யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/11/16

TNPSC குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

குரூப்1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்க வேண்டியஅம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்துடி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்டதகவல்:-
குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரைகாத்திருக்காமல், அதற்கு முன்னரே போதியகால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள்விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பபிரச்னைகளோ எழ வாய்ப்புள்ளது.
விண்ணப்பதாரர்கள்இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாகஉள்ளீடு செய்ய வேண்டும். விண்ணப்பம்சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களைவிண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவேஇணையவழி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்புதாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்துசமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களைமாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாதுஎன்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள்கரும்பலகையில் எழுதி காட்டியவுடன் மாணவர்கள்தங்களின் நோட்டுகளில் எழுதி விடையளிக்க வேண்டும். தேர்வு நடந்த அன்றய தினமேவிடைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

கார், வேளாண், வீட்டுக் கடன்களுக்கான தவணை செலுத்த 60 நாள் கூடுதல் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

 புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும்ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடிஅறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணப்பற்றாக்குறைநிலவி வருவதால், வீட்டுக் கடன், வேளாண் கடன்,
கார் கடன் உள்ளிட்டவற்றுக்கான தவணையைச்செலுத்துவதற்கு 60 நாள்கள் கூடுதல் அவகாசம்வழங்கப்படும் என்று இந்திய ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது.
அனைத்துவங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களதுவாடிக்கையாளர்களுக்கு இந்த அவகாசத்தை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 1-ஆம்தேதி முதல் டிசம்பர் 31-ஆம்தேதி வரை கடனுக்கான தவணைசெலுத்த வேண்டியவர்களுக்கு இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கடன், வீட்டுக் கடன், பயிர்க் கடன், கார் மற்றும் வாகனக் கடன்ஆகியவற்றுக்கு இந்தச் சலுகை பொருந்தும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர்களைத் தவிர, நடைமுறை மூலதனக் கணக்கில் கீழ்ரூ.1 கோடி வரை கடன்பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கும் கூடுதலாக 60 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பணம் எடுக்கும் வழிமுறைகள்: ரிசர்வ் வங்கி வெளியீடு

திருமணசெலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரைபணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ரூபாய்நோட்டு வாபஸ் விவகாரத்தில் வங்கியிலிருந்துபணம்
எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறுகட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், திருமண செலவிற்கு மட்டும்ரூ.2.5 லட்சம் வரை ஒரேதடவையாக எடுக்கலாம் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:
நவ.,8 ம் தேதிக்கு முன்வங்கியில் டிபாசிட் செய்த பணத்தை மட்டுமேஎடுக்க முடியும்.
டிச.,30 க்குள் நடக்கும் திருமணத்திற்கு மட்டுமே ரூ.2.5 லட்சம்வரை வங்கியிலிருந்து எடுக்க முடியும்.
பெற்றோர்அல்லது மணமக்களில் ஒருவருக்கு மட்டுமே ரூ.2.5 லட்சம்வழங்கப்படும்.
ரூ.2.5 லட்சம் எடுக்க தனி விண்ணப்பத்தைஅளிக்க வேண்டும்.
திருமணஅழைப்பிதழ், முன்பண செலவு ரசீதுவிண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.
வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்களிடம்உள்ள பழைய ரூபாய் நோட்டுகளைகொடுத்து மாற்றி கொள்ளலாம்.

வங்கி கணக்கு உள்ளவர்கள் அவர்கள்கணக்கில் டிபாசிட் செய்து பின்னர் எடுத்துகொள்ள வேண்டும்.

புதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 1000க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

புதிதாகநடத்தப்பட உள்ள டெட் தேர்வில்குறைவான பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்ப வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்

அதன்படி
மாணவர்பற்றாக்குறை காரணமாக பள்ளிக்கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களும்,குறிப்பிட்ட சிலபாடங்களில் 450 பின்னடைவு பணியிடங்களும் (பேக்லாக் வேகன்சி) நிரப்ப வாய்ப்பிருக்கிறது
4500 ஆசிரியர்பணியிடம் நிரப்பப்படும் என கூறியிருப்பதால் எஞ்சிய3500 காலியிடங்கள் தொடக்க கல்விதுறை,ஆதிதிராவிடர்மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இருக்கக்கூடும்.

இதனிடையே1600 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிட அறிவிப்பு விரைவில்அறிவிக்கப்படும் என கூறினர்

ENGLISH TRAINING

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை பெற 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை பெற 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழகங்களில் பயிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: 

2016-17ம் கல்வி ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரி, பல் கலைக்கழகங்களில் பயிலும்தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கான ஊக்கத் தொகை (SDAT) வழங்கப்பட உள்ளது.உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வீரர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப் பட உள்ளது.2015 ஜூலை 1-ம் தேதி முதல் 2016 ஜூன் 30-ம் தேதி வரையிலான காலங்களில், தேசிய அளவிலான பள்ளி விளை யாட்டு குழுமம், அங்கீகரிக்கப் பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள்,இந்திய விளையாட்டு குழுமம் நடத்திய போட்டிகள் மற்றும் அகில இந்திய பல் கலைக்கழகங்களுக்கு இடையே யான விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற விளை யாட்டு வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் இந்த ஊக்கத் தொகையை பெற விண்ணப் பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரின் அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள லாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in மூலம்பதிவிறக்கமும் செய்துக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்ப படிவங்களை வரும் 30-ம் தேதிக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில், தகுந்த அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகிய வற்றுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணிகள் ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.), தமிழக அரசு துறைகளில் ஏற்படும் மருத்துவம் தொடர்பான பணியிடங்களை நிரப்பி வருகிறது.
தற்போது இந்த அமைப்பு உதவி அறுவைசிகிச்சை மருத்துவர் (அசிஸ்டன்ட் சர்ஜன்) பணிகளை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1,223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 1079 பணியிடங்கள் புதிய பணியிடங்களாகும். மீதியுள்ள 144 இடங்கள் பின்னடைவுப் பணிகளாகும். இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி. பி.சி.எம். பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் 48 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். 1-7-2016-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி:
எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புடன், முதுநிலை டிப்ளமோ மருத்துவ படிப்புகள், மருத்துவ மேற்படிப்புகள், சிறப்பு பிரிவு படிப்புகள், டி.என்.பி. ஆகிய படிப்புகளை படித்து மெட்ராஸ் மருத்துவ பதிவு மையத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகளுடன், தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ)., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.375 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும், செலான் மூலம் இந்தியன் வங்கி கிளைகளிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-11-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். 2-12-2016-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு 22-1-2017-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்கு தடை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு:

வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பெரம்பூரை சேர்ந்த குமாரவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது

தமிழகத்துக்கு புதிய 500 நோட்டு 25ம் தேதி வருகிறது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல்

மத்தியஅரசின் அறிவிப்புக்கு பிறகு ரூ. 10, 20, 50, 100 மற்றும்2000 நோட்டுகள் மட்டுமே வங்கிகள், ஏடிஎம்களில்கிடைக்கிறது. ரூ.500
இதுவரை தமிழகத்துக்குவந்து சேரவில்லை. இதனால், தமிழகத்தில் சில்லரைவிற்பனை கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும்கையில் 2000 பணத்தை வைத்துக் கொண்டுபொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடிவருகின்றனர். கையிருப்பில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகித்தபோதிலும் சில்லரை தட்டுப்பாடு நீங்கவில்லை. இதனால் புதிய ரூ.500 நோட்டுவினியோகித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காண முடியும் என்றசூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டுஎப்ேபாது வரும் என்பது தொடர்ந்துகேள்விக்குறியாகி வந்தது. இது குறித்துஅந்த அதிகாரிகள் கூறுகையில்,
“ புதியரூ.500 நோட்டு ஒரு சிலமாநிலங்களில் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டுஉள்ளது. தமிழகத்துக்கு நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்கு அந்தபணம் அனுப்பி வைக்கப்படும். பின்னர்அங்கிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும். வருகிற 25ம் தேதி வங்கிகளில்புதிய ரூ.500 நோட்டு வினியோகிக்கப்படவாய்ப்பு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம்” என்றார்.

TET தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி அமைச்சரை சந்தித்து மனு.

இன்று சென்னையில் கல்வி அமைச்சரை சந்தித்து வெயிட்டேஜ் பற்றி விளக்கினோம். இது குறித்து பலர் மனு அளித்துள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 தகவல்,
திரு மு.இராஜபாண்டி,
அருப்புக்கோட்டை.

SCERT - மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை மாநில போட்டிகள் 23.11.2016 & 24.11.2016ஆகிய தேதிகளில் நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்

CCE WORK SHEET 1-8TH ANSWER KEY (21.11.2016)

CCE.இரண்டாம் வார தேர்வு.21.11.2016,திங்கள்-
தமிழ் -விடைகள்
*1 ம் வகுப்பு*
1. ஈ. ஆலமரம்
2. இ.அகல்
3. ஈ.  கால்
4.  இ.ஆப்பம்
5.  ஆ. ஆ
6.  ஆ. அ
7.  ஆ. தாத்தா
8. ஆ.காகம்
9. ஆ.மாங்காய்
10. இ.ஸ்டாபெரி

*2 ம் வகுப்பு-தமிழ்*
1.இ. உறுதியுடைய
2. அ. கலை-மலை
3. ஈ.  கண்-காளை
4.அ. எழுதினாள்
5. ஆ. கோலி-கோழி
6.ஆ.கற்போம்
7.இ.மிதிவண்டி
8.அ.முடிந்தது
9.ஆ. திருப்பதி
10. இ.கைபேசி                       
 *3 ம் வகுப்பு-தமிழ்*

1.அ.அழகு
2.ஈ.மலைகளின் அரசி
3.இ.புத்தகங்கள் இருக்குமிடம்
4.ஈ.வளவன்,பந்து
5.ஆ.செயல்
6.அ.விளையாடினான்.
7.இ.நனியுண்டு
8.அ.வீரம்,வெல்லம்
9.ஆ.மரம்
10.ஆ.கடல்+கரை                       
 *4 ம் வகுப்பு-தமிழ்*

1.அ.மூதுரை
2.ஈ.தொட்டில்
3.இ.தென்னை
4.இ.வெற்றிலைக்கொடி
5.இ.வயல்
6.அ.பள்ளியிலிருந்து
7.ஆ.திண்ணையில்
8.இ.பூட்டியிருந்தது
9.ஈ.அறிமுகமான
10.ஆ.பலர்                       
*6 ம் வகுப்பு -தமிழ்*

1.ஆ.3
2.ஆ.வா
3.ஆ.குதிரையோட்டம்
4.அ.வந்தார்
5.அ.மாலா பழம் பறித்தாள்
6.அ.நட்பு
7.ஆ.இரு எழுத்தும் நெடில்
8.அ.உறுமும் புலி
9.இ.கத்தும்
10.அ.ஒற்றுமை                       
 *5 ம் வகுப்பு-தமிழ்*

1. அ. குழந்தை
2. ஈ. தோல்வி
3. அ. பொறாமை
4.  இ.( நேற்று   காலையில் உணவு   
உண்டேன்
5. ஈ.  தன் கையே தனக்குதவி
6. ஈ.  புத்தகங்கள் விற்பனை
7. அ.  11நாள்
8. ஈ.  வள்ளுவர் அரங்கம், சென்னை
9.  இ. சமையல்
10. இ.நுழைவுக்
கட்டணம் கிடையாது.                       
 *7 ம் வகுப்பு*

1. ஈ .நான்காம் தமிழ்ச்சங்கத்தை
2. ஈ.அரைஞாண்கயிறு விற்கிறான்
3.  ஈ. அவன் உடமை எனக்கு வேண்டும்.
4. இ.இறந்தகாலம்
5. ஆ.வினாக்குறி
6. இ.காவிரி ஆற்றின் தென்கரையில்
7. இ. பேரூர்
8. இ.அமைந்து+உள்ள
9. ஈ.தன் தந்தையிடம்
10. ஆ.இடப்பெயர்                       
 *8 ம் வகுப்பு-தமிழ்*
1.ஈ. உ0
2.ஈ.ஆந்தை அறியது
3.இ.புனல்
4.இ. வென்று வந்தாள் -பெயரெச்சத்தொடர்
5.அ.தமிழ்நாடே திரண்டது-இடவாகுபெயர்
6.அ.சுப்பிரமணியன்
7.ஆ.15
8.அ.பாஞ்சாலிசபதம்
9.இ.அரசு+அவை
10.ஈ. 1,3 ம்

21/11/16

இனி வருமான வரி கிடையாது ? மாேடியின் அடுத்தடுத்த அதிரடி..!!!

வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பாெதுபட்ஜெட்டில்வருமான வரி ரத்து செய்யப்படவாய்ப்புள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

பழைய, 500 - - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
என அதிரடி அறிவிப்பால்கறுப்புப் பணத்தை வெளிக்காெண்டு வரமுடியும் என பிரதமர் மோடியின்எண்ணமாக இருந்தது. 

இந்த திட்டத்தால் பொது மக்களுக்கு பெரும்பிரச்னை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதைப் பெரிதாக்கி அமளியில்ஈடுபட்டதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.
நாட்டின்பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, எதையும்செய்யத் தயாராக இருப்பதாக மோடிதிட்டவட்டமாக தொிவித்துளளாார். சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில்பேசும் போது, 'இன்னும் பலதிட்டங்கள் என் மனதில் உள்ளன' என, சொல்லியிருக்கிறார்.

அது என்ன புது திட்டம்? அரசியல்வாதிகள், அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுவது என்னவென்றால், வரும் பிப்ரவரி மாதம்அரசு சமர்ப்பிக்க உள்ள மத்திய பட்ஜெட்டில், வருமான வரியை ரத்து செய்யப்பாேவதாகவும்,  அதற்குபதிலாக இரண்டு வரிகள் அமலில்வரப்பாேவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டங்கள் அமலில் வந்தவுடன், வங்கிமூலமாக வாங்கும் பொருட்களுக்கு வரி.- இதை, 'பேங்கிங்டிரான் சாக்சன்' வரி என்கின்றனர். இன்னொன்று: சரக்கு மற்றும் சேவை வரி. இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்என்பதோடு, வருமான வரி ஒழிந்தால்நடுத்தர வகுப்பினர் மிக சந்தோஷப்படுவர் என்பதேபிரதமரின் திட்டமாக உள்ளது என கூறப்படுகிறது.

அரசுப்பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்வேன் அமைச்சர் பாண்டியராஜன்

மின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு!

தமிழகத்தில்அரசு ஊழியர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும் நீண்டகாலத்தய பணிப்பதிவேடு முறைக்கு விடை கொடுத்து புதியஇ-மின்னணு பதிவேற்றத்துக்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்அனைவரும் பணிக்கு சேர்ந்தது
முதல்அவர்கள் ஓய்வு பெறும் வரையில்அவர்கள் பெறும் ஊதியம், நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு, ஊக்கஊதிய உயர்வு,
பணி வரன்முறை, பணி நிரந்தரம், பதவிஉயர்வு, பணிக் காலத்தில் பெற்றதண்டனைகள், அயல் பணி உள்ளிட்டவிவரங்கள் அனைத்தும் பணிப் பதிவேட்டில் (சர்வீஸ்ரெஜிஸ்டர்) பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வோர் அரசு ஊழியருக்கும்தனித் தனியாகப் பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேட்டை, தாங்கள் பணிபுரியும் துறையின் அதிகாரி கவனித்து வருவார்.
மேலும், பணிப் பதிவேட்டில் ஊழியரின் குடும்ப விவரம், கல்வித்தகுதிகள், உடல் தகுதிகள், குடும்பநல நிதி, வருங்கால வைப்புநிதி உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். அரசுஊழியரின் பணியிடமாறுதலின் போது, இந்தப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, ஊதியச்சான்றிதழுடன் உரிய அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
இந்தப்பணிப் பதிவேட்டில் உள்ள பதிவுகள் சரிபார்க்கப்பட்டு, அதற்கு ஒப்புதலாக ஒவ்வோர் அரசு ஊழியரும்ஆண்டுக்கு ஒரு முறை கையெழுத்திடவேண்டும்.
புத்தகவடிவிலான பதிவேடு: இந்தப் பணிப் பதிவேடுகள்ஆரம்ப காலத்திலிருந்தே தாள்கள் வடிவில் பெறப்பட்டு, பின்னர் புத்தக வடிவில் மாற்றப்பட்டுபராமரிக்கப்பட்டு வருகின்றன.
பணிப் பதிவேட்டின் பக்கங்கள் நிறைவு பெற்றதும், இரண்டாவதுபணிப் பதிவேடு பதிவு செய்யப்படும்.
ஆண்டுக்கணக்கில்பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேடுகள்கிழிந்துவிடும் நிலையும் உள்ளது. அவற்றை பைண்டிங்செய்பவர்களிடம் கொடுத்து தைத்துவைத்து பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.
மின்னணுபணிப் பதிவேடு: இதுபோன்ற பிரச்னைகளுக்கு விடை கொடுக்கும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளைக் கணினிமயமாக்கும்நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மின்னணு பணிப் பதிவேடு (இ-எஸ்ஆர்) திட்டத்தில், தற்போதுள்ளகாகிதத்தால் ஆன புத்தக வடிவபணிப் பதிவேடுகளின் தகவல்களை அப்படியே மின்னணு முறையில் கணினியில்பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகக்கருவூலத் துறையின் உத்தரவின் பேரில், மாவட்ட கருவூலஅலுவலர்கள் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை மின்னணுமுறையில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த சில நாள்களுக்குமுன்பு தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக, மாவட்டங்கள்தோறும் அனைத்துத் துறை அலுவலர்களையும் அழைத்து, கருவூல அதிகாரிகள் இதற்கான ஆயத்தப் பணிகளைமேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளனர். ஒவ்வொருதுறையினரும் பணிப் பதிவேடு தகவல்களைச்சரிபார்த்து, அதை நிறைவாகத் தொகுத்துஅளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துவிழுப்புரம் மாவட்டக் கருவூல அலுவலர் இளங்கோபிரபு கூறியதாவது:
புத்தகவடிவில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு ஊழியர்களின்பணிப் பதிவேடுகளைக் கணினி முறையில் தொகுத்துநவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கருவூலஆணையரின் உத்தரவின் பேரில், இதற்காக பணிப்பதிவேடுகள் குறித்த தகவல்களைச் சரிபார்த்துத்தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்துத் துறைஅலுவலர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம்.
விரைவில்இந்தத் தகவல்களைப் பதிவேற்றம் செய்ய பயிற்சி பெற்றகுழுவினர் மாவட்டத்துக்கு வர உள்ளனர். இவர்கள், துறை வாரியாக தற்போதுள்ள பணிப்பதிவேடுகளின் விவரங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்வர்.
அதன்பிறகு, அந்தந்த துறை அலுவலர்கள், கணினிவாயிலாக பணிப் பதிவேடு தகவல்களைப்பதியவும், பராமரிக்கவும் முடியும்.
தேவைப்படும்போது அந்தத் துறையின் தலைமைக்கும், அரசுத் துறை ஆய்வுக்காகவும் பதிவேடுகுறித்த தகவல்களை இணைய வழியில் அனுப்பிவைக்கலாம். இதன்மூலம், புத்தக முறை பணிப்பதிவேடுக்கு விடை கொடுத்து, எளிதாகப்பதிவு செய்தும், பார்த்தும் பராமரிக்க முடியும். அதற்கான நடவடிக்கையை அரசுவிரைந்து மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
பணிகள்எளிதாகும்: இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில்உள்ள சுமார் 13.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 35 ஆயிரம்ஊழியர்களுக்கும் பணிப் பதிவேடு புத்தகமாகவேபராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நவீனத் திட்டம் நடைமுறைக்குவருவதன் மூலம் எளிதாகத் தகவல்களைப்பதிவு செய்யவும், பராமரிக்கவும் முடியும். காகித முறையால் பதிவேடுசேதமாவது தடுக்கப்பட்டு, தகவல்கள் நீண்ட காலம் பாதுகாப்புடன்இருக்கும் என்றனர் அவர்கள்

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது?

மருத்துவபடிப்புக்கான, 'நீட்' தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன. 'எய்ம்ஸ் மற்றும்
ஜிப்மர் தவிர, அனைத்து மருத்துவகல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில்சேர, 'நீட்' என்ற தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகட்டாயம்' என, கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் உட்பட சிலமாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்விலிருந்து, மாணவர்களுக்குவிலக்கு அளிக்கப்பட்டது.


ஆனாலும், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், தனியார் கல்லுாரிகளின், மருத்துவ மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே நடந்தது. வரும் ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு, மே மாதம் நடைபெறஉள்ளது. இதற்கு டிசம்பர் முதல்விண்ணப்பங்களை பெற, மத்திய இடைநிலைகல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. அதனால், இரு வாரங்களில், 'நீட்' தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

'தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்'

தன்னம்பிக்கையுடன்தேர்வுக்கு செல்லுங்கள். வெற்றியை உங்களால் மட்டுமே பெற முடியும்,'' என, மாணவர்களுக்கு, மனநல பயிற்சியாளர்,
கீர்த்தன்யாகிருஷ்ணமூர்த்தி அறிவுரை வழங்கினார். 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மனநல பயிற்சியாளர், கீர்த்தன்யாகிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
கடந்தவைகடந்தவையாக இருக்கட்டும். உங்களின் படிப்புக்கு பல இன்னல்கள் வந்திருக்கலாம்; அவற்றை இனிமேல் நினைக்க வேண்டாம். உங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்துவிடுங்கள்; இப்போது புதிதாக பிறந்ததாகநினைத்து கொள்ளுங்கள்.


  பொதுத்தேர்வுக்கு இன்னும் நான்கு மாதங்களேஇருப்பதால், அதை மட்டுமே நினைக்கவேண்டும். அதற்காக, தினமும், பல மணி நேரம்படிக்க துவங்குங்கள். உங்களுக்கு பிடிக்காத பாடமாக இருந்தாலும், பிடித்ததாககற்பனை செய்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்.வெற்றியை உங்களால் மட்டுமே பெற முடியும். நட்புடன், அருகில் உள்ள மாணவர்களைகட்டியணைத்து, புன்னகையுங்கள். தன்னம்பிக்கையுடன், கைகளை உயர்த்தி, 'ஜெயித்துக்காட்டுவோம்' என, கூறுங்கள். இவ்வாறுஅவர் பேசினார்.

கண்களைமூடி, கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேட்ட மாணவர்கள், தாங்கள்முன்னர் செய்த தவறுகளை உணர்ந்து, கண்களில் நீர் வடித்தனர். பின், தன்னம்பிக்கை பெற்று புன்னகையுடன், 'ஜெயித்துக்காட்டுவோம்' என, உறுதி கூறினர்.

விடுபட்ட மதிப்பெண்ணை போராடி பெற்ற மாணவி

பிளஸ்2 தேர்வில், விடைத்தாளில் விடுபட்ட மதிப்பெண்ணை போராடி பெற்ற மாணவிக்கு, 'தினமலர்' நிகழ்ச்சியில் பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.கடந்த ஆண்டு, பிளஸ்2 தேர்வில், சென்னை, பாரிமுனை, கொலம்பியன்ஸ்ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி வி.ரோமிகா, பொருளியல் பாடப்பிரிவில், 1,182 மதிப்பெண் பெற்றிருந்தார்.


விடைத்தாள்நகலை வாங்கிப் பார்த்த போது, தமிழ்தாளில் நான்கு மதிப்பெண்கள், கூட்டலில்விடுபட்டதை கண்டு பிடித்தார்.பின், மறு கூட்டலுக்கு அவர் விண்ணப்பித்தார். ஆனால், 'மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை' என, தேர்வுத்துறை தெரிவித்தது. உடன், 'தினமலர்' நாளிதழ்அலுவலகத்தை, ரோமிகாவின் பெற்றோர் தொடர்பு கொண்டனர்.
அவர்களுக்கு, நியாயமாக கிடைக்க வேண்டிய மதிப்பெண்ணைபெற, 'தினமலர்' அலுவலகம் வழிமுறைகளை காட்டியது.பின், பள்ளிக்கல்வி மற்றும்தேர்வுத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து, விடுபட்டநான்கு மதிப்பெண்ணை மறு கூட்டலில் பெற்றார். இதன் மூலம் அந்த மாணவி, சென்னையில் மாவட்ட அளவில் இரண்டாவது, 'ரேங்க்' பெற்றார். ஆனால், மாவட்ட, 'ரேங்க்' பட்டியலில் மாணவியின் பெயரை, தேர்வுத்துறையும், கல்வித்துறையும்சேர்க்கவில்லை. 'தினமலர்' அளித்த வழிகாட்டுதலில், சென்னைமாவட்ட ஆட்சியரை அணுகி, மாவட்ட அளவில், 'ரேங்க்' பெற்றதற்கான சான்றிதழை பெற்றனர்.
தேர்வில்சரியாக விடைகள் எழுதியும், அதற்கானமதிப்பெண்ணை பெற போராடி, ஜெயித்துக்காட்டிய மாணவி ரோமிகாவுக்கு, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவிக்கு, 'தினமலர்' ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி பரிசுவழங்கினார்.

'கிடைத்ததுஅங்கீகாரம்':

மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி வினாத்தாள்

அகில இந்திய ஒதுக்கீட்டிலும், தமிழகமாணவர்கள் மருத்துவம் படிக்க உதவும் வகையில், 'நீட்' என்ற மருத்துவ நுழைவுதேர்வுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகம், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில்
வழங்கப்பட்டது.மருத்துவ படிப்புக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம்என, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசின் ஒதுக்கீட்டு முறையில், கடந்த ஆண்டு, 'நீட்' தேர்வுக்குவிலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரம், தனியார்கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு, 'நீட்' தேர்வின்படியே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், 'நீட்' குறித்த விழிப்புணர்வுபெறவும், அகில இந்திய மருத்துவஒதுக்கீட்டில், தமிழக மாணவர்கள் இடங்கள்பெற வசதியாக, 'நீட்' குறித்த மாதிரிவினாத்தாள் தொகுப்பு புத்தகம், 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன. 'தினமலர்' இதழுடன், வேல்ஸ் பல்கலையின், வேல்ஸ்இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட்அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் நிறுவனம் இணைந்து, இந்த புத்தகத்தை வழங்கின. பின், 'நீட்' குறித்தஅடிப்படை தகவல்களை, வேல்ஸ் பல்கலை பேராசிரியைவிஜய் ஆனந்தி, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



  இணைந்து வழங்கியோர்'தினமலர்' நாளிதழின், டி.வி.ஆர்.அகாடமி நடத்திய, ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை, பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதிஇன்ஜினியரிங் கல்லுாரி, பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன்ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி நிறுவனங்கள், இணைந்து வழங்கின. நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்அண்ட் டெக்னாலஜி, வேல்ஸ் பல்கலை, பூர்விகாமற்றும் பெரி இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜி நிறுவனங்கள், உறுதுணை வழங்கின

செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்.

மத்தியஅரசு ஊழியர்களுக்கு வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும்நடைமுறை விரைவில்
அமலுக்கு வரவுள்ளது.இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளைமத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைவிரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள்வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தங்களது செயல்திறன் அறிக்கையைசமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், முடிக்கப்பட்டபணிகள், நிலுவையில் உள்ள பணிகள் பற்றியவிவரங்களை அவர்கள் தெரிவிக்கவேண்டும்.மத்தியஅரசு ஊழியர்களுக்கு "செயல்திறன் அடிப்படையில் ஊதியம்' என்ற முறையைஅனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஏழாவது ஊதியக்குழு கடந்த ஜூலை மாதம்பரிந்துரை செய்தது.அவர்கள் குறிப்பிட்டஅளவிலான பணிகளை முடித்தால் மட்டுமே, அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்படவேண்டும் என்றும் அந்தக் குழுபரிந்துரை செய்தது.அதன்படி, ஊழியர்களின்பணிகள், அவர்கள் அளிக்கும் வாராந்திரசெயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கு வருடாந்திர அளவில் தர மதிப்பீடுசெய்யப்படும்.


வாராந்திரஅறிக்கை அல்லது குறிப்பிட்ட இலக்குகளைமுடிக்காத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மறுக்கப்படவாய்ப்புள்ளது.அரசு ஊழியர் ஒருவர், முதல் 20 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றவில்லையெனில் அவரது ஊதிய உயர்வைநிறுத்தி வைக்க முடியும்.சிறப்பாகப்பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதுஎன்று ஏழாவது ஊதியக் குழுவின்பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மக்களுக்கான செயற்கைக்கோளை செலுத்துவதில் இந்தியா முதலிடம்: மயில்சாமி அண்ணாதுரை

 மக்களுக்குஉபயோகமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் சர்வதேச அளவில் இந்தியாமுதலிடம் வகிப்பதாக
இஸ்ரோ செயற்கைக்கோள் மையஇயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்
.சேலம்மாவட்டம், தாரமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  கடந்த ஓராண்டில், இஸ்ரோ10 செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. அனைவரின் உழைப்பு காரணமாக இந்தச்சாதனை எட்டப்பட்டுள்ளது. சந்திரயான் செயற்கைக்கோள் அதன் துருவ வட்டப்பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. சந்திரயான்அனுப்பியப் படங்களைக் கொண்டு சந்திரயான் 2-இன்செயல்பாடுகள் குறித்த சோதனைகள் தற்போதுநடைபெற்று வருகின்றன.அடுத்த கட்டமாக சந்திரயான்2 நிலவில் இறங்கிச் சோதனை செய்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. நிலவில்6 சக்கர வாகனத்தை இறக்கி முழுமையான ஆய்வுகளைச்செய்வதற்கான சோதனைப் பணிகள் பெங்களூரில்முழு வீச்சில் நடந்து வருகின்றன. சந்திரயான்அனுப்பிய படங்களைக் கொண்டு நிலவில் உள்ளகனிம வளங்கள் குறித்து ஆய்வுகள்செய்யப்பட்டன. அதனடிப்படையில், நிலவில் இருப்பதைப் போன்றபாறைகள், நாமக்கல் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், நாமக்கல்லில் இருந்து, 50 டன் பாறையை எடுத்து, பொடியாக்கி நிலவு போன்று உருவாக்கம்செய்து அந்தப் பொடிகளைத் தூவி, சந்திரயான் 2-இன் செயல்பாடுகள் சோதனைசெய்யப்பட்டு வருகின்றன.இந்தச் சோதனைகள் அனைத்தையும்வெற்றிகரமாக முடித்த பிறகு 2017-ஆம்ஆண்டு இறுதியில் அல்லது 2018-ஆம் ஆண்டு தொடக்கத்தில்சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பப்படும். ஆதித்யா திட்டத்தின் கீழ்சூரிய மண்டல ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது. தொழில்நுட்ப ரீதியில் சவாலான பணியான, சூரியனின்புவியீர்ப்பு விசையில் ஆதித்யா செயற்கைக்கோளை நிலைநிறுத்தும்பணி நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் சூரியனின்இயக்கத்தை ஆய்வு செய்யும் வகையில், ஆதித்யா வடிவமைக்கப்பட்டிருப்பதால், சூரியன் பற்றிய கூடுதல்தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.


புவியின்பருவ நிலையைத் தாண்டி, சூரியனின் பருவநிலையைத் தெரிந்து கொள்வதன் மூலம், அண்டங்களின் கதிரியக்கத்தைமுழுமையாக அறிந்துகொள்ள முடியும். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியின் மூலம்விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் முக்கியஇடம் பிடித்துள்ள இந்தியா, மக்களுக்கு உடனடி பலன் தரும்வகையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.அடுத்த நான்கு ஆண்டுகளில்ஆதித்யா திட்டம் வாயிலாக முழுமையாகதகவல்களைப் பெறுவதற்கான, முதல் கட்டப் பணிகள்தற்போது நடைபெற்று வருகின்றன என்றார்.

கோடி கணக்கில் சேர்த்த பள்ளி ஆசிரியர் கைது!

பர்ஹாம்புர்: ஒடிசா மாநிலத்தில், கிராம தொடக்கப் பள்ளிதலைமையாசிரியர், 2 கோடி ரூபாய்க்கும் மேல், வருமானத்துக்கு
அதிகமாக, சொத்து சேர்த்ததாக கைதுசெய்யப்பட்டார்.

 முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சிஉள்ள ஒடிசாவின் பர்ஹாம்புரில் உள்ள ஒரு பள்ளியின்தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார் திலிப் குமார் ஆச்சாரியா.புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார்நடத்திய சோதனையில், அவர், பல்வேறு வீடுகள், நிலம், தங்கம் என, 3.4 கோடிரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வருமானத்துக்கு அதிகமாக, அவர், 2 கோடி ரூபாய்சேர்த்துள்ளதாக கூறி, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருப்பு பணத்தை சட்டவிரோதமாக மாற்றுவோருக்கு 7 ஆண்டு சிறை: வருமான வரித்துறை எச்சரிக்கை.

கருப்புப்பணத்தை சட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்தால் 7 ஆண்டு சிறைத் தண்டனைஅளிக்கப்படும் என்று
வருமான வரித்துறைஎச்சரிக்கை செய்துள்ளது.


கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவிப்பு வெளியான நவம்பர் மாதம்8-ஆம் தேதிக்குப் பிறகு, அனைவரும் தங்களிடமுள்ளஅந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்செலுத்தி வருகின்றனர்.


மோடியின்அதிரடி அறிவிப்பை தொடர்ந்து மனை வணிக வியாபாரிகள், தங்க வர்த்தகர்கள், ஹவாலா மோசடியில் ஈடுபடுவதாகசந்தேகிக்கப்படுபவர்கள் போன்றோர் கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக மாற்றிவருவதாக வருமான வரித் துறையினருக்குதொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

இதையடுத்துதீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும்வருமான வரித் துறையினர், மிகஅதிகமான தொகையை பழைய 500, 1000 ரூபாய்நோட்டுகளாகச் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களை வங்கிகளிடமிருந்துபெற்று வருகின்றன. குறிப்பாக ரூ.2.5 லட்சத்துக்கும் மேல்பணம் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களை வங்கிகள்அளித்து வருகின்றன.

அந்த விவரங்களை ஆய்வு செய்து வரும்துறை அதிகாரிகள், சந்தேகத்துக்குரிய வகையில் அதிக தொகையைச்செலுத்தியவர்களிடம் அந்த வருமானத்துக்கான ஆதாரத்தைக்கேட்டு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோருக்குஇந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

வருவாய்ஆதாரத்தைக் காட்டும் உரிய ஆவணங்களுடன் வருமானவரித் துறை அதிகாரிகளைச் சந்திக்கவேண்டியதற்கான தேதி மற்றும் நேரம்அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணக்கில் வராத கருப்புப் பணத்தைசட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்தால், புதிய பினாமி பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்படும் என்று வருமான வரித்துறைஎச்சரிக்கை செய்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால்கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் கலக்கத்தில்உள்ளனர்.

இதுகுறித்துவருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், இதுவரை சுமார் ரூ.200 கோடிக்கு மேல் கணக்கில் வராதபணத்தை கண்டுபிடித்துள்ளோம். கடந்த நவம்பர் 8-ம்தேதிக்குப் பின்னர் 50 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

கணக்கில்வராத கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக பிறருடையவங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தால், நவம்பர் 1-ஆம் தேதி முதல்அமலுக்கு வந்துள்ள "பினாமி பணப் பரிவர்த்தனைதிருத்தச் சட்டத்தின்" கீழ் கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும்.

அதாவது, தங்களது கணக்கில் வராத பணத்தை சட்டவிரோதமாகபிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்தால் 7 வருட சிறைத் தண்டனையும்கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.


கருப்புப்பணம் முறைகேடாக வங்கிகளில் செலுத்தப்படுவதைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுஎன்று தெரிவித்தனர்.

தமிழகத்துக்கு புதிய 500 நோட்டு 25ம் தேதி வருகிறது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல்

மத்தியஅரசின் அறிவிப்புக்கு பிறகு ரூ. 10, 20, 50, 100 மற்றும்2000 நோட்டுகள் மட்டுமே வங்கிகள், ஏடிஎம்களில்கிடைக்கிறது. ரூ.500
இதுவரை தமிழகத்துக்குவந்து சேரவில்லை. இதனால், தமிழகத்தில் சில்லரைவிற்பனை கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும்கையில் 2000 பணத்தை வைத்துக் கொண்டுபொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடிவருகின்றனர். கையிருப்பில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகித்தபோதிலும் சில்லரை தட்டுப்பாடு நீங்கவில்லை. இதனால் புதிய ரூ.500 நோட்டுவினியோகித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காண முடியும் என்றசூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டுஎப்ேபாது வரும் என்பது தொடர்ந்துகேள்விக்குறியாகி வந்தது. இது குறித்துஅந்த அதிகாரிகள் கூறுகையில்,

“ புதியரூ.500 நோட்டு ஒரு சிலமாநிலங்களில் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டுஉள்ளது. தமிழகத்துக்கு நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்கு அந்தபணம் அனுப்பி வைக்கப்படும். பின்னர்அங்கிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும். வருகிற 25ம் தேதி வங்கிகளில்புதிய ரூ.500 நோட்டு வினியோகிக்கப்படவாய்ப்பு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம்” என்றார்.

செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்

மத்திய அரசு ஊழியர்களுக்குவாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும்நடைமுறை விரைவில்
அமலுக்கு வரவுள்ளது.
 இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளைமத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைவிரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள்வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தங்களது செயல்திறன் அறிக்கையைசமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், முடிக்கப்பட்டபணிகள், நிலுவையில் உள்ள பணிகள் பற்றியவிவரங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
மத்தியஅரசு ஊழியர்களுக்கு "செயல்திறன் அடிப்படையில் ஊதியம்' என்ற முறையைஅனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஏழாவது ஊதியக்குழு கடந்த ஜூலை மாதம்பரிந்துரை செய்தது.
அவர்கள்குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடித்தால்மட்டுமே, அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்படவேண்டும் என்றும் அந்தக் குழுபரிந்துரை செய்தது.
அதன்படி, ஊழியர்களின் பணிகள், அவர்கள் அளிக்கும்வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கு வருடாந்திர அளவில் தர மதிப்பீடுசெய்யப்படும். வாராந்திர அறிக்கை அல்லது குறிப்பிட்டஇலக்குகளை முடிக்காத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மறுக்கப்படவாய்ப்புள்ளது.
அரசு ஊழியர் ஒருவர், முதல்20 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றவில்லையெனில் அவரது ஊதிய உயர்வைநிறுத்தி வைக்க முடியும்.

சிறப்பாகப்பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதுஎன்று ஏழாவது ஊதியக் குழுவின்பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

CCE -SECOND WEEK TAMIL TENTATIVE ANSWER KEY IN SINGLE PAGE FOR 1 to 8th Std

தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற நீதிமன்றத் தடையாணை கீழே...( இத்தடையாணையின் காரணமாகவே இவ்வாண்டு வரலாறு பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது)



மத்திய அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் முன்பணம்

மத்தியஅரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.10 ஆயிரம் சம்பளமுன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது.

ரூ.10 ஆயிரம் ரொக்கம்

பிரதமர்மோடி கடந்த 8–ந் தேதி500 மட்டும் 1,000 ரூபாய் நோட்டுகள்
செல்லாதுஎன்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அனைத்து தரப்புமக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி மத்தியஅரசின் குருப்–சி ஊழியர்கள்தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாகரூ.10 ஆயிரத்தை அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதன்படிசென்னை கோட்டத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்குரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்குவதற்காகரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூபாய் 10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:–

பணத்தட்டுப்பாடு

பிரதமர்மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவித்ததால் கடந்த சில நாட்களாகபணத்தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்தோம். வங்கியில் பணம் இருந்தும், ஏ.டி.எம்.கள்செயல்படாததால் அதை எடுக்க முடியாமல்அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைஏற்பட்டது.

இதன் காரணமாக மத்திய அரசின்ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடை போக்குவதற்குஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளை வைத்தோம்.

முன்பணம்


இதை கருத்தில் கொண்டு மத்திய அரசுஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர்மாத சம்பளத்திலிருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாகவழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படிநவம்பர் மாதம் கொடுக்க வேண்டியஊதியத்திலிருந்து முன்பணமாக 10 ஆயிரத்தை இன்று முதல் 23–ந்தேதிவரை எங்களின் அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என்று எனது உயர்அதிகாரி கூறினார். இந்த தொகையை வாங்கியபிறகு எங்கள் குடும்பத்தின் பணத்தட்டுப்பாடுகுறையும்.

19/11/16

CCE.இரண்டாம் வார தேர்வு.21.11.2016,திங்கள்-
25.11.2016-வெள்ளி

தமிழ் -விடைகள்
1 ம் வகுப்பு

1. ஈ. ஆலமரம்
2. இ.அகல்
3. ஈ.  கால்
4.  இ.ஆப்பம்
5.  ஆ. ஆ
6.  ஆ. அ
7.  ஆ. தாத்தா
8. ஆ.காகம்
9. ஆ.மாங்காய்
10. இ.ஸ்டாபெரி
   
2 ம் வகுப்பு-தமிழ்

1.இ. உறுதியுடைய
2. அ. கலை-மலை
3. ஈ.  கண்-காளை
4.அ. எழுதினாள்
5. ஆ. கோலி-கோழி
6.ஆ.கற்போம்
7.இ.மிதிவண்டி
8.அ.முடிந்தது
9.ஆ. திருப்பதி
10. இ.கைபேசி                        
 3 ம் வகுப்பு-தமிழ்

1.அ.அழகு
2.ஈ.மலைகளின் அரசி
3.இ.புத்தகங்கள் இருக்குமிடம்
4.ஈ.வளவன்,பந்து
5.ஆ.செயல்
6.அ.விளையாடினான்.
7.இ.நனியுண்டு
8.அ.வீரம்,வெல்லம்
9.ஆ.மரம்
10.ஆ.கடல்+கரை                        
 4 ம் வகுப்பு-தமிழ்

1.அ.மூதுரை
2.ஈ.தொட்டில்
3.இ.தென்னை
4.இ.வெற்றிலைக்கொடி
5.இ.வயல்
6.அ.பள்ளியிலிருந்து
7.ஆ.திண்ணையில்
8.இ.பூட்டியிருந்தது
9.ஈ.அறிமுகமான
10.ஆ.பலர்                        
6 ம் வகுப்பு -தமிழ்

1.ஆ.3
2.ஆ.வா
3.ஆ.குதிரையோட்டம்
4.அ.வந்தார்
5.அ.மாலா பழம் பறித்தாள்
6.அ.நட்பு
7.ஆ.இரு எழுத்தும் நெடில்
8.அ.உறுமும் புலி
9.இ.கத்தும்
10.அ.ஒற்றுமை                        
 5 ம் வகுப்பு-தமிழ்

1. அ. குழந்தை
2. ஈ. தோல்வி
3. அ. பொறாமை
4.  இ.( நேற்று   காலையில் உணவு    
உண்டேன்
5. ஈ.  தன் கையே தனக்குதவி
6. ஈ.  புத்தகங்கள் விற்பனை
7. அ.  11நாள்
8. ஈ.  வள்ளுவர் அரங்கம், சென்னை
9.  இ. சமையல்
10. இ.நுழைவுக்
கட்டணம் கிடையாது.                        
 7 ம் வகுப்பு

1. ஈ .நான்காம் தமிழ்ச்சங்கத்தை
2. ஈ.அரைஞாண்கயிறு விற்கிறான்
3.  ஈ. அவன் உடமை எனக்கு வேண்டும்.
4. இ.இறந்தகாலம்
5. ஆ.வினாக்குறி
6. இ.காவிரி ஆற்றின் தென்கரையில்
7. இ. பேரூர்
8. இ.அமைந்து+உள்ள
9. ஈ.தன் தந்தையிடம்
10. ஆ.இடப்பெயர்                        
 8 ம் வகுப்பு-தமிழ்
1.ஈ. உ0
2.ஈ.ஆந்தை அறியது
3.இ.புனல்
4.இ. வென்று வந்தாள் -பெயரெச்சத்தொடர்
5.அ.தமிழ்நாடே திரண்டது-இடவாகுபெயர்
6.அ.சுப்பிரமணியன்
7.ஆ.15
8.அ.பாஞ்சாலிசபதம்
9.இ.அரசு+அவை
10.ஈ. 1,3 ம்

CCE - SECOND WOKSHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

Breaking Now வங்கிகளில் 500, 1000 ரூபாய் பணப்பரிமாற்றம் நாளை ஒருநாள் கிடையாது: வங்கிகள் சம்மேளனம் அறிவிப்பு!!

வங்கிகளில்500, 1000 ரூபாய் பணப்பரிமாற்றம் நாளை ஒருநாள் கிடையாது: வங்கிகள் சம்மேளனம்

முதியர்வர்கள்மட்டுமே நாளை பழைய நோட்டுகளை
மாற்றிக்கொள்ளலாம்: வங்கிகள் சம்மேளனம்
முதியோர்களுக்குமட்டுமே நாளை வங்கிகளில் பணம்விநியோகம் செய்யப்படும்.

அரசு பள்ளிகளில் கழிப்பறை... அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அரசுபள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற் படுத்ததாக்கலான வழக்கில், 'மேலும் அவகா சம்தேவை' என்ற அரசுத்தரப்பு பதிலைஏற்க மறுத்த
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, 'ஏன் போர்க்கால நடவடிக்கைஎடுக்கக்கூடாது?' என கேள்வி எழுப்பிவிசாரணையை ஒத்தி வைத்தது.

மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்தமனு:

'தமிழகத்தில்5720 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை' என2014 ஆக.,8 தினமலர் நாளிதழில் செய்திவெளியானது. திறந்தவெளியை கழிப் பிடமாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைவசதிகள் செய்ய வேண்டும். பயனற்றகழிப்பறைகளை பயன் பாட்டிற்கு கொண்டுவரமத்திய, மாநில அரசு களுக்குஉத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

உயர்நீதிமன்றஉத்தரவுபடி மதுரை,திண்டுக்கல், தஞ்சாவூர்மாவட்டங்களில் சில அரசு மற்றும்உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைபள்ளி களில் வழக்கறிஞர் கமிஷனர்கள்ஆய்வு செய்தனர்.

அவர்கள், 'மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறைகள், தண்ணீர் வசதி ஏற்படுத்தவேண்டும். பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகள் மோசமானநிலையில் உள்ளன. போதிய துப்புரவுபணியாளர்களை நியமிக்க வேண்டும்' என்பன உட்பட பரிந்துரைகளைஅறிக்கையாக தாக்கல் செய்தனர்.

'இக்குறைகளைநிவர்த்தி செய்யவும், பள்ளிக ளில் அடிப்படைவசதிகளை மேம்படுத்தவும் எத்தகைய உறுதியான நடவடிக்கை

மேற்கொள்ளப்படும்என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறைமுதன்மைச் செயலர் திட்ட அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்' எனநவ.,2ல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நவ.,11ல் முதன்மைச் செயலரின்அறிக்கையை படித்த நீதிபதிகள், 'அறிக்கைஒரே கதையாக உள்ளது. திட்டம்மற்றும் அதை நிறைவேற்று வதற்கானநிதி ஆதாரம் பற்றி எதுவும்குறிப்பிட வில்லை. அதை நிராகரிக்கிறோம்' என அதிருப் தியை வெளிப்படுத்தினர்.

மேலும்நீதிபதிகள் கூறுகையில், 'பள்ளிகளில் கழிப்பறைஅமைக்க தேவையான நிதியை எவ்வாறுபெறுவது, எவ்வளவு காலத்திற்குள் நிறைவேற்றுவதுஎன்பது பற்றிய தெளிவான, திடமானதிட்ட அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர் நவ.,18ல் தாக்கல்செய்ய வேண்டும்' என்றனர்.

நீதிபதிகள்எஸ்.நாகமுத்து, டி.கிருஷ்ணகுமார் கொண்டஅமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. முதன்மைச் செயலரின் அறிக்கையை அரசு கூடுதல் தலைமைவழக்கறிஞர் (ஏ.ஏ.ஜி.,) சமர்ப்பித்தார். இதை படித்து அதிருப்திஅடைந்த நீதிபதிகள், 'அறிக்கை திருப்தி அளிக்கும்வகையில் இல்லை,' என்றனர்.
மேலும்நடந்த விவாதம்:

நீதிபதிகள்: அரசுப் பள்ளிகளுக்கு மின்கட்டணமாக (சிறப்பு பயன்பாடு) யூனிட்டிற்கு5.75 ரூபாய் வசூலிக் கப்படுகிறது. இதுவணிக பயன்பாட்டிற்குரிய கட்டணத்தைவிட அதிகம். இதற்கு அரசுபோதிய நிதி ஒதுக்குகிறதா?

அரசுப்பள்ளிகளில் 28 லட்சத்து 25 ஆயிரம் மாணவர் கள்படிக்கின்றனர். 20 பேருக்கு ஒன்று வீதம் ஒருலட்சத்து 41 ஆயிரத்து 288 கழிப்பறைகள் தேவை. ஆனால் சிறுநீர்கழிக்கக்கூடிய 66 ஆயிரத்து 610 கழிப்பறைகள்தான் உள்ளன. எவ்வளவு காலத்திற்குள் தேவையான கழிப்பறைகளை அரசுஅமைக்கும்?
ஏ.ஏ.ஜி: இரண்டுஆண்டுகளுக்குள்அமைக்கப்படும்.

நீதிபதிகள்: 'அரசு மற்றும் உதவி பெறும்பள்ளி களில் போதிய,முழுமையானகழிப்பறைகள் உள்ளன. நபார்டு திட்டம்மற்றும் தொண்டு நிறு வனங்கள்மூலம் கூடுதல் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன' என பள்ளிக் கல்வித்துறைஇயக்குனர்,

இந்நீதிமன்றத்தில்ஏற்கனவே தவறான அறிக்கை தாக்கல்செய்துள்ளார்.

இந்நீதிமன்றத்தைதவறாக நடத்தியுள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும்வகையில்
உள்ளது.இது பற்றிய ஆய்வுசெய்யவே இந் நீதிமன்றம் வழக்கறிஞர்களை, கமிஷனர்களாக நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இயற்கை உபாதையை போக்க, இன்னும்மரத்திற்கு அடியில் மாணவிகள் ஒதுங்கும்நிலை உள்ளது.

இந்நீதிமன்றம், 'அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறைஏற்படுத்த வேண்டும்.பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்கவேண்டும். தமிழக அரசு அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்' என2014 ல் உத்தர விட்டது. 'பள்ளிகளில்கழிப்பறை வசதி ஏற்ப டுத்தவேண்டும்' என உச்சநீதி மன்றம்2012 ல்
உத்தரவிட்டது.

 சுனாமி மற்றும் வெள்ளபாதிப்பின்போது அரசு உடனடி நிவாரணநடவடிக்கை மேற்கொள்கி றது. இவ்விவகாரத்தில் போர்க்காலஅடிப்படை யில், நடப்பு நிதியாண்டிலேயேஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?

ஏ.ஏ.ஜி.,: நடப்புநிதியாண்டில் சாத்தியமில்லை. அடுத்த நிதியாண்டில் 75 ஆயிரம்கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 22 ஆயிரம் கழிப்பறைகள் கட்டநிதி ஒதுக்கப் பட்டு, பணி நடக்கிறது.


நீதிபதிகள்: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நவ.,22 ல்தெளிவானஅறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறுவிவாதம்நடந்தது.

ஆசிரியர்களை தக்க வைக்க பள்ளிகளில் வட மாநில சிறுவர்கள்

அரசு மற்றும் உதவி பெறும்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது. ஆங்கில வழி கல்விஆரம்பித்ததை தொடர்ந்து, அரசு பள்ளிகள் ஓரளவுமாணவர்களை தக்க வைத்து கொண்டன. உதவி பெறும்
பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி சுய நிதிபிரிவாகத்தான் செயல்பட முடியும் என்பதால், இப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் மாணவர்கள் குறைவால், உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

மாணவர்கள்எண்ணிக்கை குறையும் பட்சத்தில், உபரி ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், ஆசிரியர்களைதக்க வைக்கவும், பள்ளி நிர்வாகங்கள் பல்வேறுநடைமுறைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்உள்ளன.



இந்நிலையில்தேவகோட்டையில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்வதற்காக 14 பீகார் மாநில சிறுவர்கள், காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வந்துஇறங்கினர். அவர்களை அழைத்து செல்லபள்ளி நிர்வாக தரப்பில் யாரும்வராததால், போலீசார் அவர்களை மீட்டு விசாரணைநடத்தினர்.

போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: தேவகோட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவேபீகார் மாநிலத்தை சேர்ந்த சில மாணவர்கள்படிக்கின்றனர். இவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திகொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதி அமைக்கஎவ்வித அனுமதியும் இல்லை. அவ்வாறு தான்இவர்களையும் பள்ளியில் சேர்க்க அழைத்து வந்துள்ளனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பில், நாங்கள் யாரையும் அழைத்து வர சொல்லவில்லைஎன்கின்றனர். இந்த மாணவர்களை அழைத்துவந்தது அவர்களது பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. பெற்றோரைதொடர்பு கொள்ள

முயற்சித்துவருகிறோம், என்றனர்.

பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி

பள்ளிகளில்தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை
நடத்த ஆகும் நிதிச்செலவுகளை யார் ஏற்பது என்பதில்ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.


அனைத்துதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும்1 முதல் எட்டாம் வகுப்பு வரைமாணவர்களுக்கு தினந்தோறும் ஒரு பாடத்துக்கு தேர்வுநடத்த வேண்டும் எனவும், இதற்கான வினாத்தாள்தமிழகம் முழுமைக்கும் சேர்த்து சென்னையில் தயாரிக்கப்பட்டு உதவி தொடக்கக் கல்விஅலுவலகங்கள், குறுவள மையங்கள் மூலமாகபள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அண்மையில் தமிழகபள்ளிக் கல்வித் துறையில் அறிவித்துள்ளது.


இந்தத்தேர்வுகள் நவம்பர் 14 முதல் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு இத்தேர்வுகளை நடத்தி, அதன் நகலைஉயர் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்யும்போதுகாண்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதைத் தொடர்ந்து அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்அலுவலகங்களில் அனைத்து தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்டது.அதில், அனைத்து குறுவளமையப் பொறுப்பாளர்களுக்கும் அந்த வாரத்துக்கான வினாத்தாள்கள், ஒரு குறுவள மையத்துக்கு ஒன்றுவழங்கப்பட்டு அவற்றை நகல் எடுத்துஅவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளுக்குஅளித்து மாணவர்களுக்கு தனித்தனியாக தேர்வுகளை நடத்த வேண்டும்என அறிவுறுத்தப்பட்டது.


குறுவளமையங்களின் கீழ், பத்துக்கும் மேற்பட்டபள்ளிகள் உள்ள நிலையில், அதன்பொறுப்பாளர்களிடம் வினாத் தாள்களைப் பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர்கள் அதைநகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க பள்ளியில் 50 மாணவர்கள்எனும் நிலையில் தினமும் இரு பக்கம்கொண்ட அந்த வினாத்தாளை நகலெடுத்துவழங்க ஆகும் செலவை யார்ஏற்பது எனக் கேட்கின்றனர்.


இதுகுறித்துஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பள்ளியின் கரும்பலகையில் எழுதித் தேர்வுகளை நடத்துங்கள்என கல்வித் துறை அலுவலர்கள்தெரிவித்துள்ளனர்.ஆனால் ஒரு பள்ளியில்ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள நிலையில், இருஆசிரியர்கள் பள்ளிகளில் இரு கரும் பலகைகளில்ஐந்து வகுப்புகளுக்கான வினாக்களை எழுதித் தேர்வு நடத்துவதுஎப்படி எனக் கேட்கின்றனர். ஒருசில பள்ளிகளில் ஒரே வகுப்பில் படிக்கும்மாணவர்களை குழுவாக அமரச் செய்துஒருவரிடம் வினாத்தாளை அளித்து, அதை மற்ற மாணவர்கள்பார்த்து எழுதிக் கொள்ளச் செய்கின்றனர்.இதனால் பள்ளிகளில் உள்ளமாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே வினாத்தாள்களைதயாரித்து வாரந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கினால் ஆசிரியர்கள், தேர்வுகளை நடத்த எளிதாகும் என்கின்றனர்.


இதுகுறித்துபெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், இத்திட்டம் அருமையானத் திட்டம் எனவும், தனியார்பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகளைஅரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் தமிழக அரசின் இத்திட்டம்பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தனர்.எனவேஅரசு உயர் அதிகாரிகள் உடனடிநடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கான பொருளாதாரசுமையைக் குறைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள்வலியுறுத்துகின்றனர்.

CPS : ஓய்வூதிய நிபுணர் குழு பதவிக்காலம் நீட்டிப்பு

ஓய்வூதியநிபுணர் குழுவின் பதவிக்காலத்தை, தமிழக அரசு நீட்டித்துள்ளது. கடந்த, 2003 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள, புதிய
ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரசு ஊழியர்கள் பல போராட்டங்கள் நடத்தினர். இதை சமாளிக்க, தமிழக அரசு நிபுணர்குழுவை அமைத்தது. அந்த குழு, அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின்பிரதிநிதிகளிடம், செப்டம்பரில் கருத்து கேட்டது.

இக்குழுவின்பதவிக்காலம், செப்., 26ல் முடிந்தது. குழுவின்பணிகள் முடியாத நிலையில், பதவிக்காலம்நீட்டிக்கப்படவில்லை. இது குறித்து, நமதுநாளிதழில், சில நாட்களுக்கு முன்செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, நிபுணர்குழுவின் பதவிக்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் நிபுணர் குழுவின் காலம் நீட்டிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர்குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின்காலம் டிசம்பர் 26-ஆம் தேதி வரைநீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கே.சண்முகம் பிறப்பித்தார்.
இதுகுறித்துஅவர் வெளியிட்ட உத்தரவு:- தமிழகத்தில் பழைய
ஓய்வூதியத் திட்டத்தைநடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை குறித்துஆராய தமிழக அரசின் சார்பில்நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்றஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர், நிதித் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும்நபர், சென்னை பொருளாதார பள்ளியின்பேராசிரியர் பிரஜேஷ் சி.புரோகித், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின்முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர்உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக்குழுவினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்எனப் பல்வேறு சங்கங்களின் கருத்துகளைமூன்று கட்டங்களாகக் கேட்டு அறிந்தது. இந்தகருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த செப்டம்பர் 15, 16 மற்றும்22 ஆகிய தேதிகளில் நடந்தன. இந்த நிலையில், நிபுணர் குழுவின் காலம் கடந்த செப்டம்பர்26-ஆம் தேதியுடன் முடிந்தது. ஆனாலும், நிபுணர் குழு தனதுஇறுதி செய்யப்பட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் வகையில் அதனுடைய காலக்கெடுமேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 26-ஆம் தேதி வரைநிபுணர் குழு செயல்படும் என்றுதனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

EMIS Website disabled up to 1/12/2016

பள்ளிக்கல்வி மேல்நிலை முதுகலையாசிரியர் பதவி உயர்வு விகிதாச்சாரா அடிப்படையில் பதவி உயர்வு வழங்குதல்

People started receiving notice from income tax on cash Deposit

போர்க்கால அடிப்படையில் ஏடிஎம்கள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது - அருண் ஜெட்லி பேட்டி !!

புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக ஏடிஎம்களை மறுசீரமைப்பு செய்யும் பணியானது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறிஉள்ளார். நிதிமந்திரி அருண் ஜெட்லி பேசுகையில்,புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக ஏடிஎம்களை

மறுசீரமைப்பு செய்யும் பணியானது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.கடந்த சிலநாட்களாக நாங்கள் புகார்களை பெற்றுவந்தோம், ஆனால் இப்போது புகார்களின் எண்ணிக்கையானது குறைந்து உள்ளது. ஏனென்றால் நாங்கள் எந்தஒரு இடையூறும் ஏற்பட கூடாது என்று உள்ளோம்.கடந்த 7 நாட்களில் கோடிக்கணக்கான பழைய நோட்டுகளை தீர்க்கப்பட்டதில் வங்கி ஊழியர்களின் பாராட்டத்தக்க பணிக்காக அவர்களை பாராட்ட விரும்புகின்றேன். கடந்த 7 நாட்களில் வங்கிகள் கூட்டத்தை குறைத்து உள்ளன. இதில் பீதியடைய எதுவும் தேவையில்லை. இதில் சிலர் சிரமத்தை எதிர்க்கொண்டது மிகவும் துரதிஷ்டவசமானது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம், இது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். பெரும்பாலான மாநில முதல்-மந்திரிகள் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர், அவர்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி, அவர்களை நான் பாராட்டுகின்றேன். இருப்பினும் சில முதல்-மந்திரிகள் பீதியை ஏற்படுத்துகின்றனர். ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் ஓடுகின்றன என்று நான் நினைக்கின்றேன். தேசிய கட்சியான காங்கிரஸ் இந்நகர்விற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும், மாறாக அவர்கள் தடை ஏற்படுத்துகின்றனர், பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். கருப்பு பணம் ஒழிப்பு மற்றும் பயங்கரவாத நிதியை ஒழிக்கும் நடவடிக்கையை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சிக்கான நன்மை என்ன?. விவாதத்திற்கு யார் பதிலளிக்க வேண்டும் என்பது அரசை சார்ந்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதை திரும்பப்பெறும் கேள்விக்கே இடம் கிடையாது என்று கூறினார்.

தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியரின்,ஆசிரியர்கள் தற்போதைய பணிகள் !!

குடிநீர் வசதி ஏற்படுத்துதல்

கழிவறை பயன்படுத்த மாணவர்களிடம்  எடுத்துக்கூறுதல்

அறிவியல் கண்காட்சிக்கு உபகரணங்கள் தயாரித்தல் கண்காட்சி நடத்துதல்

CCE WORK SHEET திங்கள் முதல் வெள்ளிவரை 1-8 வகுப்புகளுக்கு தேர்வு நடத்துதல் மதிப்பிடுதல்


குறைதீர் கற்பித்தல்

SG.MG செலவுகளுக்கு இம்மாதத்திற்குள் பணத்தை வங்கியிலிருந்து வெளியே எடுத்து செலவு செய்தல்

SABL.SALM கற்றல் -கற்பித்தல் பணிகளைச் செம்மையாகச்செயதல்

EMIS பணிகளை முழுமைப்படுத்துதல்

முதல் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்கள் பெறறு EMIS உடன் இணைத்தல்

பிற மாணவர்களின் விடுபட்ட பதிவுகள் நவம்பர்.19க்குள் முடித்தல்

நிரப்பப்பட்ட.DISE படிவத்தின் குறைகளைக்களைதல்

SMC VEC PTA MEETING.
பதிவேடுகளை நாளது தேதிவரை நிறைவு செய்தல்

பொம்மலாட்டப் பயிற்சிகளை மெருகூட்டுதல்.

CCE முறைப்படி
FA(a) FA(b) மதிப்பீடு செய்து பதிவு செய்தல்.

வருகின்ற சனிக்கிழமை நவம்பர்.26 டிசம்பர்.3
CRC யில் புத்துணர்ச்சியுடன் கலந்து கொள்ளுதல்.

சிறப்பு பார்வைக்கு ஆவணங்களையும் மாணவர்களையும் தயார்நிலையில் வைத்திருத்தல்

மின்கசிவு சரி செய்தல்

இடிந்த கட்டிடங்கள் ஆய்வு செய்தல்

மழைகால விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

அடுத்த நிலை தேர்விற்கு தயார் செய்தல்

இரண்டாம் பருவத் தேர்வுக்கு தயார்நிலைப் படுத்துதல்
பருவத்தேர்வு நடத்துதல்

மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் பாட ஏடுகள் பெற தேவைப்பட்டியல் தயாரிப்பு

இரண்டாம் பருவ மதிப்பீடு இறுதி செய்தல் உரிய ஆவணங்களில் பதிவு செய்தல்...

கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்

விடுமுறை கால பணிகள் வழங்குதல்

இந்த ஆண்டு தங்களது வருமானவரிப் படிவங்களை தயாரித்தல்

தற்போதே எல்ஐசி பணம் கட்டுதல்
வீட்டுக்கடன்களுக்கான
அசல் வட்டி செலுத்திய சான்று பெறல்

புத்தாண்டில் புதுப் பொலிவுடன் மூன்றாம் பருவத்தினை தொடங்குதல்.

CCE 1 TO 10 STD 2 WEEK WORKSHEET TAMIL QUESTION DOWNLOAD !!

CCE 1 TO 10 STD  2 WEEK WORKSHEET  TAMIL QUESTION DOWNLOAD...https://app.box.com/s/yvi3tpjuonlzxvk06oeodbbypw0nbaym

CCE 1 TO 10 STD 2 WEEK WORKSHEET MATHS QUESTION DOWNLOAD !!!

CCE 1 TO 10  STD 2 WEEK WORKSHEET MATHS QUESTION DOWNLOAD....https://app.box.com/s/8t83v0lj8p19e9ygfopzpqigbwp0yqbe

யுபிஎஸ்சி (UPSC) பணியில் உள்ள 463 காலியிடங்களுக்கான தேதி அறிப்பு !!

யுபிஎஸ்சி (UPSC) பணியில் உள்ள 463 காலியிடங்களுக்கான தேதி அறிப்பு.இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதிங்க.

*Employment Type:* Central Govt Jobs

*Click here:* https://www.yoyojobs.com/upsc-recruitment-2016-463-combined-defence-services-examination-cds-2017-posts-apply-online/


*கல்வி தகுதி:* Degree

*காலியிடங்கள்:* 463

*தேர்வு செய்யப்படும் முறை:* Written examination,Interview

*Application Form:* https://goo.gl/15rks9

*கடைசி தேதி:* 02-12-2016

*இந்த தகவல் உங்களுக்கு பயன்படவிட்டலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிபாக SHARE செய்யுங்கள்.*

ரூபாய் நோட்டை மாற்ற கட்டுப்பாடு ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!!

பழைய ரூபாய் நோட்டை மாற்ற, புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

என்ன பிரச்னை?

அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், கோர்ட் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இதேநிலை தொடர்ந்தால், தெருக்களில்கலவரம் தான் நடக்கும்.

தற்போது பிரச்னை தீவிரமாக உள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை தான் மத்திய அரசு வாபஸ் பெற்றது. ஆனால் ரூ.100 நோட்டுக்களுக்கு என்ன ஆனது? கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, மக்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றும் அளவு ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன பிரச்னை நிலவுகிறது. பணம் அச்சிடுவதில் பிரச்னை உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

நிவாரணம்:

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், பணம் அச்சிடுவதில் மட்டும் பிரச்னை இல்லை. இந்தியா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான வங்கிக்கிளைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது. ஏ.டி.எம்., மையங்கள் மறு சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. விவசாயிகள், வர்த்தகர்கள், திருமணம் ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு முடிவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!!!

கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலில் இடம்பெற்ற, 43 பேரின் நியமனத்தை ரத்து செய்த, மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
மோதல்:

ஐகோர்ட்களில் காலியாக உள்ள நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட்களில் நீதிபதிகளாக நியமிக்க 77 பேரது பட்டியலை சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 34 பேரது பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 43 பெயரை திருப்பி அனுப்பியது. இதனை கடந்த 11ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தாக்கூர் கூறுகையில், 43 நீதிபதிகள் பெயரை நிராகரித்த மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. அவர்களின் பெயர்களை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி, இந்த பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

பணபரிவர்த்தனைக்கு கறும்புள்ளி வேண்டாம்: தேர்தல் ஆணையம் கடிதம்!

செல்லாத நோட்டாக அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது மீண்டும் மீண்டும் நோட்டுகளை மாற்ற வருகிறவர்களுக்கு கையில் கறும்புள்ளி வைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையம் மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம்

எழுதியுள்ளது. கடந்த புதன்கிழமை (16-11-2016) அன்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ், வங்கிகளில் ரூபாய் 500, 1000 நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு விரலில் கறும்புள்ளி வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். சிலர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் நோக்கோடு, அப்பாவி மக்களை குழுக்களாக ஒருங்கிணைத்து, வங்கியின் ஒரு கிளையிலிருந்து மற்ற கிளைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர் என அமைச்சகத்து புகார்கள் வருகின்றன. இதனால், சில மக்களால் மட்டுமே பணத்தை மாற்ற முடிந்தது. இதன் காரணமாகவே, ‘கறும்புள்ளி’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு இடது கையில்தான் மை வைக்கப்படுகிறது, ஆனால், வங்கியில், வலது கையில்தான் கறும்புள்ளி வைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்த நடவடிக்கையை பலரும் வன்மையாக விமர்சித்து இருக்கின்றனர். மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி, ட்விட்டரில் தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார். ‘அரசு தன் சொந்த மக்களையே நம்பாதது தான் இதிலிருந்து தெரிகிறது’ என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இவ்வாறு விரலில் கறும்புள்ளி வைப்பது குறித்து, தேர்தல் ஆணையத்தின் கருத்து என்னவாக இருக்கும் என்பது பற்றியும், மம்தா பானர்ஜி எச்சரித்து இருந்தார். நவம்பர் 19ஆம் தேதி, அருணாச்சலப்பிரதேசம், அச்ஸாம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் கைகளில் கறும்புள்ளி வைக்கும் முடிவு தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இடைஞ்சலை உருவாக்கும். ஆகவே கைகளில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

காவல் நிலையங்களில் பதிவாகும் FIR. இனி பதிவிறக்கம் செய்யலாம். ADGP சீமா அகர்வால் அறிக்கை...!!!

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் !!

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியால்

இணையதளம் கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்துக்கு அவசியமானதாகவும், தவிர்க்க இயலாததாகவும் இணைய வழி கல்வி இருக்கிறது. 2017 - 2018ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள 3,354 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வகுப்பறைகளை நேற்று அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் கடியம் ஸ்ரீஹரி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தரக ராம ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பஞ்சாரா மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பேசிய கடியம் ஸ்ரீஹரி, “தெலங்கானா அரசு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றல் திறனை மேம்படுத்தவுள்ளது. எனவே வரும் காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட பெகா சிஸ்டம்ஸ் நிறுவன இயக்குநர், "இத்திட்டம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். இதன் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறை எளிமையாகும்.

கடந்த மாதம், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.