யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/12/16

ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை

உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்டவீரர் பீலேவின்வாழ்க்கையை சித்தரிக்கும் படம் ‘’பீலே’’. இப்படத்திற்குஇசையமைத்ததற்காக
இசையமைப்பாளர் ஏ.ஆ.ரகுமான்பெயர் ஆஸ்கர்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ஆஸ்கர் விருது வழங்கும்விழா 2017ம்ஆண்டு ஜனவரி26ம் தேதிநடைபெறும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

AIRCEL வழங்கும் அன்லிமிட்டட் அழைப்புகள், டேட்டா சலுகை!

 தங்கள் வாடிக்கையாளர்கள் எல்லா நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டட்  டேட்டாசலுகைகளை
வழங்குபடியானபுதிய சலுகைஅறிவிப்புகளை  ஏர்செல்வெளியிட்டுள்ளது.
                            

இன்று அந்த நிறுவனம்வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏர்செல் வாடிக்கையாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளRC 249 என்ற ரீசார்ஜை பயன்படுத்துவதன் மூலம் எல்லாநெட் ஒர்க்குகளுக்கும்அன்லிமிட்டட் எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்புகளைமேற்கொள்ளலாம்.  அதேபோல்அன்லிமிட்டட்  2G டேட்டாவைபயன்படுத்தலாம். 4G  வசதி உள்ள அலைபேசியைபயன்படுத்துபவர்களுக்கு மேலும் 1.5 GB  டேட்டா கூடுதலாக கிடைக்கும்.இதற்கான வேலிடிட்டிஒரு மாதம்ஆகும்.

இதனைப் போலவே RC 14 என்றமற்றொரு ரீசார்ஜும்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன்மூலம் எல்லாநெட் ஒர்க்குகளுக்கும்அன்லிமிட்டட் எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்புகளைமேற்கொள்ளலாம். ஆனால் இதற்கான வேலிடிட்டி ஒருநாள்மட்டுமே ஆகும்.


இவ்வாறு அந்த அறிவிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

SLAS - JAN 2016 - முக்கிய படிவங்கள்

SLAS Test என்றால் என்ன?

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில்,
மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.


இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., 5 முதல் நடக்க உள்ளது.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.

FLASH NEWS : SLAS DEC - 2016 : மாவட்ட வாரியாக SLAS நடைபெறும் பள்ளிகளின் பட்டியல்

அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அமல் !!

உத்தரப் பிரதேசத்தில்முதல்வர் அகிலேஷ்யாதவ் தலைமையில்
லக்னோவில் நேற்றுஅமைச்சரவை கூட்டம்நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர்களுக்கு7வது ஊதியக்குழுபரிந்துரைகளை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் ஆங்கிலபுத்தாண்டு போனசாக அரசு
ஊழியர்களுக்கு சம்பள உயர்வுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர்அகிலேஷ் யாதவ், “ஜனவரி ஒன்றாம்தேதி முதல்அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழுவின்பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய்கூடுதல் சுமைஏற்படும். எனினும்இதன் மூலம்லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.

ஜூன் 10-ல் 'நீட்' தேர்வு: பாடத்திட்ட விவரம் வெளியீடு.

2017-ம் ஆண்டு ஜூன்மாதம் 10-ம்தேதி நடைபெறஉள்ள மருத்துவப்
படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தைமத்திய அரசுவெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டசெய்திக் குறிப்பு:  1956 ஆம்ஆண்டு இந்தியமருத்துவ சபைசட்டம் மற்றும்2016ம் ஆண்டதிருத்தி அமைக்கப்பட்டசட்டம் 10வதுபிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச்சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுதேர்வினை தேசியதேர்வுகள் வாரியம்நடத்த உள்ளது.

பாடத்திட்டம் பல்வேறு நகரங்களில்இந்த தேர்வு2017 ஜூன் மாதம்10-ம் தேதிநடைபெறும். இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலானதேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில்இந்திய மருத்துவக்கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால்நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின்சுகாதார குடும்பநலத்துறை அமைச்சகத்தின்முன் அனுமதியைப்பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும். இந்தத்தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கானஒற்றைச் சாளரநுழைவுத் தேர்வுஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைபருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்தவகுப்புகளுக்கு நடத்தப்படும். 1956 இந்திய மருத்துவ சபைசட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள்அளவிலோ எந்தஒரு பல்கலைக்கழகம்/ மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வு செல்லுபடிஆகாது. 'நீட்' தேர்வின் முக்கியத்துவம்: NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்புபாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ஆகும்.
2017-ம் கல்வி ஆண்டுக்கானஇந்தத் தேர்வில்நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ளடி.எம்/ எம்.சிஹெச்/ பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவைஅடங்கி இருக்கும். 'நீட்' தேர்வின்கீழ் வராதநிறுவனங்கள் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானநிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்டமேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரிஜிப்மர் ஆகியநிறுவனங்கள் NEET-SS –ன் கீழ்வராது.

தேசிய தேர்வுகள் வாரியம்மத்திய அரசால்1982-ம் ஆண்டுஉருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்தியஅடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவதுஅதன் முக்கியநோக்கமாகும். தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்டமேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்குNEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டுNEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையானகாலத்தில் அகிலஇந்திய பட்டமேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்திஉள்ளது. இவ்வாறுசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வித்துறைக்கு ஐ.இ.எஸ் ,சேவை உருவாக்கம் யோசனை நிராகரிப்பு !!

ரூபாய் 600 ல் நவீன சிறுநீர் கழிப்பிடம் ,அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் !!

TNPSC RECRUITMENT 2016 | TNPSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST DIRECTOR | NO. OF VACANCIES 12 | LAST DATE 12.01.2017







>> Employment Type
Govt Job
>> Application
Online
>> Website
>> Name of the Post
ASST DIRECTOR
>> கல்வித் தகுதி
DEGREE
>> காலியிடங்கள்
12
>> சம்பளம்
15600-39100+5400
>> தேர்வு செய்யப்படும் முறை
Competitive Exam
>> கடைசித் தேதி
12.01.2017
>> தேர்வு நாள்
08.04.2017

SHAALA SIDDHI KEY DOMAINS - FORMATS

தேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில்தேர்வு நேரத்தில்உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்குஎதிர்ப்பு
கிளம்பியுள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும்உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படி ஒவ்வொருஆண்டும் ஆசிரியர்கள்பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டுஆக.,1ல்மாணவர்களின் வருகைப்படி உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கைகணக்கிடப்பட்டன.
தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில்மட்டும் உபரிஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது. கல்வியாண்டின் இடையில்பணி நிரவல்செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர்கழக மாவட்டச்செயலாளர் இளங்கோகூறியதாவது: அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள்மே மாதம்நடக்கும் கவுன்சிலிங்கில்தான் பணிநிரவல்செய்யப்படுவர். அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களைதிடீரென தேர்வுசமயத்தில் பணிநிரவல் செய்யஉள்ளனர். கல்வியாண்டின்இடையில் ஆசிரியர்களைமாற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். அவர்களைதேர்வுகளுக்கு தயார்படுத்த முடியாது, என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பதுமற்றும் தேவையானசலுகைகளை வழங்கவழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு
மாநிலங்களவை ஒப்புதல்அளித்துள்ளது.இம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்துஉறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.
 இதன் மூலம்மசோதா ஒருமனதாகநிறைவேறியது. மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு5 லட்சம் ரூபாய்வரை அபராதம்மற்றும் 2 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கமசோதா வழிசெய்கிறது.

அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்குஇட ஒதுக்கீட்டை3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கவும் இம்மசோதாவழிவகை செய்கிறது.தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கானவரையறைக்கு ஏழு வகை உடல் குறைபாடுகள்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்நிலையில் அவற்றை21 ஆக உயர்த்தப்படும்என மசோதாவில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மனநல குறைபாடுகள், ஆட்டிசம், செரிப்ரல்பால்சி, தசைசிதைவு உள்ளிட்டகுறைபாடுகளும் மாற்றுத்திறனாளிகள் வரையறைக்குள்வரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயர் கல்வி நிறுவனங்களில்மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டைமூன்றில் இருந்துஐந்து சதவிகிதமாகஅதிகரிக்கும் இம்மசோதா வழி செய்கிறது, மேலும்மத்திய மற்றும்மாநில அரசுத்துறைகளில் உள்ளமாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர்களுக்கானஅதிகார வரம்பும்அதிகரிக்கப்பட உள்ளது.

14/12/16

மத்திய அரசு அறிவிப்பு: கல்வி வரைவு கொள்கைக்கு மீண்டும் குழு அமைக்கப்படும்

புதிய தேசிய கல்வி வரைவுகொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி சமர்பித்த நிலையில், மீண்டும் புதிய குழு அமைக்கஇருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய கல்வி அமைப்பில்
சீர்திருத்தம்மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டுஅமைச்சகம் நியமித்தது.
இக்கமிட்டி, பல்வேறு ஆலோசனைக்கு பிறகு, புதிய கல்விவரைவு கொள்கையை கடந்த மே மாதம்சமர்ப்பித்தது. இதில் உள்ள பெரும்பாலானஅம்சங்களுக்கு நாடு முழுவதும் கடும்எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், புதிய கல்வி வரைவுகொள்கையை தயாரிக்க மீண்டும் ஒரு புதிய கமிட்டிஅமைக்க இருப்பதாக மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்றுகூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘சிறந்தகல்வியாளர்கள் கொண்ட புதிய குழுஇன்னும் 10 நாட்களில் அமைக்கப்படும். இதற்காக சிலரின் பெயர்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளன’’ என்றார். சுப்பிரமணியன் கமிட்டியின் வரைவில், ‘‘நமது கல்வி முறையில்அடிப்படையிலேயே சில மாற்றங்கள் செய்யவேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இவற்றைமேற்கொள்ள அரசு தயங்குவதாக ஏற்கனவேசுப்பிரமணியன் விமர்சித்திருந்தார். இதனால் புதிய குழுஅமைக்கப்பட இருப்பதால் சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு ஏற்காதா எனஅமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு, ‘‘சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளும் ஏற்கப்படும். மேலும், அந்த கமிட்டியின்வரைவு கொள்கைகளையே இறுதி கொள்கையாக ஏற்கவேண்டுமென்ற கட்டாயமுமில்லை’’ என ஜவடேகர் கூறினார்.

ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு

வாஷிங்டன்: ஐ.நா. புதிய பொதுச்செயலாளராகபோர்ச்சுகல் நாட்டின்
முன்னாள் பிரதமர் அந்தோனியோகுத்தேரஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தற்போதைய பொதுச்செயலாளர் பான்கீ மூன்பதவி பிரமாணம்செய்து வைத்தார்.

ஐக்கிய நாடுகள் அவையில்தற்போதைய பொதுச்செயலாளராகதென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன்பதவி வகித்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்புவகிக்கும் பான்கி மூனின்பதவிக் காலம்வரும் டிசம்பர்31-ம் தேதியுடன்நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரைதேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறுகட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர்பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதிகட்டமாக 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில்புதிய பொதுச்செயலாளரைதேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்கடந்த அக்டோபர்5-ம் தேதிரகசிய வாக்கெடுப்புநடத்தப்பட்டது.

இதில், போர்ச்சுகலின் முன்னாள்பிரதமர் அந்தோனியோகுத்தேரஸ் ஐ.நா. புதியபொதுச்செயரலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஐ.நா.வின்புதிய பொதுச்செயலாளராகஅந்தோனியோ குத்தேரஸ்நேற்று பதவியேற்றார். 193 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின்நகல் அவரிடம்ஒப்படைக்கப்பட்டது. 9-வது பொதுச்செயலாளராக குத்தோரஸிற்கு, பான் -கி-மூன் பதவியேற்புசெய்து வைத்தார்.


ஐக்கிய நாடுகள் அவையின்அகதிகள் முகமையின்தலைவராகப் பதவிவகிக்கும் குத்தேரஸ், ஐ.நா. அவையின் 9ஆவதுபொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்அடுத்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி வரைபதவி வகிப்பார்.

NMMS - SYLLABUS

NMMS தேசிய திறனாய்வு தேர்வுக்கானபாடத்திட்டம்
தேசிய திறனாய்வு தேர்வுக்கானபாடத்திட்டம்

MATHS
1.Number Series
2.Identifying The Wrong Number In The Series

3. Letter Series


  4.Change Of Sign And Number
5. Substitution of Mathematical Symbol
6. Problem Solving Questions
7. Odd - Man-Out Figures
8. Numbers Figures And Their Relationship
9. Similarity
10. Shapes Identifiacation
11.Vendiagram
12. Number Matices
13.Numbers And Symbols
14.Inserted Pictures
15.Time Related Questions
16.Direction Related Questions
17.Relationship Related Questions
18.Puzzles
19.Number Coding
20.Pictures Similarity
21.Mirror Image
22.water reflection
23.Dice Related Sum
NMMS mat question type
SAT Syllables
கணிதம்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only
அறிவியல்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only
*சமூக அறிவியல்*
VII  I Term, II Term, III Term

VIII I Term, II Term Only

BRC அளவில் மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டிகளின் தலைப்புக்கு கட்டுரை மாதிரிகள்..



CPS நீக்க கோரி 33 அரசு ஊழியர்கள் சங்கங்களும், 23ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டது என்றும், CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி 3097 மனுக்கள் பெறப்பட்டுள்ளன RTI மூலம் பதில்.



வசூலில் கறாராக இருக்கும் கல்வி அதிகாரி !!தினமலர் -டீ கடை பெஞ்ச்

அனைத்து மத்திய தேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம்: பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஆள் மாறாட்டத்தை தடுக்கஅனைத்து மத்தியதேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்றுமத்திய மனிதவள மேம்பாட்டுதுறை மந்திரி
பிரகாஷ் ஜவடேகர்தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரகாஷ் ஜவடேகர்கூறியதாவது:-

ஆதார் கார்டை பல்வேறுவி‌ஷயங்களுக்கும்பயன்படுத்தி வருகிறோம். இனி மத்திய அரசுநடத்தும் அனைத்துதேர்வுகளுக்கும் இதை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்என திட்டமிட்டுஇருக்கிறோம்.

இதை எப்படி செயல்படுத்துவதுஎன்பது பற்றிஆய்வு நடந்துவருகிறது. ஆதார்அட்டையில் புகைப்படம்மற்றும் அனைத்துவிவரங்களும் இருப்பதால் இதில் ஆள் மாறாட்டம்செய்ய முடியாது. சில மாநிலங்களில்ஆள் மாறாட்டம்நடப்பதாக தொடர்ந்துபுகார் வந்தவண்ணம் உள்ளன. இனியும் இப்படிநடக்க கூடாதுஎன்பதற்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். காஷ்மீர், மேகாலயா, அசாம் மாநிலங்கள்தவிர, அனைத்துமாநிலங்களிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் மத்தியதேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படும்.

சேவை திட்டங்கள் சம்பந்தமாகஆதார் கார்டைகட்டாயமாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டுகூறி உள்ளது. ஆனால், தேர்வுஎன்பது சேவைதிட்டம் அல்ல. ஒரு அடையாளஅட்டையாகத்தான் நாங்கள் ஆதார் கார்டை பயன்படுத்ததிட்டமிட்டுள்ளோம். எனவே, இதுசுப்ரீம் கோர்ட்டுஉத்தரவுக்கு பொருந்தாது.

இதுவரை மத்திய தேர்வுகளைமத்திய செகன்டரிகல்வி வாரியம்நடத்தி வந்தது. இனி, தேர்வுநடத்துவதற்காகவே தேசிய தேர்வு கல்வியகம் ஒன்றைதொடங்குவதற்கு முடிவு செய்துள்ளோம். இது சம்பந்தமாகமத்திய மந்திரிசபையில்விவாதித்து முடிவு எடுக்கப்படும்.


இனி இந்த வாரியம்மூலம்தான் என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

பணிப்பதிவேடு -சரிபார்ப்பு படிவம்



சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே கட்டணம் !!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்இனி ஆன்லைன்மூலமே கட்டணம்செலுத்த முடியும். மோடி தலைமையிலானமத்திய அரசுபணமில்லாவர்த்தகம்
கொண்டுவர பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் மூலம்ஊழலற்ற இந்தியாவைஉருவாக்க முடியும்என அரசுநம்புகிறது.  இதன் முக்கிய நடவடிக்கையாகசமீபத்தில் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ்பெறுவதாக
அறிவித்தது. இதன் மூலம்பணம் பதுக்கிய, பண முதலைகள்தங்களின் கள்ளப்பணத்தைவெள்ளையாக மாற்றபகீர பிரயத்தனம்செய்ய முயற்சிசெய்து வருகின்றனர். ஆனால் , வருமானவரி மற்றும்அமலாக்க துறையினரின்கடும் நடவடிக்கையால்நாடு முழுவதும்கோடி, கோடியாகபணம் , கிலோகணக்கில் தங்கம்பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது.மத்தியஅரசின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்இனி ஆன்லைன்மூலமே பள்ளிக்கட்டணம்செலுத்த முடியும். கரன்சி நோட்டுகளாகபெற்று கொள்ளமுடியாது , இந்த முறை வரும் ஜனவரிமாதம் 17 ம்தேதி முதல்நடைமுறைக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ., செயலர்ஜோசப் இம்மானுவேல்அனைத்து பள்ளிதலைமைநிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜனவரி மாதம் 17 ம்தேதி முதல்:

ஆன்லைன் மூலம் இகட்டணம் செலுத்தும்முறைக்கு வாருங்கள், உங்களின் மொபைல்போனே உங்களின்வங்கி என்று, வாலட், டெபிட்கார்டு, ஸ்வைப்பிங்மூலம் பணமில்லாவர்த்தகத்திற்கு அரசு அழைப்பும், இது தொடர்பாகநாள்தோறும் விளம்பரமும் வெளியிட்டு வருகிறது. மத்தியஅரசு துறைகளும், அரசு சார்ந்தஅமைப்புகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன.

(14.12.2016) இன்று காலை 11.00 மணியளவில் மனித உரிமைகள் குறித்த உறுதி மொழி எடுக்க வேண்டும் !!

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஏராளமானோர் தவிப்பு: டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்க கோரிக்கை

இணையதள சேவை பாதிப்பால்குரூப் 1 தேர்வுக்குவிண்ணப்பிக்க
முடியாத நிலை ஏற்பட்டதுதமிழ்நாடுஅரசுப் பணியாளர்தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சிகுரூப் 1 பதவியில்அடங்கிய 85 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துதேர்வை பிப்ரவரி19ம்தேதிநடத்துகிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க  டிசம்பர் 12ம் தேதிகடைசி நாள்என்று அறிவிக்கப்பட்டிருந்ததுஇந்நிலையில் வர்தா புயல் தாக்க தொடங்கியதுஇதுநேற்றுமுன்தினம் 3 மாவட்டங்களைதுவம்சம்  செய்ததுஇதனால் செல்போன்சேவைஇணையதளசேவை உள்ளிட்டஅனைத்துசேவைகளும்முடங்கியது.


ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள முடியாதநிலை ஏற்பட்டதுஅது மட்டுமின்றிமக்களின்இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதுஇணையதளம் சேவைதுண்டிப்பால்  குரூப்தேர்வுக்கு 2 நாட்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனதுஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கமுடியாதநிலை ஏற்பட்டுள்ளதுஎனவேதேர்வுக்கு  விண்ணப்பிக்கும்தேதியைடிஎன்பிஎஸ்சிநீட்டிக்க வேண்டும்என்ற கோரிக்கைவலுத்துள்ளதுஆனால்டிஎன்பிஎஸ்சியில்இருந்து எந்தவிதஅறிவிப்பும் வராததால்  தேர்வர்கள் குழப்பத்தில்உள்ளனர்.

அரையாண்டு தேர்வு முடிந்ததும் இலவச சைக்கிள் வினியோகம்

தமிழகத்தில் அரசு மற்றும்உதவி பெறும்பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழகஅரசு சார்பில், இலவச சைக்கிள்
வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகம் முழுவதும்பள்ளிகளுக்கு இலவச சைக்கிள், உதிரி பாகங்களாக, லாரிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றை அந்தந்த பள்ளிகளில், சைக்கிளாக தயார்செய்யும் பணிகள்நடக்கின்றன. தற்போது, அரையாண்டு தேர்வு நடந்துவருவதால், சைக்கிள்வினியோகம் செய்வதில்காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு முடிந்து, ஜனவரியில் பள்ளிகள்திறந்த பிறகு, இலவச சைக்கிள்வினியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆல் பாஸ்' முறையில் திருத்தம் : விரைவில் வருகிறது மசோதா

எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி என்ற, 'ஆல் பாஸ்'
முறையில் மாற்றம்கொண்டு வரும்வகையில், கல்விஉரிமை சட்டத்தில்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது,'' என, மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கும் முறை தற்போதுஉள்ளது. இந்தகொள்கையில் மாற்றம் செய்யும அதிகாரம், மாநிலங்களுக்குஅளிக்கப்பட உள்ளது. இதற்காக, கல்வி உரிமைசட்டம், திருத்தம்செய்யப்பட உள்ளது.மத்திய அமைச்சரவைகூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, பின், மசோதா தாக்கல்செய்யப்படும். ஒரு மாணவனுக்கு, ஓராண்டு காலம்வீணாகக் கூடாது. அதனால், ஆண்டுதேர்வில் தோல்விஅடையும் மாணவனுக்குஇடைப்பட்ட காலத்தில்மறுவாய்ப்பு அளித்து, கல்வியைத் தொடர வாய்ப்புஅளிக்க வேண்டும்.


சி.பி.எஸ்.இ., எனப்படும்மத்திய கல்விவாரியத்தின் கீழ் படிக்கும், 10ம் வகுப்புமாணவர்களுக்கு, மீண்டும் பொதுத் தேர்வு கொண்டுவருவது குறித்து, இம்மாத இறுதியில்நடக்கும் சி.பி.எஸ்.இ., கூட்டத்தில்முடிவு செய்யப்படும். அடுத்த கல்வியாண்டுமுதல், சி.பி.எஸ்.இ., 10ம்வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.

பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!

மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம்
நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, பாடப்புத்தகங்கள், பாடங்கள் சம்பந்தமான தகவல்கள், கல்வித்துறையின் செயல்பாடுகள், கல்வித்துறையிலுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஆன்-லைன் மூலம் அறிந்துகொள்வதற்காக பள்ளி மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்தை அரசு அறிமுகப்படுத்தியது. திட்டத்தை செயல்படுத்துவதற்கானபணிகளை கடந்த, 2012 ஆண்டில் துவக்கியது.
இதன்அடிப்படையில் மாணவர்களின் பெயர், புகைப்படம், பெற்றோர் பெயர், மாணவரின் ஜாதி, பள்ளியின் பெயர் உள்ளிட்டவற்றையும் ஆன் -லைனில் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கான&'ஸ்மார்ட்கார்ட்&' வழங்கும் பணிகளும் இதன் அடிப்படையில் துவங்கப்பட்டது. இதுவரை, பதிவுகள் மட்டுமே செய்யப்படுகிறதே தவிர, ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவசர கதியில், சுற்றறிக்கை அனுப்பி, மாணவர்களின் விவரங்களை அடிக்கடி கேட்பதால் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளனர்.
தற்போதுஇப்பணிகளில் கூடுதலான பிரச்னையும் கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரப் பட்டியல் மற்றும் தேர்வுதுறைத்துக்கு அனுப்பப்படும் பெயர் பட்டியலையும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் அனுப்ப கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பட்டியல் அனுப்பப்பட்ட பல பள்ளிகளுக்கு அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.மாணவர்களின் பெயருக்கு பின்னால், புள்ளி வைக்கப்பட்டுள்ளதும், இடையில் கமா இருப்பதையும் காரணமாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனினும், தேர்வுத்துறைக்கான பட்டியலில் அவ்வாறே குறிப்பிட்டிருப்பதால், தலைமையாசிரியர்கள்குழப்பமடைந்தனர்.

கல்வித்துறைபுள்ளிகள் இல்லாமல் பெயர்களை அனுப்பும் படியும், பெயர் பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாதென தேர்வுத்துறை அறிவிப்பதாலும், செய்வதறியாது திண்டாடி வருகின்றனர் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள். இப்பிரச்னையால், பள்ளிகளின் செயல்பாடுகளைக்கூட கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறை ஏற்படும் இவ்வாறான குழப்பங்களால், பள்ளிகளின் செயல்பாடுகள் மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

கற்றல் அடைவு தேர்வு ஆசிரியர்கள் எதிர்ப்பு

Image may contain: text

ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Image may contain: text

RTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாணை இல்லை.

THANKS: MR.A.JAYAPRAKASH
  தமிழகத்தின் அரசுஅலுவலகங்களில் CPSல் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு
மாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாக தமிழகஅரசிடம் அரசாணைஇல்லையென நிதித்துறை பதில்
வழங்கி உள்ளது. அதன்விவரம் பின்வருமாறு
பழைய ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசுஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மாதாந்திர (அகவை முதிர்வு) ஓய்வூதியம், பணிபுரியும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரணமடைந்தால், அந்த ஊழியர்களின்கணவன் (அ) மனைவிக்கு
மாதந்தோறும் குடும்ப ‌ஓய்வூதியம், விருப்ப ஓய்வூதியம், இயலாமை
ஓய்வூதியம், ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம்,
மற்றும் இரக்க ஓய்வூதியம்என்னும் ஓய்வுபெறும் தன்மைக்குஏற்ப 7 வகையான ஓய்வூதியம் நடைமுறையில் தமிழகஅரசால் வழங்கப்பட்டுவருகிறது.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்ததிரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாதந்தோறும் வழங்க வேண்டுமென, தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளஅரசாணை எண்(ம) நாளைகுறிப்பிடவும்,
மேலும் இந்த அரசாணையின்நகலை வழங்கவும். என்று தமிழகஅரசின் நிதித் துறைக்கு 26.09.2016 நாளிட்ட மனுவில்வரிசை எண்1 முதல் 6 வரையான தகவல்களை கோரி RTI 2005இன்கீழ் கடிதம்அனுப்பினார். நிதித் துறையின் கடித எண்.53857/நிதி(PGC-1)/2016 நாள்:24.10.2016. என்ற கடிதத்தில்மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்குஅரசாணை இல்லைஎன பதில் வழங்கப்பட்டுள்ளது.

CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், தமிழகத்தின் அரசு
அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திரஓய்வூதியம், குடும்ப ‌ஓய்வூதியம்,விருப்ப ஓய்வூதியம், இயலாமைஓய்வூதியம் ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம்மற்றும் இரக்கஓய்வூதியம் என்னும் 7 வகையான ஓய்வூதியம் வழங்குவதுதொடர்பாக தமிழகஅரசிடம் அரசாணைஇல்லை.

அரசாணை இல்லையென்பதை விட, இன்னும் அரசால்அரசாணை பிறப்பிக்கப்படவில்லை
என்பதே உண்மை.

FLASH NEWS : SLAS DEC - 2016 : மாவட்ட வாரியாக SLAS நடைபெறும் பள்ளிகளின் பட்டியல்

மத்திய அரசு அறிவிப்பு: கல்வி வரைவு கொள்கைக்குமீண்டும் குழு அமைக்கப்படும்

புதிய தேசிய கல்வி வரைவு கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி சமர்பித்த நிலையில், மீண்டும் புதிய குழு அமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போதைய கல்வி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்தது. இக்கமிட்டி, பல்வேறு ஆலோசனைக்கு பிறகு, புதிய கல்வி வரைவு கொள்கையை கடந்த மே மாதம் சமர்ப்பித்தது. இதில் உள்ள பெரும்பாலான அம்சங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், புதிய கல்வி வரைவு கொள்கையை தயாரிக்க மீண்டும் ஒரு புதிய கமிட்டி அமைக்க இருப்பதாக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறி உள்ளார்.அவர் அளித்த பேட்டியில்,

‘‘சிறந்த கல்வியாளர்கள் கொண்ட புதிய குழு இன்னும் 10 நாட்களில் அமைக்கப்படும். இதற்காக சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன’’ என்றார். சுப்பிரமணியன் கமிட்டியின் வரைவில், ‘‘நமது கல்வி முறையில் அடிப்படையிலேயே சில மாற்றங்கள் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இவற்றை மேற்கொள்ள அரசுதயங்குவதாக ஏற்கனவே சுப்பிரமணியன் விமர்சித்திருந்தார். இதனால் புதிய குழு அமைக்கப்பட இருப்பதால் சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு ஏற்காதா என அமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு, ‘‘சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளும் ஏற்கப்படும். மேலும், அந்த கமிட்டியின் வரைவு கொள்கைகளையே இறுதி கொள்கையாக ஏற்க வேண்டுமென்ற கட்டாயமுமில்லை’’ என ஜவடேகர் கூறினார்.

CBSE., பள்ளிகளில் கரன்சிக்கு 'நோ '

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே கட்டணம் செலுத்த முடியும். மோடி தலைமையிலான மத்திய அரசுபணமில்லா வர்த்தகம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன் மூலம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என அரசு நம்புகிறது. 
இதன் முக்கிய நடவடிக்கையாக சமீபத்தில் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ்பெறுவதாக அறிவித்தது. இதன் மூலம் பணம் பதுக்கிய, பண முதலைகள் தங்களின் கள்ளப்பணத்தை வெள்ளையாக மாற்ற பகீர பிரயத்தனம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் , வருமான வரி மற்றும் அமலாக்க துறையினரின் கடும் நடவடிக்கையால் நாடு முழுவதும் கோடி, கோடியாக பணம் , கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே பள்ளிக்கட்டணம் செலுத்த முடியும். கரன்சி நோட்டுகளாக பெற்று கொள்ள முடியாது , இந்த முறை வரும் ஜனவரி மாதம் 17 ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ., செயலர் ஜோசப் இம்மானுவேல் அனைத்து பள்ளிதலைமை நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜனவரி மாதம் 17 ம் தேதி முதல்:

ஆன்லைன் மூலம் இ கட்டணம் செலுத்தும் முறைக்கு வாருங்கள், உங்களின் மொபைல் போனே உங்களின் வங்கி என்று , வாலட், டெபிட் கார்டு, ஸ்வைப்பிங் மூலம் பணமில்லா வர்த்தகத்திற்கு அரசு அழைப்பும், இது தொடர்பாக நாள்தோறும் விளம்பரமும் வெளியிட்டு வருகிறது. மத்திய அரசு துறைகளும், அரசு சார்ந்த அமைப்புகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன. 

பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!

மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, பாடப்புத்தகங்கள், பாடங்கள் சம்பந்தமான தகவல்கள், கல்வித்துறையின் செயல்பாடுகள், கல்வித்துறையிலுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஆன்-லைன் மூலம் அறிந்துகொள்வதற்காக பள்ளி மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்தை அரசு அறிமுகப்படுத்தியது. திட்டத்தை செயல்படுத்துவதற்கானபணிகளை கடந்த, 2012 ஆண்டில் துவக்கியது.இதன் அடிப்படையில் மாணவர்களின் பெயர், புகைப்படம், பெற்றோர் பெயர், மாணவரின் ஜாதி, பள்ளியின் பெயர் உள்ளிட்டவற்றையும் ஆன் -லைனில் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கான &'ஸ்மார்ட் கார்ட்&' வழங்கும் பணிகளும் இதன் அடிப்படையில் துவங்கப்பட்டது. இதுவரை, பதிவுகள் மட்டுமே செய்யப்படுகிறதே தவிர, ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவசர கதியில், சுற்றறிக்கை அனுப்பி, மாணவர்களின் விவரங்களை அடிக்கடி கேட்பதால் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளனர்.தற்போது இப்பணிகளில் கூடுதலான பிரச்னையும் கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரப் பட்டியல் மற்றும் தேர்வுதுறைத்துக்கு அனுப்பப்படும்பெயர் பட்டியலையும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில்அனுப்ப கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பட்டியல் அனுப்பப்பட்ட பல பள்ளிகளுக்கு அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் பெயருக்கு பின்னால், புள்ளி வைக்கப்பட்டுள்ளதும், இடையில் கமா இருப்பதையும் காரணமாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனினும், தேர்வுத்துறைக்கான பட்டியலில் அவ்வாறே குறிப்பிட்டிருப்பதால், தலைமையாசிரியர்கள் குழப்பமடைந்தனர்.

கல்வித்துறை புள்ளிகள் இல்லாமல் பெயர்களை அனுப்பும் படியும், பெயர் பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாதென தேர்வுத்துறை அறிவிப்பதாலும், செய்வதறியாது திண்டாடி வருகின்றனர் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள். இப்பிரச்னையால், பள்ளிகளின் செயல்பாடுகளைக்கூட கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறை ஏற்படும் இவ்வாறான குழப்பங்களால், பள்ளிகளின் செயல்பாடுகள் மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

CPS NEWS: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வரம்பிற்குள் PFRDAவின் ஓய்வூதிய நிதி மேலாளர் UTI இல்லை. எனவே, தமிழகத்தில் மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய விபரம் வழங்க இயலாது. RTI பதில்.

தேசிய திறனாய்வு தேர்வுக்கான (NMMS) பாடத்திட்டம்

MAT Syllabus

1.Number Series
2.Identifying The Wrong Number In The Series
3. Letter Series
4.Change Of Sign And Number
5. Substitution of Mathematical Symbol
6. Problem Solving Questions
7. Odd - Man-Out Figures
8. Numbers Figures And Their Relationship
9. Similarity
10. Shapes Identifiacation
11.Vendiagram
12. Number Matices
13.Numbers And Symbols
14.Inserted Pictures
15.Time Related Questions
16.Direction Related Questions
17.Relationship Related Questions
18.Puzzles
19.Number Coding
20.Pictures Similarity
21.Mirror Image
22.water reflection
23.Dice Related Sum
NMMS mat question type

SAT Syllables

கணிதம்
VII I Term, II Term, III Term
VIII I Term, II Term Only

அறிவியல்

VII I Term, II Term, III Term
VIII I Term, II Term Only

சமூக அறிவியல்

VII I Term, II Term, III Term
VIII I Term, II Term Only

6 அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்ணா

பணிநிரந்தரம் கோரி 6 ஒடிஸா மாநில அமைச்சர்களின் இல்லங்களை நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என அறிவிக்கை ஒன்றை மாநில அரசு வெளியிட்டு உறுதி கூறியிருந்தது.
அறிவிக்கை வெளியிட்டு 5 மாதங்கள் ஆகியும் பணியை முறைப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீண்ட காலமாக ஆர்ப்பாட்டம் செய்து வந்த ஒப்பந்தப் பணி ஆசிரியர்கள், நிதியமைச்சர் பிரதீப் குமார் அமத், உள்ளாட்சித் துறை அமைச்சர் அருண் சாஹு, மின் துறை அமைச்சர் பிரணாப் தாஸ், உணவுத் துறை அமைச்சர் சஞ்சய் தாஸ் வர்மா, சட்டப் பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் விக்ரம் கேசரி அரூகா, பள்ளிக் கல்வி அமைச்சர் தேவிபிரசாத் மிஸ்ரா ஆகிய 6 அமைச்சர்களின் இல்லங்களை செவ்வாய்க்கிழமை திடீரென முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். பணியை உடனடியாக நிரந்தரம் செய்யக் கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது குறித்து மாநிலப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கூறியதாவது:
பணிநிரந்தரம் தொடர்பான அறிவிக்கையை அரசு வெளியிட்டு ஐந்து மாதங்களாகிவிட்டன. பணியை முறைப்படுத்துவதற்கான நடைமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பணி வரன்முறைக்கான வழிகாட்டுதல்களில் ஒடிஸா ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அரசு நிபந்தனை விதிக்கிறது. இதனால் ஒப்பந்தப் பணியில் இருக்கும் சுமார் 17 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணிநிரந்தரம் செய்யப்படாமல் போகலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மூன்றடுக்கு ஊராட்சித் தேர்தல் பணியைப் புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 14.12.2016 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


12/12/16

தேசிய திறன் தேர்வு அறிவிப்பு குறித்து சர்ச்சை தகவல் தெரியாமல் மாணவரகள் தவிப்பு

இனி உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

பதவி உயர்வு பெற்ற முதுகலைஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி
தலைமையாசிரியராகப் பதவிஉயர்வு பெற முடியாது.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பானவழக்கு:
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுதொடர்பான வழக்குஇன்று சென்னை உயர்நீதி மன்றத்தில்நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இத்துணைநாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்தவாரம் என்ற அளவில் குறுகியகால அளவில் ஒரு தேதியினைக்குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டுவந்தது. ஆனால் இன்று நடந்தவிவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிஉயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்டஅனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதிவிசாரணையாக விசாரிக்கப்படும்.

இறுதி விசாரணை வரை தற்போதுள்ளதடையாணை உள்ளபடியே தொடரும். இதற்குப் பெயர் Stay resolution order என்பதாகும். இதன் மூலம், புதிதாகதடையாணை ஏதும் இவ்வழக்கில் பெறஇயலாது. அதே சமயம், இருக்கின்றதடையாணையை யாராலும் நீக்க முடியாது. இனிஒரே ஒரு விசாரணை மட்டும்தான். அது இறுதி விசாரணை மட்டுமே. ஏற்கனவே இருந்ததைப் போல் வார வாரம்லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்குவர சில மாதங்கள் ஆகும்.


இன்னும்சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல்கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை. தங்கள் உண்மையுள்ள, ப.நடராசன், மாநிலதலைமை நிலையச் செயலாளர், பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும்தமிழாசிரியர் கழகம் ,தருமபுரி மாவட்டம்.

SSA., போட்டிகளில் உதவிபெறும் பள்ளிகள்புறக்கணிப்பு

ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ஏறத்தாழ இரு மடங்கு வரை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் !!

தில்லிஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கெளரவ ஆசிரியர்களுக்கான ஊதியத்தைஏறத்தாழ இரு மடங்கு வரைஉயர்த்த அமைச்சரவை
ஒப்புதல் தெரிவித்துள்ளது.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் தில்லி தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய
முடிவுகள்குறித்து முதல்வர் கேஜரிவால் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் கெளரவ ஆசிரியர்களின் ஊதியத்தைஉயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போதுவரை கெளரவ ஆசிரியர்களுக்கு தினக்கூலிஅடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அவர்கள் விடுப்பு எடுக்கும்நாளில் ஊதியம் பெறாத நிலைஇருந்து வந்தது. இனி கெளரவஆசிரியர்களின் ஊதியம் மாதவாரியாக கணக்கிட்டுவழங்கப்படும். இதன்படி, மாதம் சுமார் ரூ.17,500 வரை ஊதியம் பெற்று வந்தகௌரவ ஆசிரியர், மாற்றியமைக்கப்பட்ட ஊதிய நிர்ணயத்தின்படி இனிமாதம் சுமார் ரூ.32,200 முதல்ரூ.34,100 வரை பெறுவர். மத்தியஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) முடித்தவர்கள், தேர்வு முடிக்காதவர்கள் எனஇரு வகைகளாக இருக்கும் கௌரவஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர், டிஜிடி(பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்), பிஜிடி (முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்), சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்குஇந்த ஊதிய உயர்வு பொருந்தும். மாற்றியமைக்கப்பட்ட சிடிஇடி ஆசிரியர்களின் புதியமாத ஊதிய விவரம் வருமாறு(அடைப்புக்குறியில் தினப்படி, பழைய மாத ஊதியம்): உதவி ஆசிரியர் - ரூ.32,200 (ரூ.700, ரூ.17,500); டிஜிடிஆசிரியர் - ரூ.33,120 (ரூ.800,ரூ.20,000); பிஜிடிஆசிரியர் - ரூ.34,100 (ரூ.900, ரூ.22,500); சிறப்புக்கல்வி ஆசிரியர் - ரூ.33,120 (ரூ.800, ரூ.22,000). சிடிஇடிதேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் புதியஊதிய விவரம் வருமாறு: உதவிஆசிரியர் - ரூ.25,000 (ரூ.700, ரூ.17,500); டிஜிடிஆசிரியர் - ரூ.26,250 (ரூ.800, ரூ.20,000); பிறஆசிரியர்கள் (ஓவியம், உடற்பயிற்சி, நூலகர்) - ரூ.26,250 (ரூ.800, ரூ.20,000). இதுவரைகெளரவ ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு அளிக்கப்படவில்லை.


இந்த நிலையை மாற்றப்பட்டு இப்போதுஆண்டுக்கு எட்டு நாள்கள் தற்செயல்விடுப்பு (கேஷ்வல் லீவ்) அளிக்கப்படவுள்ளது. மத்திய அரசு 2011-ஆம் ஆண்டில் கொண்டுவந்த அனைவருக்கும் கல்விச் சட்டத்தில் மத்தியஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும்"சிடிஇடிட தேர்வை எழுதி தகுதிபெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்தஅவகாசம் கடந்த ஜூலையுடன்  நிறைவடைந்து விட்டது. இவ்வாறு "சிடிஇடி' தேர்வை எழுதாமல் இரண்டாயிரம்கெளரவ ஆசிரியர்கள் தில்லியில் உள்ளனர். சட்டப்படி இதுபோன்ற ஆசிரியர்களைப் பணியில் இருந்து நீக்கவேண்டும். ஆனால், இந்த கௌரவஆசிரியர்கள், "சிடிஇடி' தேர்வை எழுத இருவாய்ப்புகளை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இரு வாய்ப்புகளுக்குள் "சிடிஇடி' தேர்வில் வெற்றி பெறாவிட்டால், அவர்களைபணியில் இருந்து விலக்குவதைத் தவிரவேறு வழி இல்லை என்றார்கேஜரிவால். பேட்டியின் போது துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ்சிசோடியா உடனிருந்தார்

பிறந்த தேதியில் மாற்றமா? பாஸ்போர்ட் விதிகள் தளர்வு !

CCE-4th WEEK MATHS, SCIENCE, SOCIAL- KEY




RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி

CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்தேதியை பற்றியும்,
எத்தனை பக்க அறிக்கைதயார் செய்துள்ளது, சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை பற்றிய தகவல்கள் (நிதித்துறையின்) இப்பிரிவில் இல்லையென பதில் வழங்கப்பட்டுள்ளது.அதன்விவரம் பின்வருமாறு

தருமபுரிமாவட்டத்தை சேர்ந்த திரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் தமிழக அரசு
ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழுவின்  செயல்பாடுகளின்விவரம் பற்றி தமிழக அரசின்  நிதித்துறைக்கு 12.09.2016 நாளிட்ட மனுவில் வரிசைஎண் 1 முதல் 9 வரையான தகவல்களைகோரி   RTI 2005இன்  கீழ்கடிதம் அனுப்பினார். நிதித் துறையின் கடிதஎண்.50725/       நிதி(PGC-1)/2016 நாள்:30.09.2016. என்ற கடிததத்தில் RTI 2005இன் 2f விதியை காரணம்காட்டியும் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றி தகவல் வழங்கஇயலாது என பதில் வழங்கிஉள்ளது. (இத்த‌கவல் ஏற்கனவேநமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.)

    இக்குழு    பணிகளை     பதிவு       செய்யும்          போதுIncluding records, Documents, Memos, Opinions, Advices, Circulars, Orders, Reports, Papers, Samples,என்றபெயர்களின் எதேனும் ஒரு வகையில்தான், அக்குழு பதிவு செய்வதுமற்றும் தயார் செய்யும் கருத்துகள்ஆவணங்களாகஅடங்கும் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலே கூறியுள்ள பெயருடையஆவணங்கள் அனைத்தும் & அவற்றோடு தொடர்புடைய தகவல்களையும் RTI 2f விதியின் கீழ் வழங்கலாம் எனஇந்திய அரசின் சட்டத் துறையால், மத்திய அரசின் கெஜட்டில் 21.06.2005 அன்று வெளியிட்ட, 23 பக்கங்களை கொண்ட RTI 2005இன் விதிமுறைகள் அடங்கியதொகுப்பின் 2வது பக்கத்தில் கூறியுள்ளது.அந்த பக்கத்தின் நகலைதங்களுக்கு (நிதித் துறை) இணைத்துள்ளேன். மேலும் இத்தொகுப்பில் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றிய தகவலை வழங்ககூடாது என எந்த ஒருபக்கத்திலும் இல்லை.  அக்குழுஇன்று வரை தயார் செய்துள்ளஅறிக்கையின் பக்கங்களின் எண்ணிக்கையை தான் கேட்டுள்ளேன்.

நான் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தும் RTI 2005 2f இன் படி வழங்ககூடியதாகவே உள்ளது என்பதை தெரிவிக்கிறேன். என்று நிதித் துறைக்கு 25.10.2016 நாளிட்ட  மனுவில்மேல்முறையீடு செய்துள்ளார்.

அம்மேல்முறையீட்டுகடிதத்திற்கு நிதித் துறையின் கடிதஎண்.59145/நிதி (PGC-1)/2016 நாள்:30.11.2016. என்ற கடிதத்தில் இவ்வல்லுநர்குழு இன்று வரை தங்களுக்குள்ளாகவேதலைவர், உறுப்பினர்களுடன் 3 ஆலோசனை கூட்டமும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திடம்3 கருத்து கேட்பு கூட்டமும், அதில்33 அரசு ஊழியர்கள் சங்கங்களும், 23ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டது என்றும், CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி

3097 மனுக்கள்வந்துள்ளது. என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.

RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி

CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்தேதியை பற்றியும்,
எத்தனை பக்க அறிக்கைதயார் செய்துள்ளது, சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை பற்றிய தகவல்கள் (நிதித்துறையின்) இப்பிரிவில் இல்லையென பதில் வழங்கப்பட்டுள்ளது.அதன்விவரம் பின்வருமாறு

தருமபுரிமாவட்டத்தை சேர்ந்த திரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் தமிழக அரசு
ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழுவின்  செயல்பாடுகளின்விவரம் பற்றி தமிழக அரசின்  நிதித்துறைக்கு 12.09.2016 நாளிட்ட மனுவில் வரிசைஎண் 1 முதல் 9 வரையான தகவல்களைகோரி   RTI 2005இன்  கீழ்கடிதம் அனுப்பினார். நிதித் துறையின் கடிதஎண்.50725/       நிதி(PGC-1)/2016 நாள்:30.09.2016. என்ற கடிததத்தில் RTI 2005இன் 2f விதியை காரணம்காட்டியும் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றி தகவல் வழங்கஇயலாது என பதில் வழங்கிஉள்ளது. (இத்த‌கவல் ஏற்கனவேநமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.)

    இக்குழு    பணிகளை     பதிவு       செய்யும்          போதுIncluding records, Documents, Memos, Opinions, Advices, Circulars, Orders, Reports, Papers, Samples,என்றபெயர்களின் எதேனும் ஒரு வகையில்தான், அக்குழு பதிவு செய்வதுமற்றும் தயார் செய்யும் கருத்துகள்ஆவணங்களாகஅடங்கும் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலே கூறியுள்ள பெயருடையஆவணங்கள் அனைத்தும் & அவற்றோடு தொடர்புடைய தகவல்களையும் RTI 2f விதியின் கீழ் வழங்கலாம் எனஇந்திய அரசின் சட்டத் துறையால், மத்திய அரசின் கெஜட்டில் 21.06.2005 அன்று வெளியிட்ட, 23 பக்கங்களை கொண்ட RTI 2005இன் விதிமுறைகள் அடங்கியதொகுப்பின் 2வது பக்கத்தில் கூறியுள்ளது.அந்த பக்கத்தின் நகலைதங்களுக்கு (நிதித் துறை) இணைத்துள்ளேன். மேலும் இத்தொகுப்பில் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றிய தகவலை வழங்ககூடாது என எந்த ஒருபக்கத்திலும் இல்லை.  அக்குழுஇன்று வரை தயார் செய்துள்ளஅறிக்கையின் பக்கங்களின் எண்ணிக்கையை தான் கேட்டுள்ளேன்.

நான் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தும் RTI 2005 2f இன் படி வழங்ககூடியதாகவே உள்ளது என்பதை தெரிவிக்கிறேன். என்று நிதித் துறைக்கு 25.10.2016 நாளிட்ட  மனுவில்மேல்முறையீடு செய்துள்ளார்.

அம்மேல்முறையீட்டுகடிதத்திற்கு நிதித் துறையின் கடிதஎண்.59145/நிதி (PGC-1)/2016 நாள்:30.11.2016. என்ற கடிதத்தில் இவ்வல்லுநர்குழு இன்று வரை தங்களுக்குள்ளாகவேதலைவர், உறுப்பினர்களுடன் 3 ஆலோசனை கூட்டமும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திடம்3 கருத்து கேட்பு கூட்டமும், அதில்33 அரசு ஊழியர்கள் சங்கங்களும், 23ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டது என்றும், CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி

3097 மனுக்கள்வந்துள்ளது. என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.

ALF YEARLY SSLC TAMIL FIRST PAPER & SECOND PAPER- KEY

CCE WORKSHEET -REPORT FORMS

ஜிப்மர் மருத்துவ கல்லூரி முதுநிலை படிப்பு நுழைவுத்தேர்வு

ஜிப்மர் மருத்துவ கல்லூரி முதுநிலை படிப்பு நுழைவுத்தேர்வு
ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, 69 மையங்களில், இன்று நடக்கிறது. காலையில், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு தேர்வுகள் நடக்கின்றன. இந்தியாவில், 17 நகரங்களில் அமைந்துள்ள, 69 தேர்வு மையங்களில், தேர்வு நடக்கிறது. புதுச்சேரியில், 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் நடக்கும் டி.எம்., - எம்.சி.எச்., தேர்வுகள், 9 நகரங்களில், 9 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கு புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவம் எம்.டி., - எம்.எஸ்., தேர்வுகளுக்கு 26,869 நபர்களும்; டி.எம்., - எம்.சி.எச்., தேர்வுக்கு, 2,287 நபர்களும் விண்ணப்பித்து உள்ளனர். ஜிப்மரில் எம்.டி., - எம்.எஸ்., பிரிவுகளில், 102 இடங்களும், டி.எம்., - எம்.சி.எச்., பிரிவில், 18 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இரண்டு தேர்வுகளின் முடிவுகள் வரும், 18ம் தேதி வெயிடப்படும். கலந்தாய்வுகள் டிசம்பர் மாதம், 21 மற்றும் 28ம் தேதி நடக்கிறது. வகுப்புகள் ஜனவரி மாதம், 2ம் தேதி தொடங்குகிறது. 

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வர்தா புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 
இந்த புயல்  சென்னைக்கு மிகவும் அருகே கரையை கடக்கும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது  மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

USEFUL HANDBOOKS TO ALL TEACHERS REGARDING RULES & OFFICEPROCEDURES

Admission Notice Joint Entrance Examination (JEE) Main 2017

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 க்கு பின்னரும் தொடர வாய்ப்பு.

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு

புதுச்சேரி,: சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர் நாராயணசாமி பேசி னார்.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட் டம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கல்வித் துறை இயக்குனர் குமார் வரவேற்றார்.

அமைச்சர் கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு செயலர் அருண் தேசாய் வாழ்த்தி பேசினர்.முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரியில்லை. இது ஆசிரியர் களின் மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.நம்முடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம்.
மற்றவர்களின் பிள்ளைத்தான் அரசு பள்ளிகளில் சேர்க்கிறோம். இதுதான் நிதர்சனமான உண்மை. அரசு பள்ளிகளில் சிறந்த கட்டமைப்பு மற்றும் தரமான வசதிகள் உள்ளன. திறமையான ஆசிரியர்களும் உள்ளனர்.கணிப்பொறி ஆய்வகங்களும் உள்ளன.

ஆனால், அவற்றை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்வதில்லை.வகுப்புக்கு செல்லும்முன் ஆசிரியர்கள் முன் தயாரிப்புடன் பாடம் எடுக்கச் செல்வதில்லை. முன் தயாரிப்புடன் போனால், மாணவர்களும் ஆர்வமுடன் கற்பார்கள். அகில இந்திய அள வில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் உள்ளது. புதுச்சேரியில் 14 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது.கல்வியில் பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட் ஆகியவை தரமான கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

அங்கெல்லாம் 10 முதல் 15 சதவீதம் வரை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உருவாகி வருகின்றனர். நாமும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பது முக்கியம்.தேர்வில் 100 சதவீத வெற்றி என்பது சாதனை அல்ல. மாணவர்கள் எதைக் கற்றுக் கொண்டனர் என்பதே முக்கியம். இதுவரை நடந்தவற்றை விட்டுவிட்டு, இனிமேல் கல்வித் தரத்தை மேம்படுத்த பொறுப்புணர்வோடு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால் விருதுகள், பதக்கங்கள் கொடுக்கிறோம்.

மேலும், சிறப்பாக பணியாற்றினால் இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து கூட்டத் தில் கலந்து கொண்ட ஆசிரியர்களும், 16 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்து பரிந்துரை அளித்தனர். அந்த பரிந்துரைகளில் தேவையாவற்றை அரசு நிறைவேற்றும்.இதேபோன்ற கலந்துரையாடல் கூட்டங்கள், அனைத்து பிராந்தியங்களிலும் நடத்தப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வர்தா புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல்  சென்னைக்கு மிகவும் அருகே கரையை கடக்கும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது  மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசு திட்டங்கள்

புதுடில்லி:ரொக்கமின்றி, 'டிஜிட்டல்' முறையில், பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


டிஜிட்டல் முறையிலும், எலக்ட்ரானிக் முறை யிலும் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்ப தில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என, அரசு நம்புகிறது.

இந்நிலையில், டிஜிட்டல் முறையில், பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில்,
மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கும்படி, என். பி.சி.ஐ., எனப்படும், இந்திய தேசிய பணம் செலுத்து தல் கழகத்திடம், அரசுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பான, 'நிடி ஆயோக்' கேட்டுக்கொண்டுள்ளது.

'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை:


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்த னைகள் சிறப்பான வகையில் அதிகரித்துள்ளன. அனைத்து தரப்பினரும், டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

மக்களை ஊக்குவிக்கும் வகையில், பரிசுத் திட்டங் களை, அரசு அறிவிக்கும். டிஜிட்டல் முறையில் பரி வர்த்தனை செய்வோருக்கு, இரு கட்டமாக ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும், குலுக் கல் முறையில், பரிசுக்கு உரியோரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மற்றொரு கட்டமாக, காலாண்டுக்கு ஒரு முறை, பெரியளவில் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.
ஏழைகள், நடுத்தர மற்றும் சிறு வர்த்தகர்களை குறிவைத்து, இந்த திட்டங்கள் தயாரிக்கப்படும்.

பரிசுத் திட்டங்கள் குறித்த விரிவான வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். நவ., 8க்கு பின், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் அனை வருக்கும், பரிசு பெறத் தகுதி உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

வருகிறது 'வர்தா!' :80 கி.மீ., வேகத்தில் இன்று மதியம் சென்னையை கடக்கிறது:

வங்க கடலை மிரட்டும், 'வர்தா' புயல், இன்று சூறாவளியுடன், சென்னை வழியே கரையை கடக்கிறது.

துறைமுகங்கள், அனல் மின் நிலையங்களுக் கும் கடும் ஆபத்து உள்ளது என்றும், 
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலுார், வேலுார் மாவட் டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக் கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் மழை இப்போது இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வங்க கடலில், கடந்த, 7ல், உருவான காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுப் பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானால் வைக்கப்பட்ட, 'ரோஜா மலர்' என்ற பொருளில், 'வர்தா' என, பெயரிடப்பட்டு உள்ளது.

நான்கு நாட்களுக்கு முன், தெற்கு அந்தமானில் பீதியை ஏற்படுத்திய, 'வர்தா' புயல், அந்தமான் தீவுகளில் பலத்த மழையை கொட்டியது. அதனால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணி கள், கடும் தவிப்புக்கு ஆளாகினர். பின், அங்கி ருந்து நகர்ந்த புயல், ஒடிசாவுக்கும், விசாகப் பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியை நோக்கி சென்றது.

ஆனால், காற்றின் திசை மாற்றத்தால், ஆந்திரா வின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கில்,நெல்லுார் - காக்கிநாடாவுக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி நகர்ந்தது. பின், வட கிழக்கிலிருந்து
வலுவாக வீசிய காற்று, அனைத்து கணிப்பு களையும் தாண்டி, புயலை மேற்கு நோக்கி திருப்பிவிட்டுள்ளது.

இந்திய வானிலை மைய அதிகாரிகளின் தகவல் படி, நேற்று மாலையில், சென்னைக்கு தெற்கே, 300 கி.மீ., - நெல்லுாருக்கு தெற்கே, 370 கி.மீ., துாரத்தில்,வர்தா புயல் மையம் கொண்டிருந்தது. இது, கரையை நோக்கி, மணிக்கு, 20 கி.மீ., வேகத்தில் நகர்கிறது.அதிகாலை, சென்னை கடற்கரைக்கு, 100 கி.மீ., துாரத்திற்குள் நெருங்கி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது:


மிகத் தீவிர புயலாக உருவெடுத்துள்ள வர்தா, கரையை நெருங்கும் போது தீவிரத்தை இழந்து, புயலாக வலுவிழக்கும். கரையை கடக்கும் போது, மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இன்று பகல், நெல்லுாருக்கும், புதுச்சேரிக்கும் இடையே, நேரடியாக சென்னை வழியே, புயல் கரையை கடக்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் உட்பட தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யும். 10 அடி உயரத்திற்கு மேல் அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்; படகுகளை பத்திரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

வர்தா புயல், சென்னை மற்றும் புறநகர் பகுதிக ளான, மீஞ்சூர், எண்ணுார், திருவொற்றியூர் பகுதிகளை நேரடியாக தாக்கும். துறைமுகங் கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு, கடும் ஆபத்து ஏற்பட்டுள் ளதால் முன்னெச்சரிக்கை யாகபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப் புரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு; மற்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை' என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிப்பு என்ன?


மழை மற்றும் காற்றால், குடிசைகள், மண் வீடுகள், தற்காலிக கொட்டகைகள், சேதமாக லாம். நெற்கதிர்கள், வாழைத் தோட்டங்கள், வலுவிழந்த மரங்கள் சாயும். சாலைகளில் மரங்கள் முறிந்து விழுவதால், உயர் மின் கம்பங்கள் மற்றும் கேபிள்கள் அறுந்து விழும்; மின் தடை ஏற்படும். நிலைமையை சமாளிக்க, பொதுமக்கள் முன் கூட்டியே மெழுகுவர்த்தி களை வாங்கி வைப்பது நல்லது.


சென்னை துறைமுகத்தில் 10ம் எண் எச்சரிக்கை கூண்டு


* வர்தா புயலால், சென்னை, எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில், உச்சபட்ச ஆபத்தை தெரிவிக்கும், 10ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 'புயலால் துறைமுகத்திற்கு கடும் ஆபத்து ஏற்பட உள்ளது' என, இதற்கு அர்த்தம். இதற்கு மேல், எச்சரிக்கை கூண்டு இல்லை
* கடலுார், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில், எட்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு, 'தீவிரமான புயல் கரையை கடக்க வருகிறது; வெளியே வராதீர்கள்' என, அர்த்தம்
* பாம்பன், துாத்துக்குடி துறைமுகங்களுக்கு, இரண்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு, 'கடலுக்குள் புயல் நிலை கொண்டுள் ளது; துறைமுகங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்' என, அர்த்தம்.

Flash News : வர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வர்தா புயல் கனமழை காரணமாக கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (12.12.2016) விடுமுறை அறிவிப்பு.

1.சென்னை  (பள்ளி,கல்லூரிகள்)
2.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
3.புதுச்சேரி (பள்ளி,கல்லூரிகள்)o
4.காரைக்கால் (பள்ளி,கல்லூரிகள்)
5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
6.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரிகள்)
7.விழுப்புரம் (வானூர்,மரக்காணம் வட்டம்)

மேலும், 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.