்ணயம் மற்றும் கால முறை ஊதிய நிர்ணயம் பற்றிய விவரம்
16)ஊக்க ஊதியம் பெற்றதன் விவரம்
17)தேர்வு நிலை விவரம்
18)சிறப்பு நிலை விவரம்
19)சரண் விடுப்பு விவரம்
20)ஈட்டா விடுப்பு விவரம்
21)மருத்துவ விடுப்பு விவரம்
22)மகப்பேறு விடுப்பு விவரம்
23)கருச்சிதைவு விடுப்பு விவரம்
24)ஈட்டிய விடுப்பு இருப்பு விவரம்
25)ஈட்டா விடுப்பு இருப்பு விவரம்

26)அசாதாரணவிடுப்பு விவரம்

27)குடும்ப விவரங்கள்

28)SPF, FBF,GPF, DCRG, போன்றவற்றிற்கு வாரிசு நியமிக்கப்பட்ட விவரம்.

29)பதவி உயர்வு பெற்ற விவரம் .

30)பதவி உயர்வில் பணிவரன் முறை செய்யப்பட்ட விவரம்.

CCE - Worksheet - 4 Weeks Abstract Form (Excel Format)

ரயில்வே ஊழியர்களுக்கு முன் பணம்!

மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வரைஉள்ள 20 ரயில்வே நிலையங்களில் பணிபுரியும்1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்,
அதிகாரிகளுக்கு சம்பள பணத்தில் முன்பணமாக ரொக்கம் ரூ 10 ஆயிரம்ரூபாய், திருச்சி டிவிஷன் ரயில்வே உயர்அதிகாரிகள் உத்தரவுப்படி ரயில்வே அதிகாரிகள் காரில்போலீஸ் பாதுகாப்புடன் ரயில் நிலையங்களுக்கு வந்துரொக்க பணம் கொடுத்தனர். இதனால்ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெரும்மகிழ்ச்சியில் உள்ளனர்

அறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில்பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசுபள்ளியும் தேர்வாகவில்லை. மத்திய அரசின், தேசியகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய
அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான கண்காட்சி, மாவட்ட மற்றும் மாநிலங்கள்அளவில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான கண்காட்சி மற்றும்இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது.

இதில், பல மாநிலங்களின், 209 படைப்புகள் இடம் பெற உள்ளன. தென் மாநிலங்களில், கர்நாடகாவில் ஒன்பது; கேரளாவில் ஒன்று; ஆந்திராவின் நான்கு அரசு பள்ளிகள், தேசிய போட்டியில் பங்கேற்கின்றன.


புதுச்சேரிசார்பில், மாகியில் உள்ள, ஜவஹர்லால் நேருஅரசு பள்ளி பங்கேற்கிறது. தமிழகத்தில், இரு தனியார் பள்ளிகள் மட்டுமேதேர்வாகியுள்ளன; அரசு பள்ளி எதுவும்தேர்வாகவில்லை. இது, அரசு பள்ளிமாணவர்களையும், கல்வியாளர்களையும் கவலை அடையச் செய்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி

 தமிழ்நாடுஇந்து சமய அறநிலையத்துறையில் தொகுதிசெயல் அலுவலர் நிலை 3 மற்றும்செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான2014 & 2015, 2015 & 16 மற்றும்2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர
அறிக்கைகளை தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இப்பதவிகளுக்குஇந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். செயல் அலுவலர், நிலை 3-இல் 29 பேரும், செயல் அலுவலர், நிலை 4-இல் 49 பணியிடங்களும்பூர்த்தி செய்யப்பட உள்ளன. செயல் அலுவலர், நிலை 3க்கு ஏதேனும் ஒருபட்டப்படிப்பில் தேர்ச்சியும், செயல் அலுவலர், நிலை4க்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சிஇரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க 24.12.2016 கடைசி நாள் ஆகும்.

செயல் அலுவலர், நிலை 3க்கான எழுத்துதேர்வு இரு தாள்களைக் கொண்டது. இவை 29.04.2017 அன்று காலை மற்றும்பிற்பகலில் நடைபெறுகிறது. செயல் அலுவலர், நிலை4க்கான இரு தாள்களைக் கொண்டது. இவை 30.4.2017 அன்று காலை மற்றும்பிற்பகலில் நடைபெறுகிறது.

இதற்கானதேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக 100 +50 = 150 ரூபாய் செலுத்தவேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்தவிண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று, இரண்டு முறைதேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவேபயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்தேர்விற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே போதியகால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில்அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில்தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோஎழ வாய்ப்புள்ளது.

விண்ணப்பதாரர்கள்தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில்சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குதேர்வாணையம் பொறுப்பாகாது. இது குறித்த சந்தேகங்களை04425332855, 04425332833 மற்றும்கட்டணமில்லாத தொலைபேசி எண்: 18004251002ல் தொடர்பு கொண்டுஅறிந்துக் கொள்ளலாம்.


மேலும்முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/notifications/2016_22_not_eng_eo_gr_iv_viii_services1.pdf  என்றஇணையதள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்துதெரிந்துகொள்ளவும்.

அமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை

அமைச்சர்கள்பங்கேற்கும் விழாவில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் சங்கத்தினர்அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கலை, ஓவியம், இசைஉள்ளிட்ட தனித்திறமைகளை ஊக்குவிக்க, இரண்டு ஆண்டுகளாக, தமிழகஅரசு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தஆண்டுக்கான இறுதி போட்டியும், பரிசளிப்புவிழாவும், கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது.

விழாவில், அமைச்சர்கள் பாண்டியராஜன், வேலுமணி, பள்ளிக்கல்வி செயலர் சபிதா, பள்ளிக்கல்விஇயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநில அளவிலான போட்டிகள் மற்றும்பரிசளிப்பு விழாக்களில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க, கோவை மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கமாநில தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில் கலை, ஓவியம், இசை போன்ற தனித்திறன்பயிற்சி அளிக்கும் பணியில், 16 ஆயிரத்து, 500 பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மிக குறைந்த சம்பளம்வழங்கினாலும், கலை மீதான ஆர்வத்தால்அவர்கள் இப்பணியை சேவையாக செய்கின்றனர்.

'பகுதிநேரஆசிரியர்கள், கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்க கூடாது' என, கோவைமாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கலை ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆசிரியர்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி, வகுப்புகளை புறக்கணித்தபோது, பகுதிநேர ஆசிரியர்கள் தான் பள்ளிகளை இயக்கஉதவினர். ஆசிரியர்களை, இது போன்று அவமதிக்ககூடாது.

இவ்வாறுஅவர் கூறினார்.

SHAALA SIDDI - SCHOOL EVALUATION DASH BOARD - IN PDF FORMAT...

NPSSE - DEMOGRAPHIC PROFILE...

பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!

டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல்
மாநிலமாக கோவாமாற உள்ளது.

 டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவாமக்கள் அனைவரும் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்டஅன்றாட தேவைக்கான அனைத்து பொருட்களையும் தங்களின்மொபைல் போனை பயன்படுத்தியே வாங்கஉள்ளனர்பணமில்லா கோவா :

கோவா மக்கள் இனி பொருட்கள்வாங்க புறப்படும் போது பணம் வைக்கும்பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம்இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும்இல்லாமல் போக உள்ளது. மொபைல்மூலமே பணபரிமாற்றம் அனைத்தும் செய்யப்பட உள்ளது. மொபைல் போனைபயன்படுத்தி ஒருவர் வாங்கும் பொருளுக்கானபணம், அவரது வங்கிக் கணக்கில்இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமைசெயலாளர் ஆர்.கே.ஸ்ரீவட்சவாதெரிவித்துள்ளார்.
மொபைலில்வியாபாரம் :

ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்திபணம் எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில் இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும், சாதாரணமொபைல் போனில் * 99# என்ற எண்ணிற்கு டயல்செய்தால் பணம் பரிமாற்றம் ஆகிவிடும். சிறு வியாபாரிகளும், தங்களிடம்ஸ்வைப்மிஷின் இல்லை என்றாலும் இந்தமுறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கானபணம் அவரின் வங்கிக்கணக்கிற்கு வந்துவிடும்.
மக்களிடம்விழிப்புணர்வு :
பணமில்லாபணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பதுகுறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் நேரடியாகபணம் கொடுத்து வியாபாரம் செய்யும் நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பணவர்த்தனைக்குஎந்த கட்டுப்பாடும்
இல்லை எனவும், மொபைல் மூலம்நடக்கும் பணபரிவர்த்தனைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாதுஎனவும் கோவா முதல்வர் லட்சுமிகாந்த்பர்சேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின்கனவுக்கு துணை நிற்போம் :

இதுதொடர்பாகநடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியமத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவைமுற்றிலுமாக பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர்மோடியின் கனவு. இதில் முன்னோடியாககோவா திகழ உள்ளது. நாம்பிரதமரின் கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும்என்றார். இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையேவங்கியாக பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல்போன் எண்ணை மத்திய அரசின்கீழ் உள்ள வங்கி ஒன்றில்பதிவு செய்து விட்டால், அனைத்துவிதமான பணபரிமாற்றத்தையும் அதனை பயன்படுத்தி செய்யலாம்.

நூலகத்தை தூசி தட்டி வையுங்க...!' பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு

அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து
வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
● மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த, வழிபாட்டு கூட்டத்தில் அவர்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்த வேண்டும்

● திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நோய் பரவும் என்பதை, கிராமப்புற மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன், கழிப்பறைக்கு செல்லும் போது காலணி அணியும் படியும், சோப்பு பயன்படுத்தி கை கழுவும்படியும் அறிவுறுத்த வேண்டும்

● பள்ளி வளாகத்தில் குப்பை, தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து, மாணவர்களுக்கு துாய குடிநீரை வழங்க வேண்டும்

● நுாலகம், ஆய்வகம், வகுப்பறை, கணினிகள், ஆவணங்கள், மாணவர்கள் அமரும் பெஞ்ச் போன்றவற்றில் துாசி படியாமல், சுத்தமாக பராமரிப்பது அவசியம்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் இனி வங்கியில் தான் ஊதியம் வழங்க வேண்டும் !!

சம்பளத்தைரொக்கமாக வழங்க முடிவு.!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சம்பளத்தில், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக வழங்க, சத்தீஸ்கர் அரசு முடிவு
செய்துள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

செல்லாதரூபாய் நோட்டு

அறிவிப்பால், நாட்டில் பண புழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், மூன்று மற்றும் நான்காம்நிலை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சம்பளத்தில், 10ஆயிரம் ரூபாய் மட்டும், ரொக்கமாக வழங்க, முதல்வர் உத்தரவிட்டார்.

CCE பணித்தாள் - மூன்றாம் கட்டத் தேர்விற்கான அனைத்து பாட வினாத்தாள்கள்

CCE WORKSHEET 3rd Week English Answer Key



CCE -THIRD WEEK - TAMIL TENTATIVE ANSWER KEY FOR 6 to 8th Std



CCE -THIRD WEEK - TAMIL TENTATIVE ANSWER KEY FOR 1 to 5th Std

வங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16) சி.ஆர்.சி., பயிற்சி ஒத்திவைக்கப்பட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தற்போது500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்துநிலவும் வங்கி நடைமுறைகளால் பணம்எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும்ஆண்டு இறுதியாக உள்ளதால்
விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள்வங்கிக்கு பணம் எடுக்கச் செல்லஇயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே நவம்பர் மாத ஊதியத்தைவங்கிக்குச் சென்று எடுக்க வசதியாகவரும் சனிக்கிழமை (03.12.16) நடைபெற உள்ள குறுவளமையஅளவிலான பயிற்சியினை ஒத்திவைத்து வேறொரு நாளில் நடத்திடஅரசு ஆவன செய்ய வேண்டும்என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடக்க கல்வி துறையும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் ஆசிரியர்களின்இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்ற ஆவன செய்வார்கள் என்றநம்பிக்கையில் ஆசிரியர்கள்.

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்றுகளை ஜனவரி 15 வரை அளிக்கலாம்

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுச் சான்றிதழை வரும் ஜனவரி 15 வரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள்நேரில் சென்று கையெழுத்திட்டு வாழ்வுச் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் செலுத்த வேண்டும். ஆனால், வங்கிக் கிளைகளில் 500, ஆயிரம் ரூபாய் செல்லாதது என்ற அறிவிப்பால் எழுந்துள்ள சூழலால் வாழ்வுச் சான்றிதழ்களை வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரசு பள்ளிகளில் ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், கழிப்பறையை சுத்தப்படுத்த, தனியார் ஒப்பந்தம் மூலம் ஒரு மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து தரவும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், மதுரை ஐகோர்ட் கிளை, தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்திர ரெட்டி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

● அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை, 2014 ஜூலையில், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், கழிப்பறைகளைசுத்தப்படுத்த, தனியாக ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்

● மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த ஊழியர்களுக்கு சொத்து வரி வசூலில், கல்வி நிதிக்கு ஒதுக்கப்படும் தொகை மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, திடக்கழிவுமேலாண்மை நிதியில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும்

● அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சிகள் ஏற்க வேண்டும். இந்த பணிக்கு உள்ளாட்சிகள் தான் ஆட்களை நியமிக்க வேண்டும்.பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என, உள்ளாட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்

● பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, காலையில் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன், ஊழியர்கள் சென்று கழிப்பறைகளை சுத்தப்படுத்தவும், பள்ளி முடியும் நேரம் வரை அவர்கள் பணியில் இருக்கவும், மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் கழிப்பறையை சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்

● வகுப்பறை பராமரிப்பு, பள்ளி வளாகம் பராமரிப்பு பணிகளுக்கும் இந்த ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்

● அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்தையே, இந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்

● அரசு ஒப்பந்த விதிகளின் படி இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு இருந்தால், மகளிர் சுய உதவிக்குழு, சமுதாய அமைப்புகளையும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம்

● பள்ளி தலைமை ஆசிரியர்கள், பராமரிப்பு பணி குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திற்கு திருப்தியில்லாத பராமரிப்பு பணி ஒப்பந்ததாரரை, உடனடியாக நீக்க வேண்டும்

● பெண்கள் பள்ளியில் கட்டாயம் இரண்டு பெண் துப்புரவுபணியாளர்களும், ஆண்கள் பள்ளியில் இரண்டு ஆண் அல்லது பெண் துப்புரவு பணியாளர்களும், இருபாலரும் படிக்கும் பள்ளியில் ஒரு பெண், ஒரு ஆண் துப்புரவு பணியாளர்களும் பணியமர்த்தப்பட வேண்டும்

● பெண்கள் பள்ளியில், 'நாப்கின்'களை பாதுகாப்பாக அகற்றுவது இந்த பராமரிப்பு பணி நிறுவனத்தின் வேலையாகும்

● அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர் விபரங்களை, ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?

ரிலையன்ஸின் ஜியோ நிறுவணம் கடந்த செப்டம்பர் மாதம் தனது 4G சிம்களை வெளியிட்டது. அறிமுக சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை அளவற்ற இலவச 4G இனையதள வசதியும், இலவசமாக பேசும் வசதியையும் அளித்திருந்தது. இந்நிலையில் குறுந்தகவல் செயிலியான வாட்ஸாப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவணம் கொல்கத்தாவில் உள்ள வடிகையாளர் ஒருவருக்கு, ரசீது அனுப்பியுள்ளதாக அந்த ரசீதின் புகைப்படத்துடன் தகவல் பரவி வருகிறது. அவர் 554.37 GB data உபயோகித்துள்ளதகவும், 44.4 நிமிடங்கள் பேசியுள்ளதாகவும் இதற்கு அவர் 27,718 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து ஜியோ நிறுவணம் விளக்கம் அளித்துள்ளது. “எங்கள் நிறுவணம் வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை இலவச இனையதள சேவையும், இலவச தொலைபேசி சேவையும் வழங்கியுள்ளது. தற்போது வாட்ஸாப்பில் பரவி வரும்ரசீதின் புகைப்படம் போலியானது எனவும், எங்கள் நிறுவணம் அவ்வாறு எந்தவொரு வடிக்கையாளருக்கும் ரசீது அனுப்பவில்லை” என தெரிவித்துள்ளது.இதன்மூலம் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை கலக்கி வந்த ஜியோ புரளி முற்றுப் பெற்றுள்ளது

SSLC SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (Em/Tm) NEW VERSION UPDATED Posted: 27 Nov 2016 09:26 AM PST 10th - SSLC SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (Em/Tm) NEW VERSION | Download *Click here 10th - SSLS - SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (Tamil Medium) *Click here 10th - SSLS - SOCIAL SCIENCE -VETRI NICHAYAM (English Medium) Thanks To, Mr V. Subramanian M.A.,M.A.,M.A.,B.Ed., B.T.Asst, M.N.U. Jayaraj Nadar Hr. Sec. School, Nagamalai, Madurai- 625 019. CCE WORKSHEET 3rd Week English Answer Key Posted: 27 Nov 2016 09:26 AM PST CCE Worksheet Key Answers CCE WORKSHEET 3rd Week English Answer Key | Download ... தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRC அளவில்"தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள்பயிற்சி!

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிவழங்க திட்டம்...

27/11/16

பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி டிச.15 வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்.புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு நவ.8-ஆம் தேதி அறிவித்தது.
அதனையடுத்து மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களில் பழைய நோட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மின்கட்டணம், குடிநீர் வரி உள்ளிட்டவற்றுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன.இந்நிலையில் பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. ஆனால் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே மாற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிப்பு: எனவே, மின்சார கட்டணத்தையும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:டிசம்பர் 15-ஆம் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் மின்கட்டணம் வசூலிக்கும் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால் மின் கட்டணத்துக்காக ரூ.1,000 நோட்டுகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பெறப்படாது என்று தெரிவித்தனர்.

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு!!

பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும்வகையில், அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. 
தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார்.இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் மூலம், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறை தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?

வங்கியில் பணம் இல்லை.பெரும்பாலான ஏ.டி.எம்-கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை என்பதே அன்றாட குரலாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. நாட்டில் பெரும்பாலான மக்கள் அன்றையபொழுதை வங்கிகளிலேயே செலவழிக்கத் தொடங்கிவிட்டனர். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும்.நாட்டில் இன்னும் நிலைமை சீரடையவில்லை.
வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அல்லாடி வருகின்றனர்.செல்லாது என்று அறிவித்தநாளில் இருந்து வங்கிகள் நாளுக்கொரு அறிவிப்பும் பொழுதொரு விதிமுறைகளையும் கடைபிடிக்கச் சொல்லி ரிசர்வ் வங்கி கூறி வருகிறது.முதல் நாள் அறிவிப்பை நாளிதழிலோ அல்லது ஊடகங்களிலோ அறிந்து கொள்ளும் பொதுமக்கள் மறுநாள் வங்கி செல்லும்போது வேறு ஒரு புதிய அறிவிப்பு அவர்களை வரவேற்கிறது. அந்த அறிவிப்பு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இதனால் வங்கி ஊழியர்களுடன் பொதுமக்கள்சண்டைபோட்டுக் கொள்கின்றனர். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் இல்லாத நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து கூட அத்தியாவசியச் செலவுகளுக்குப் பணம் எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். அன்றாடம் மாறும் ஆர்.பி.ஐ-யின் புதிய உத்தரவுகளால் திணறுகின்றனர். வங்கிகளுக்குச் செல்வதற்கு முன்  சில தகவல்களையாவது தெரிந்துகொண்டு சென்றால் ஓரளவு குழப்பத்தில் இருந்து தப்பிக்கலாம். வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?

 1. 25.11.2016  முதல் வங்கிகளில் 500 ரூபாய் 1000ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது.

2. அடுத்த மாதம்  டிசம்பர் 30-ம் தேதி வரை தங்களுடைய வங்கி கணக்குகளில் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம்.

3. ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கமுடியும்.

4. ஒரு முறைக்கு 24 ஆயிரம் ரூபாய் எடுத்தால் அதற்கு அடுத்த வாரம் தான் உங்கள் கணக்கில் இருந்து நீங்கள் பணம் எடுக்க முடியும்

5. ஏ.டி.எம்-களில் 2000 ரூபாய் மட்டுமே ஒரு நாளைக்கு எடுக்க முடியும்.

6. பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், பால் விற்பனையகங்கள், ரயில் முன்பதிவு மையங்கள் மற்றும் அரசு சேவைகளுக்குப் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 14 -ம் தேதி வரை ஏற்பார்கள். 1000 ரூபாய் தாள்களை எங்குமே செலுத்த முடியாது. வங்கிக் கணக்கில்மட்டுமே போட முடியும்

7.வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டுப் பணத்தை வாரத்துக்கு 5 ஆயிரம் என்கிற நிலையில் மாற்றிக் கொள்ளலாம் . வெளிநாட்டவர்கள் பணம் மாற்றும் போது அவர்களது விவரம் அவர்களுடைய பாஸ்போர்ட் தகவலுடன் பதிவு செய்யப்படுகிறது.

8. 2000 ரூபாய் தாளில் வெள்ளைப் பகுதியில் எழுதப்பட்டால் சொல்லாது என்ற தகவல் உண்மையல்ல.

9. உங்கள் கணக்கில் இருந்து  ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதிக்க மறுத்தால் அது குறித்து நீங்கள் ரிசர்வ் வங்கிக்குப்புகார் தெரிவிக்கலாம்.

10.புதிதாக வந்துள்ள 500 ரூபாய் தாளில் சில தவறுகள்உள்ளது என்றும், எனினும் அது செல்லும் என்றும் வங்கிகள் தரப்பில் கூறுகின்றனர்.   அதேபோன்று வாடிக்கையாளர்கள்  தங்களுக்குச் சொந்தமான பணத்தை மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தலாம். சந்தேகம் ஏற்பட்டால் வங்கி ஊழியர்கள் பணத்தை ஏற்க மாட்டார்கள்.

இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுவருமானவரித்துறை விசாரணை நடத்தும்.

730 BT/PG POST NOV- 2016 PAY AUTHORIZATION ORDER



பணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ஏழைகளுக்கு மானியத்துடன் 'ஸ்மார்ட் போன்'

பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் நோக்கில், 'சர்காரி' என்ற பெயரில், 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த, 'ஆப்'பை பயன்படுத்த, மானிய விலையில், ஏழைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கவும், அரசு திட்டமிட்டு உள்ளது.


'பழைய ரூபாய் நோட்டு செல்லாது' என, 8ம் தேதி, மத்திய அரசு அறிவித்தது. இதனால், பணப்புழக்கம் குறைந்து, அன்றாட செலவுக்கே மக்கள் தவிக்கும் சூழல் நிலவுகிறது. எனினும், 'டெபிட் கார்டு' அல்லது 'மொபைல் போன்' மூலம் பணம் செலுத்தும் வசதியுள்ளோர், தங்கள் தேவைக்கு அதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும், பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, மத்திய அரசு முனைந்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, பெட்ரோல் பங்க்குகள், பால் விற் பனை நிலையங் கள், கல்வி நிறுவனங்கள், ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள் என, அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும் வகை யில், 'சர்காரி' என்ற பெயரில், மின்னணு முறை யில் பணம் செலுத்தும், 'மொபைல் ஆப்' உருவாக்கப்படுகிறது.

அதன் மூலம், சிறிய தேவைகளுக்கு கூட, கையில் பணமின்றி, மின்னணு முறையில் பணம் செலுத்த முடியும். இதை பயன்படுத்த, 'ஸ்மார்ட் மொபைல் போன்' தேவை; எனவே,
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, மானிய விலையில் ஸ்மார்ட் மொபைல் போன் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையும், நிதியமைச்சகமும் இணைந்து நட
வடிக்கை எடுத்து வருகின்றன. இதுபற்றிய அறிவிப்புகள்,விரைவில் வெளியாகலாம் என, தெரிகிறது.

டாக்டர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்

தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 
புதுக்கோட்டையில், 249 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவக் கல்லுாரி கட்டடம் கட்டப் பட்டு வருகிறது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்தாண்டு, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதலை பெற்று திறக்கப்படும். வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது.
தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்களின் பணியிடங்கள், அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.உடன் இருந்த, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு, மத்திய குழு, ஐந்து இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளது. இந்த இடங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில், மத்திய சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாக, தமிழக அரசிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.